Author: admin

  • பிள்ளைகள் செய்துபார்க்க எளிய விஞ்ஞான சோதனைகள்!

        எனது பள்ளிப்பருவத்தில் பாடங்கள் தவிர்த்த மற்ற விஷயங்களில் ஆர்வம் அதிகமிருந்தது. அதற்காக வாங்கிய அடிகளும் அதிகம்தான். எந்த விளையாட்டுப்பொருளை எடுத்தாலும் அதனைப் பிரித்து, ஆராய்ந்து மீண்டும் அதேபோல மாட்டிவிடுவேன். மீண்டும் சரியாக பொருத்தமுடியாதபோது, உதைபடுவேன். செய்துபார் என்று எந்த நூலில் படித்தால் அதனை அப்படியே செய்துபார்க்கும் பழக்கமும் இருந்தது எனக்கு! ஒருமுறை எங்கள் ஊருக்கு கியாஸ் பலூன் விற்பவர் ஒருவர், மூன்று சக்கர ட்ரைசைக்கிளில் ஓர் உருளையைக்கட்டிக்கொண்டுவந்து, பலூனில் கியாஸ் நிரப்பி விற்பனை செய்தார்.…

  • பதின்ம வயதினருக்கான நாவல்!

    பதின்ம வயதினர் படிக்க ஏதுவான புனைவு நூல்கள் தமிழில் வருவதில்லை என்ற குறை எனக்கு எப்போதும் உண்டு. ஒன்று அவர்கள் சிறுவர் நூல்களைப் படிக்கவேண்டும் இல்லையெனில் பெரியவர்கள் நூலினை படிக்கும் நிலைதான் உள்ளது. இதுபற்றி தோழி ஒருத்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மேலை நாடுகளில் பதின்ம வயதினருக்கான புவைவெழுத்துக்கள் அதிகம் வாசிக்கக்கிடைக்கின்றன என்றார். எனக்கு அந்த ஏக்கம் இங்கே எப்போதும் உண்டு. ஆனால் இக்குறையை போக்கும்படியாக, சமீபத்தில் பதின்ம வயதினருக்கான ஒரு கதையை வாசித்தேன். கொ.மா.கோ. இளங்கோ எழுதிய, ’சஞ்சீவிமாமா’என்ற…

  • உலகம் கொண்டாடும் குட்டிக் கடற்கன்னி கதை தமிழில்!

    ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் – சிறுவர் இலக்கிய உலகில் பெரிய அளவில் போற்றப்படும் முக்கியமான படைப்பாளி. இவரது பல கதைகள் உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கூடவே அனிமேஷன் படங்களாகவும், சினிமாகவும் எடுக்கப்பட்டுள்ளன. சிவரது படைப்புகளில் எல்லோரும் மறக்காமல் சொல்லுவது குட்டிக்கடற்கன்னி என்ற சிறிய நாவலைத்தான். இந்த உலகில் கடலைக்கண்டு வியக்காதவர்கள் இருக்க முடியாது. அந்தக்கடலில் நுரை பொங்கும் அலைகளையும் பார்த்திருப்போம். கடலின் நுரைகளுக்குப் பின் ஒரு கதை இருக்கிறது. அதுவொரு குட்டிக் கடற்கன்னியின் வாழ்க்கைக்கதை. கடலுக்குள் இருக்கும்…

  • பால்யத்தை உயிர்ப்பித்த பதின்

      “புத்தகம் வாசிக்கிறதால என்ன பாஸ் கிடைக்கும்?” என்று ஒரு நண்பர்,  பல ஆண்டுகளுக்கு முன் கேட்டார். அதே மாதிரியான கேள்வியை பல சந்தர்ப்பங்களில் வேறு சிலரிடமும் எதிர்கொண்டிருக்கிறேன். இதற்குப் பதில் என்னிடம் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அப்போதைய மனநிலையைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். இக்கேள்வி பொதுவான வாசிப்பு பற்றியது என்பதால் அப்படி. குறிப்பிட்ட நூல் பற்றி என்றால் அதற்கென தனித்தனி பதில் சொல்ல முடியும். அப்படியொரு நூலைப்பற்றித்தான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய…

  • இளையோருக்கான தொடக்க நூல்

    பதிம வயதை அடையும் பிள்ளைகளுக்கு நான் சொல்லிக்கொடுக்கவேண்டிய விஷயங்களின் பட்டியல் மிகவும் நீண்டது. அறவுணர்ச்சியை அடிப்படையானது என்றாலும் கூடவே, இச்சமூகத்தின் மீது அக்கறைகொண்ட குடிமகனாக நம்பிள்ளை வளரவேண்டும். நல்ல மனிதனாக வளருவதற்கு, அவர்களோடு நாம் உரையாடலைத்தொடங்க இந்த வயது சரியானது. மொட்டைத்தாத்தா குட்டையில் விழுந்தார் என்று பொருளற்று எதையும் தொடங்கிவிடுவதை விட, மேலானது ஒரு நூலை நாம் வாசித்து, பின் அவர்கள் கையில் அதனைக்கொடுத்து, அதன் வழியே உரையாடலைக் கொண்டுபோவதென்பது சிறப்பு. அந்த வகையில் ச. தமிழ்ச்செல்வன்…

  • 30. ஆட்டிசம்: சிறப்புக்குழந்தையின் பெற்றோரே.. ஒரு நிமிடம்!

    “அடேய் பசங்களா பரிட்சை மட்டுமே உங்க வாழ்க்கை மாற்றாதுடா, போய் ஜாலியா பரிட்சை எழுதிட்டு வாங்கடா” இவை +2 தேர்வுக்கு முன்தினம் தூத்துக்குடி அருகே இருந்த ஏதோ ஒரு தேனீர் கடையில் எழுதப்பட்ட வாசகம். இவற்றை இப்பொழு பார்க்கும் பொழுது உங்களிடம் சொல்லிவிட தோன்றுவது இதுதான் ” அன்பிற்கினிய பெற்றோர்களே சிகிச்சை என்பதும், பயிற்சிகள் என்பதும், பள்ளி என்பதும் மட்டுமே உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடிய விஷயங்கள் இல்லை, உங்கள் மனமகிழ்ச்சியே அவற்றை தீர்மானிப்பவை. ஆக உங்கள்…

  • கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு

    சில நாட்களுக்கு முன் என் தோழி ஒருத்தியைப் பார்க்க அவர் இல்லம் போய் இருந்தோம். ‘உன் பையனுக்கு ஸ்கூல் லீவு விட்டுட்டாங்களா? ஊருக்கு எங்கேயும் போகலையா?’ என்று கேட்டார். ”இல்லை. வருட இடையில்தான் சொந்த ஊருக்கு போய் வந்தோம். இந்த ஆண்டு போகமுடியுமான்னு தெரியலை. அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கு!” என்றேன். ‘பேசாம எதாவது சம்மர் கேம்ப்ல போட்டு விட்டுங்க’ என்றார். அப்போதுதான் அவரின் மகன் நினைவுக்கு வந்தான். ”எங்கே உன் பையனைக் காணாம்” என்று…

  • ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள்- 5 (ஆதித்யா மோகன்)

    ஆதித்யாவின் இசைக்கு ஆட்டிசம் தடையில்லை! ஆங்கிலத்தில்: மிருணாளினி சுந்தர்.                       தமிழில்: ரமேஷ் வைத்யா.   ஆதித்யா மோகன் சிறு பிள்ளையாக இருந்தபோது எதையும் உணரத்தெரியாது. “நான் அவன் அம்மா என்பதையே அவன் புரிந்துகொண்டானா என்பது எனக்குத் தெரியாது” என்கிறார் ஆதித்யாவின் அம்மா ஜெயஸ்ரீ. அவரே தொடர்ந்து, “அவனால் பேச முடியவில்லை. எதையும் கிரகித்துக்கொள்ள முடியவில்லை. எப்போதும் பதற்றமாகவே இருப்பான். அவன் ஒரு…

  • பொறாமைப்படு!

    பொறாமையின் பெருமையைக் குறித்து நீங்கள் எப்போதேனும் எண்ணிப் பார்த்ததுண்டோ? எனக்கும் இது வரையில் அது தெரியாமலேதான் இருந்து வந்தது, சில தினங்களுக்கு முன்பு அதன் பெருமை எனக்குச் சட்டென்று புலனாயிற்று பொறாமைப்படு’ என்னும் சூத்திரத்தில் நான் வாழ்க்கையில் வெற்றியடையும் இரகசியம் அடங்கியிருக்கிறது. மேற்படி மகா ரகசியத்தை நான் எப்படிக் கண்டு பிடித்தேனென்று சொல்கிறேன் கேளுங்கள். ஒரு சமயம் நான் என்னுடைய சொந்தக் கிராமத்திற்குச் சென்றேன். நான் இறங்க வேண்டிய ஸ்டேஷனுக்கு முதல் ஸ்டேஷனில் எனக்குத் தெரிந்த ஒரு…

  • சிறார் இலக்கியம்: எதிர்காலம்

      சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரும் படைப்பாளிதான். என் கையில் இருந்த புத்தகப்பையை வாங்கிப் பார்த்தார். அதன் உள்ளே ஏழெட்டு சிறார் இலக்கிய புத்தகங்கள் இருந்தது. “இதையெல்லாம் விட்டுட்டு வந்து பலவருசம் ஆச்சு.. இன்னுமா இதையெல்லாம் படிச்சிகிட்டு இருக்க?” என்று கேட்டார். “வாசிப்புக்கு ஏதுப்பா எல்லை. எல்லாத்தையும் தான் வாசிக்கிறேன்” என்று சொன்னேன். “எப்படித்தான் இன்னும் இதையெல்லாம் படிக்கிறியோ?” என்று சலித்துகொண்டார். நல்ல வேளை சமீபத்தில் வெளிவந்த என்னுடைய சிறார் நாவல் பற்றி அவருக்கு ஏதும்…