Author: admin

  • அணு உலைக்கு எதிராக அதிரடி நோட்டீஸ்!

    100 நாட்களுக்கு மேலாக தொடர்ந்துகொண்டிருக்கிறது… கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம். இந்தபோராட்டைத்தை மழுங்கடிக்க அணு உலைக்கு ஆதராவாகவும் போராட்டங்கள்…பிரஸ்மீட்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.”அணு உலை பாதுகாப்பானதுதான். ஏற்கனவே… அணு உலை இயங்கிவரும் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை சுற்றியுள்ள மக்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறார்கள்.அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை” என்று  அணுசக்தித்துறை விஞ்ஞானிகள், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், அஸ்பியர்(ASPIRE) தொண்டு நிறுவனத்தின் காரணிவியல் டாக்டர்.மஞ்சுளா தத்தா, மத்திய ஆய்வுக்குழுவினர், அடையார் புற்றுநோய் மைத்தின் இயக்குனர் சாந்தா…

  • விடுபட்டவை 25-11-11

    பகலில் சூரியனோடும், இரவில் சந்திரனோடும் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையை தமிழக மக்களுக்கு தருவதற்காகவே டங்கடாரகை மின்சாரத்தின் விலையை ஏற்றி இருக்கிறார் என்பதை டமில் பீப்பிள் உணரவேண்டும். #அண்ணா நாமம்.. எம்.ஜி.ஆர் நாமம்.. டங்கடாரகை நாமம். மொத்தம் !!! குறிப்பு:- கிடைத்த முதல் தகவலின் படி: தமிழக அரசு மின்கட்டண உயர்த்தப்போவது அறிந்திருப்பீர்கள். வீடுகளுக்கு 1-100 யூனிட் மின்சாரம் ரூ.1.50 என்றும் 101-முதல் 600 வரை ரூ.5.75/-என்றும் தீர்மானித்திருப்பதாக சொல்கிறார்கள்.(நிறுவனங்களுக்கு வேறு கதை) ———— கொஞ்ச நாட்களாகவே…

  • எச்சரிக்கை: ON LINE FRAUD

    கடந்த ஆகஸ்ட் மாதம் http://www.indiavarta.com/ இணையதளத்தின் மூலம் ஒரு பொருள் வாங்க ஆடர் செய்தேன். பொருளின் விலை ரூ. 1.799.00/-. ஐசிஐசிஐ வங்கி மூலம் பணம் செலுத்தினேன். பணம் செலுத்திய சில நிமிடங்களியேயே ஏதோ எரர் காட்டி, அந்த பக்கம் வேலை செய்ய வில்லை. அதனால் இன்னொரு முறை http://www.indiavarta.com/ தளத்தில் குறிப்பிட்ட பொருளுக்கு இன்னோரு முறை பணம் செலுத்தி, ஆடரை உறுதி படுத்தினேன். (இதற்குள் முதல் தடவையே வங்கில் இருந்து பணம் எடுக்கப் படிருந்தது. )…

  • விடுபட்டவை 08-11-11

    கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் தில்லு முல்லு, முல்லு தில்லு என்று ஏகப்பட்டது நடந்திருப்பதாகக்கூறி, ஸ்டார் ஹெல்த் இன்சூயரன்ஸுக்கு கொடுக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்தார் முதல்வர் ஜெயலலிதா. பலரும் எதிர்ப்பு காட்டிய நிலையில், கொஞ்ச நாளுக்கு பிறகு அத்திட்டம் எம்.ஜி.ஆர் பெயரில் தொடரும் என்று அறிவிப்பு வெளியானது. சமீபத்தில் புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டது. நம் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் நான்கும் களத்தில் குதித்தன. கடந்த முறை தனியாரிடமிருந்து கிடைத்த, அனுபவத்தில் இம்முறை…

  • விடுபட்டவை 7-11-11

    உண்மையிலேயே விடுபட்டவை எழுதி ரொம்ப நாளாச்சு. ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமாச்சாரங்கள் எளிதில் எனக்கு பிடிபடாததால்.. கூகிள்காரன் விட்ட பஸ்ஸுலயே அதிகம் நேரத்தை ஓட்டியாச்சு. பதிவு பக்கம் வர முடியல. இனியாச்சும் இந்த பக்கமும் கொஞ்சம் எட்டிப்பார்க்கனும். (எட்டிப்பார்த்தா மட்டும்.. படிக்க ஆளு வேணும்ல.. ஹிஹி) — செர்னோபிள் தொடங்கி ஃபுகுசிமா வரைக்கும் அணு உலைகளினால் ஏற்பட்ட ஆபத்தை பார்த்த பிறகும் இங்கே கூடங்குளத்தில் அணு உலை தொடங்கியே தீருவேன்னு மத்திய அரசு பிடிவாதம் பிடிக்கிறதும், அதற்கு…

  • தூக்கு தண்டனையை எதிர்ப்போம்! மனித நேயத்தை காப்போம்..

    உலகம் முழுவதும் பல நாடுகளில் தூக்கு தண்டனை என்பது உச்சபட்ச தண்டனையாக இருந்து வருகிறது. அதே சமயம்.. தூக்கு தண்டனைக்கு எதிராக பல பகுதிகளில் இருந்தும் எதிர்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. சமீபத்தில் பேரரிவாளன் உட்பட மூன்று பேரின் கருணை மனுவை நிகாரித்துள்ளது, ஜனாதிபதி அலுவலகம். ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு உதவிய காரணத்திற்காக இத்தண்டனை என்று சொல்லப்படுகின்ற போதும், இதுவரை செய்த குற்றத்தை நிறுவவில்லை அரசு. கட்டாயப்படுத்தியே.. வாக்குமூலம் பெறப்பட்டதாக வருகின்ற செய்திகளை காவல்துறையும் மறுக்க வில்லை. ஊழல்…

  • பாலபாரதி -மா.சிவக்குமார்

    Tuesday, January 06, 2009 பாலபாரதி 2007ம் ஆண்டு சனவரி மாதம். வலைப்பதிவுகள் எழுத ஆரம்பித்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தது. அருள் குமாரை சில முறை சந்தித்து எழுத்து, வாழ்க்கை குறித்து பேசியிருந்தேன். ஏதோ ஒரு விடுமுறை நாள், ஞாயிற்றுக் கிழமையோ, பொங்கல் நாளோ, அல்லது குடியரசு தினமோ நினைவில்லை. வீட்டில் இணைய இணைப்பு இல்லை, வீட்டுக்கு எதிரில் இருந்த இணையக் கூடத்தில் போய் பின்னூட்டங்களையும் புதிய பதிவுகளையும் மேய்ந்து கொண்டிருந்தேன். அப்போது அதுதான் வாழ்க்கையின்…

  • முகமொழி – கவிஞர் பாலபாரதி

    முகமொழி – கவிஞர் பாலபாரதி கவிஞர் பாலபாரதி சமத்துவபுரம் கழிவுநீர் சுத்தம் செய்ய அதே கருப்பன் விறகு விற்க பேரம் நடந்தது மர நிழலில் சாம்பலான குடிசைகள் அடுக்கப் பட்ட சடலங்கள் தின்று திமிறும் சா…தீ புதிய ஊர் புரியாத மொழி ஆறுதலாய் அதே நிலா கழுத்தில் கனத்தது ஓடிப்போன கணவனின் தாலி அன்பை போதிக்கும் மதம் ஆயுதமேந்தி ஆண்டவன் பசிக்கும் வயிறு சாப்பாட்டுக் கூடை சுமந்தபடி அவள் பாஸ்போர்ட் இல்லாமல் இந்திய எல்லைக்குள் வெளிநாட்டுப் பறவைகள்…

  • தகப்பனாய் உணர்தலும் சுகமே!

    — உறக்கத்தில் கடிகார முட்கள் போல கட்டிலில் சுற்றி வந்தாலும் பசியெடுக்கும் நடுசாமத்தில் சரியாக அவன் அம்மாவை அடையாளம் கண்டு எழுப்பி விடுகிறான் பசியை உணர்ந்தவள் தாய் தான் என எப்படித்தான் உணர்ந்துகொள்கின்றனவோ குழந்தைகள் — இன்னுமா உன் மகன் பேசவில்லை என்ற சுற்றத்தாரின் கேள்விக்கு பயந்து உயிரற்றவைகளையும், உயிருள்ளவைகளின் பெயர்களையும் சொல்லிக்கொடுக்கிறேன் தினம் அவனுக்கு. சொற்களற்ற அவனது உலகத்தில் பெயர்கள் அழிந்து வெறும் சப்தங்களாக வெளியேறுகின்றன அவனிடமிருந்து — தோற்றுப்போன முயல் கதையும் தந்திரக்கார நரி…

  • நமக்கேன் வம்பு

    ப்ராடிஜி- (PRODIGY) ”என்னோட பையன் ஃபஸ்ட்க்ளாஸுல பாஸ் பண்ணிட்டான்’ ‘..ஓ… அப்படியா.. வெரிகுட் அடுத்து என்ன படிக்கப்போறேன்..’ ‘எல்லோரையும் போல செக்கெண்ட் கிளாஸ்தான்’ -மேலே நீங்கள் படித்தது, நான் எப்போதோ, ஏதோவொரு பத்திரிக்கையில் படித்த சிரிப்புத்துணுக்கு. நகைச்சுவைக்காக சிரித்தாலும், உண்மையில் குழந்தைகளில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று யோசித்தோமானால்.. அந்த பிஞ்சுகளின் மேல் நாம் ஏற்றி வைத்திருக்கும் சுமையை உணர்ந்துகொள்ள முடியும். சிறுவயதிலேயே வயதுக்கு மீறிய அறிவுடன் இருந்ததாக சொல்லப்படும் திருஞான சம்பந்தர் பற்றி படித்து வளர்ந்த…