Author: admin

  • சாமியாட்டம் – கேபிள் சங்கர்

    சாமியாட்டம் மூத்த பதிவரும், பத்திரிக்கையாளருமான யெஸ்.பாலபாரதியின் முதல் சிறுகதை தொகுப்பு இந்த சாமியாட்டம். இதற்கு முன்னால் இவர் அரவாணிகளைப் பற்றிய நாவல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். மொத்தம் பன்னிரெண்டு சிறுகதைகளை அடங்கிய இந்த தொகுப்பு 2003 –2011 வரை இவர் எழுதிய சிறுகதைகளின் மொத்தமாம்.  உட்காந்து எழுதியிருக்காரு போல. பாலபாரதியுடன் பேசி பழகியவர்களுக்கு, கதை வாசிக்கையில் அவரின் குரலில் கேட்பதை தவிர்க்க முடியாது. அவ்வளவு கம்பீரமான குரல் மனுஷனுக்கு. சிரித்தால் ப்ரம்ம ராட்ஷசன் போலச் சிரிப்பாரு. சரி.. நாம…

  • கோட்டிமுத்து – மா.சிவக்குமார்

    கோட்டிமுத்து (சாமியாட்டம் – யெஸ் பாலபாரதி) பாலபாரதியின் சாமியாட்டம் சிறுகதைத் தொகுப்பில் வெளியாகியுள்ள ஒவ்வொரு சிறுகதையைப் பற்றியும் தனித்தனியாக விமர்சனம் எழுதுவதாக உத்தேசம். முதலில் கோட்டி முத்து. 1. கோட்டி முத்து நமக்கு அன்னியமான ஒரு கதாபாத்திரம் இல்லை. நமது கிராமத்தில் நாம் பார்த்த வேலையாள் ஒருவரை மனதில் கொண்டு வருகிறது இந்த எளிய மொழியிலான பாத்திரப் படைப்பு. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் அல்லது அன்னா கரனீனா அல்லது சிறுகதைகளைப் படிக்கும் போது பாத்திரங்களை உயிருள்ள மனிதர்களாக…

  • பாரதியின் ஒரு பாட்டு -மா.சிவக்குமார்

    பாரதியின் ஒரு பாட்டு (சாமியாட்டம் – பாலபாரதி) முதல் கதை – கோட்டி முத்து இரண்டாவது கதை – பாரதியின் ஒரு பாட்டு. 1. சிறு சிறு சம்பவங்களின் மூலம் சிறு சிறு விபரங்கள் மூலம் ஜெயாவைப் பற்றிய முழுமையான சித்திரம் கிடைக்கிறது. ஜெயா படிப்பதை முற்றிலும் உள்வாங்கிக் கொண்டு நடைமுறையுடன் பொருத்திப் பார்க்கும் இயல்புடையவள் என்று தெரிகிறது. ஜெயா ஒன்பதாவது படித்தாலும் வளர்ந்த பெண் என்று தெரிந்து விடுகிறது. வயதுக்கு வந்த பிறகு போராடி தந்தையின்…

  • சாமியாட்டம் – நூல் அறிமுகம் – விழியன்

    சாமியாட்டம் – நூல் அறிமுகம் பாலபாரதி என சிலராலும் தல என பலராலும் அழைக்கப்படும் எஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ சிறுகதை தொகுப்பு வாசித்து முடித்தேன். வழக்கமாக சிறுகதை தொகுதிகள் வாசிப்பது வேகமாக சென்றுவிடும். ஆனால் இந்த தொகுப்பை அத்தனை வேகமாக வாசிக்கமுடியவில்லை. காரணம் அந்த எழுத்து ஏற்படுத்திய தாக்கமாக இருக்கலாம். ஒவ்வொரு கதையை கடக்கையிலும் ஆழ்மனதில் புதைந்திருந்த பல கதைகளையும் நினைவுகளையும் மீட்டு வந்தது என்பதே உண்மை. பாலபாரதியை பல வருடம் முன்னர் இணையத்தில் அறிமுகம். நேரில் இதுவரை 4-5…

  • நம்ம ஊர் பேய், வெள்ளைக்கார பேய் – ?!

    நம்மவர்கள் அனேகரிடமும் ஒரு பேய் கதைகள் இருக்கும். என்னிடமும் ஏராளமான கதைகள் உண்டு. ரத்தக்காட்டேரி, தலை இல்லா முண்டம் (முண்டம் என்றாலே தலை இல்லாததுன்ன தானே பொருள்?!), கொள்ளி வாய் பிசாசு தொடங்கி, கிணற்றில் விழுந்து உயிர் நீத்த காந்திமதி அக்கா, மரத்தில் தொங்கிய செந்தில் அண்ணன் என ஊருக்கு ஊர் விதவிதமான சம்பவங்களும், கதைகளும் இருக்கும். ஆனால் மற்றவர்களின் கதைகளில் வரும் படியான கொடுரமான பேய் எதையும் நான் பார்த்ததில்லை. சிறுவயதிலிருந்தே அப்படி வளர்க்கப்பட்டது ஒரு…

  • வாசிப்பவரை விசுவாசிக்கும் எழுத்து – அகநாழிகை பொன். வாசுதேவன்

    வாசிப்பவரை விசுவாசிக்கும் எழுத்து : யெஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்‘ – அகநாழிகை பொன். வாசுதேவன் யெஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்‘ என்ற இத்தொகுப்பில் மொத்தம் பனிரெண்டு சிறுகதைகள் உள்ளன. இக்கதைகள் பத்திரிகைகளிலும், இணைய இதழ்களிலும் வெளியானவை. திருநங்கைகள் தொடர்பான ஆர்வம் காரணமாக நான் பல ஆண்டுகளாக கூவாகம் சென்று அவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து வந்திருக்கிறேன். இதன் தொடர்ச்சியாக வாசிப்பில் எனக்குக் கிடைத்ததுதான் எஸ்.பாலபாரதி எழுதிய ‘அவன் – அது = அவள்’ என்ற புத்தகம். மூன்றாம் பாலினமாக அங்கீகாரம் பெற்றிருக்கும்…

  • ஒரு முன்கதைச் சுருக்கம்

    பாடப் புத்தகங்கள், புராண இதிகாசக் கதைகள் தவிர்த்து வேறு ஏதும் படிக்கத் தக்கவையே அல்ல என்று தீவிரமாக நம்பும் பின்புலத்தில் வளர்ந்தாலும் நான் மட்டும் மந்தையிலிருந்து பிரிந்த ஆடாக கதை, கவிதைப்புத்தகங்களில் பொழுதை வீணடிப்பது என் குடும்பத்தினரை ரொம்பவே வருத்தியது. இதனால் நிறைய மனஸ்தாபங்கள். ஒரு கட்டத்தில் மும்பைக்குச் செல்ல வேண்டிய சூழல். சொந்தமண்ணைப் பிரிந்து, மும்பைக்கு போய்ச் சேர்ந்த பிறகுதான் வாழ்க்கையை நேரடியாக உணரத்தொடங்கினேன். அதுநாள் வரையில் நூல்களின் வழியே கற்றுத்தேறிய வாழ்க்கையை நிஜ அனுபவ…

  • ஈரோடு சங்கமம் – எவ்வளவு முடியுமோ அவ்வளவு லேட்டா..

    ஈரோடு சங்கமம் நிகழ்ச்சியில் விருது வழங்க என் பெயரை தேர்வு செய்திருப்பாதாகவும், விழாவில் கலந்துகொள்ள ஒப்புதல் கேட்டும் மின்னஞ்சல் வந்த்தும் கொஞ்சம் மிரண்டு தான் போனேன். சும்மாவே மெல்லுவாய்ங்க.. ஈரோடு ஆட்கள் பக்கோடா கொடுக்கப்பாக்குறாய்ங்களேன்னு தான் முதலில் தோணிச்சு. நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன், எதுக்கும் கொஞ்சம் யோசிக்க அவகாசம் வேணும்னு கேட்டு கதிருக்கு பதில் அனுப்பினேன். அவரோ 24மணி நேரம் கெடு கொடுத்தார். வலை உலகின் மூலம் அறிமுகமாகி, உடன் பிறந்த அண்ணன் போலாகிவிட்ட, மா.சிவக்குமாரிடம்…

  • Autism குறித்த விழிப்புணர்வு விளம்பரம்

    விகேன் – என்ற நிறுவனத்திற்காக சூர்யாவும் ஜோதிகாவும் நடித்துக்கொடுத்துள்ள விழிப்புணர்வு விளம்பரப்படம். வீடியோ சுட்டி:- http://video.google.com/videoplay?docid=7308785909724630603