Author: admin

  • ட்ரைலருக்கே ட்ரைலர் விடும் காலமிது..

    இன்று எல்லா துறைகள் பற்றியும் எழுதுபவர்கள் உண்டு. படைப்பிலக்கியம் தாண்டி தமிழில் எழுதப்படுவதற்கு என நிறைய துறைசார்ந்த இடங்கள் காலியாக முன்பு இருந்தன. இவ்வொன்றாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. சரியோ தவறோ.. துறைசார்ந்த எழுத்துக்கள் தமிழில் அதிகமாகிவருவது கவனிக்கத்தக்கது. அதிலும் பொருளாதாரம் பற்றி தமிழில் எழுதுவதற்கு சரியான நபர்கள் இல்லாதிருந்தது. அதிலும் கூட இன்று பலர் வந்துவிட்டார்கள். எனக்கு தெரிந்து மிச்சமிருக்கும் துறைகளில் இசையும், மோட்டார்வாகனத்துறையும் மிக முக்கியமானதாக எனக்குப் படுகிறது. மோட்டார் வாகனத்தை பற்றி எழுதினால்…

  • பெரியாருடன் ஒரு பயணம்

    பெரியார் தனது சிந்தனைகளை பகிரங்கப்படுத்தியதும், பிரச்சாரம் செய்ததும் அதிலிருந்து பொருள் ஈட்டவோ, புகழ் பெறவோ அல்ல; தேர்தலில் வாக்குகள் பெறவும் அல்ல. மாறாக அவரது சிந்தனைகள் அன்றைய சமூகப் போக்கிற்கு நேர் எதிராக இருந்த காரணத்தால் எதிர்ப்புகளையும் இழப்புகளையுமே அவர் சந்தித்தார். பெரியாரின் இந்த நெடும்பயணம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடியது. அந்தப் பயணத்தின் சில பக்கங்களை, மிக முக்கியமான பக்கங்களை, பெரியாரின் சிந்தனைப் போக்கை, பெரியாரின் சொற்களிலேயே அறியும்…

  • சினேகிதனின் அப்பா

    அப்போது நான் தமிழகத்திலிருந்து வந்துகொண்டிருந்த அரசியல் வார இதழின் மும்பை செய்தியாளன். அப்படியே அங்கே வந்துகொண்டிருந்த தமிழ்ப் பத்திரிக்கைகளில் கதை, கவிதை, கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது தான் அவன் பழக்கமானான். அவனும் மும்பை நாளிதழ்களில் கதை,கவிதை எழுதிக்கொண்டிருந்தவன். பத்திரிக்கை வாயிலாக தொலைபேசி எண் கிடைத்து, கிங்சர்கிளில் உள்ள பூங்காவில் ஒரு ஞாயிறு மதியம் சந்திப்பதென்று முடிவாகிறது. அங்கே இருந்தவரை, ஒவ்வொரு ஞாயிறும் நண்பர்களை ஏதேனும் ஒரு இடத்தில் சந்திப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தேன். அப்படி ஒரு ஞாயிறு மகேஸ்வரி பூங்காவுக்கு…

  • ഓണാശംസകള്‍ …

    ശ്രാവണ പുലരികള്‍ ചിരിതൂകുന്നു ….. നാട്ടിലെങ്ങും വസന്തകാലം …. മനസുകളില്‍ ആഹ്ലാദത്തിന്റെ തിരതള്ളല്‍ … ഓരോ ഓണക്കാലവും ബാല്യകാല സ്മരണകളുടെ പൂക്കളമൊരുക്കി വരുന്ന വിരുന്നുകാരാണ്… എല്ലാവര്‍ക്കും എന്റെ ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകള്‍ … நன்றி 🙂 படம்: கலேஷ்குமார் மூலக் கவிதை: அஜிஷ்

  • பக்கத்து வீட்டு ரவுசு…

    பக்கத்து வீடுல ஒரு பையன் இருக்கான். ஐந்திலிருந்து ஏழு வயசுக்குள் தான் இருக்கும். அவன் அடிக்கிற லூட்டிக்கு அளவே இல்லை. வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு போய் இருக்கிறான். சாமி கும்பிட்டு விட்டு அனுமார் இருந்த சன்னதியை வலம் வரத்தொடங்கி இருக்கிறான். கொஞ்ச நேரம் கழித்து அவை பார்த்த கோவில் அர்ச்சகருக்கு அதிர்ச்சி. வலமிருந்து இடமாக சுத்தாமல். பையன் இடமிருந்து வலமாக சுற்றிக்கொண்டிருந்திருக்கிறான். இவனது கோக்குமாக்கை பார்த்தவர் அவனை தடுத்து நிறுத்தி.. ’ஏண்டா இப்படி தலைகீழா சுத்தீண்டிருக்க?ன்னு…

  • சீவக சிந்தாமணி- நாவல்- வாசிப்பனுபவம்

    எத்தனையோ புத்தகங்கள் படித்திருப்போம். சினிமாக்கள் பார்த்திருப்போம். சிலருக்கு மன்னர் கால கதைகள் என்றால் கொள்ளைப் பிரியமாய் இருக்கும். அதிலும் திருப்பங்கள் நிறைந்து, சஸ்பென்ஸ் வேறு இருந்துவிட்டால்.. கேட்கவே வேண்டாம். இன்றும் கூட பொன்னியின் செல்வன் சக்கை போடு போடுவதற்காக அடிப்படையே நமக்குள் புதைந்து கிடக்கும் பழங்கால கதைக்கான ஏக்கங்களின் வெளிப்பாடு என்று தான் நான் கூறுவேன். புகைப்படங்களே இல்லாத அந்த பழங்காலத்திற்கு நாம் செல்ல முடியாத ஏக்கம் ஒரு புறம் என்றால்.. பண்டைய மக்களின் வாழ்க்கை எப்படி…

  • நீங்களும் உலக சினிமா விமர்சனம் எழுதலாம்..!

    டிஸ்கி: The Patient – படத்தின் கதையை படித்து வரும் போது நடு நடுவே.. அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருப்பதை கவனிப்பீர்கள். சினிமாவில் பார்த்த அந்த காட்சியை நாம் எழுதும் போது எப்படி சொல்லவேண்டும் என்பதையே அப்படி கொடுத்திருக்கிறேன். பின்ன..  உலக சினிமாவுக்கு விமர்சனம் எழுதும் போது கொஞ்சம் உழைப்பும், பொறுமையும் தேவை என்பதை நினைவு படுத்தவே இக்குறிப்பு. — கதையின் நாயகன் ஒரு மருத்துவர். க்யூபாவைச் சேர்ந்தவன். பணக்காரக்குடும்பத்தின் வாரிசு என்றாலும், கம்யூனிஸ நாடான க்யூபாவில் பிறந்ததால் ஏழை…

  • இலக்கியவாதியாக காட்டிக் கொள்ள சில வழிகள்…

    ஆள்பாதி ஆடை மீதி க்ளோஸ் அப்ல ஒரு போட்டோ. அல்லது பேனா கொண்டு மூக்கை குத்துவது போலவோ, கண்ணத்தில் கை வைத்து மோட்டு வளையை பார்த்த மேனிக்கோ, ஒருவாரமோ, ஒரு மாசமோ மழிக்காத தாடி மீசையுடன் இருந்தால் சிறப்பு. பிரதி மட்டுமே மிச்சம். ஆசிரியன் செத்துவிட்டான்னு சொல்லிகிட்டாலும் நாளைக்கு நீங்க புத்தகம் போடும் போது கடைசி அட்டையில போட்டோ போட இதுமாதிரி புகைப்படங்கள் உதவும். பேண்ட் சட்டை எல்லாம் வேலைக்கு ஆவாது. அதனால.. நல்லதா நாலு ஜோடி…

  • உயிர் பிழைக்க மருத்துவத்திற்கு உதவி தேவை..

    நொடியில் நொறுங்கியவனுக்காக……. ஜூலை 31 இரவு 10 மணி – உலகமே நண்பர்கள் தினத்தை கொண்டாட தயாராகி கொண்டிருந்த போது திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் அவசர சிகிட்சை பிரிவில் காய்ந்த சருகு போல் கிடந்தான் ‘Gaadi’ என்று எங்களால் செல்லமாய் அழைக்கப்படும் காட்வின் ஜெயபால். மருத்துவர்களும், தாதியர்களும்புடைசூழ தூக்குப் படுக்கையில்கிடத்தி அறுவை சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது தான் நாங்கள் மருத்துவமனையை அடைந்தோம்.. ஆவேசத்துடன் கையை பிடித்து ‘Gaadi’ என்றேன் அதே புன்னகை உதிர்த்தான் வலது புறமாக நின்ற என்னையும்,…

  • பஸ்ஸு தொல்லைகள்

    வயது வந்தோர்க்கான எழுத்துக்கள் கோவைக்கு போய் இருந்த போது நண்பரின் வீட்டில் தான் தங்கி இருந்தேன். பகல் முழுக்க வீட்டிலேயே கிடந்தாலும்,இணையம், கணினி என வசதிகள் இருந்த போதிலும் வலைப்பதிவுகளின் பக்கம் வருவதற்கு எனக்கு துணிவு இல்லை. அப்படியே ரீடர் வழி பதிவுகளை படிக்கலாம் என்றாலும் அதற்கும் ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. நண்பரின் வீட்டினர் எவராவது எனக்கு பின்னால் வந்து நின்று நான் படிக்கும் வலைப்பதிவுகளில் (புதிய நண்பர்கள் பலரின் வலைப்பதிவுகளும் இப்படி இருப்பது வேதனை)…