Author: admin

  • விடுபட்டவை 04 நவம்பர் 09

    இன்று இணையத்தை பயன்படுத்துபவர்களில் குறைந்தது, கல்லூரி படிப்பை முடித்தவர்கள் எப்படியும் 50 விழுக்காடாவது இருப்பார்கள் என்று நம்புகிறேன். என் வலைப்பக்கத்திற்கு தேடு பொறிகள் மூலம் வருகின்றவர்களின் தேடு வார்த்தையைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. இதற்கு முன்பு இப்படி தேடு பொறிகள் மூலம் தங்களின் தளத்துக்கு வருபவர்களைப் பற்றி பலரும் எழுதி இருப்பதை நாம் படித்திருப்போம். ஆனால் என் விசயத்தில் இது கொஞ்சம் வேற மாதிரியாக இருக்கு. விடுபட்டவை- க்கு தேடு பொறிகள் மூலம் வருகின்றவர்கள்…

  • முதல்வர் கருணாநிதி மனதை கரைந்த கட்டுரை.. இதோ!

    கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா டுடே வார இதழின் தமிழ் பதிப்பில் வெளிவந்த இருள்படிந்த கூடாரங்கள் என்ற கட்டுரையே.. தமிழக முதல்வரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக அவரே கடிதம் எழுதி இருக்கிறார். இன்று காலை அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் முதல்வர். அதன் படி, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் வசதிக்காக ரூ.12 கோடியை ஒதுக்கி இருப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இலங்கை அகதிகள் நிலை குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்தது.…

  • சிந்தனைக்கு இரு படங்கள்..

    1. இது குமுதம் பாலா-வரைந்த கார்ட்டூன்.. இதனை பார்க்கும் போது செந்தழல்ரவி-யின் பதிவுக்கும் நினைவுக்கு வருகிறது… 🙂 அதையும் பாருங்க! — 2. ஒரு கவுஜர், கவிமட நிறுவனர், வலை உலகில் நல்லா இருங்கடே-க்கு சொந்தக்காரர். கரப்பான்பூச்சி விருது கமிட்டி தலைவர்&நிறுவனர் இப்படி பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கும்.. நம்ம அண்ணாச்சியை ஒரு குறுகிய சதுரத்துக்குள் சிக்க வைக்க நினைக்கும் சன் டிவி-யின் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 🙂 அப்ப.. நீங்க..! (அண்ணாச்சி முன்னாள் எழுத்தாளர் தானேன்னு…

  • நடிகர் சூர்யா தன்னிலை விளக்கம் அளித்த கடிதம்..

    மேலே இருப்பது நடிகர் சூர்யாவால் எல்லா பத்திரிக்கைகளுக்கும் இன்று அனுப்பப்பட்ட கடிதம். ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களையும் ஈனப்பிறவி என்றும்,பிரியாணிக்கும், குவாட்டருக்கும் அலையும் பிச்சைக்காரர்கள் என்றும் நடிகர் சங்க மேடையில் திட்டித்தீர்த்தார் நடிகர் சூர்யா. இன்று பத்திரிக்கையாளர்கள் நடிகர் சூர்யா விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ள நிலையில் இவ்வாறு கடிதம் வந்திருப்பது, எவ்வித பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். நடிகை ஸ்ரீப்ரியா வின் மேடைப்பேச்சு இங்கே மேலும் சிலரின் கண்ணொலியையும் அதே இடத்தில் பார்க்கலாம்.

  • வலைப்பதிவரோடு BAR-க்கு போறீங்களா.. ஒரு நிமிசம்..!

    டிஸ்கி:- இந்த பதிவில் வரும் வார்த்தைகள் எதுவும், தனி நபரையோ, குழுவையோ அல்லது எவரையும் யாரையும் குறிப்பிடுபவன அல்ல. இவை அனைத்தும் நிகழக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால்.. கற்பனையாக எழுதப்பட்டவைகளே.. உஷாரா இருக்க வேண்டியது அவரவர் பொறுப்பு! — 1. தண்ணியடிக்க பதிவர் யாரவது வலிய வந்து கூப்பிட்டால்.. அதுவும் தொடர்ந்து சில நாட்கள் வற்புறுத்தினால் கொஞ்சம் யோசிப்பது நல்லது. 2. வலிய வந்து அழைப்பவருடன் பாருக்கு செல்வது என்பது தவிர்க்கவே முடியாது என்றால்.. தலையில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு…

  • FLASH NEWS- அதிமுக கூட்டனியில் இருந்து பா.à®®.க வெளியேற்றம்

    அதிமுக கூட்டனியில் இருந்து பா.ம.க வெளியேற்றம். திண்டிவனத்தில் நடந்த நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு! விபரங்கள் இனிமேல் தெரியவரும்..

  • விடுபட்டவை 23 August 09

    மிகுந்த மகிழ்சியாக உணர்கிறேன். இன்று வெற்றிகரமாக இலங்கை தமிழ்வலைப்பதிவர்களின் சந்திப்பு மிகச்சிறப்பாக நடந்தேறி இருக்கிறது. சந்திப்புக்கு என உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும், சந்திப்பில் கலந்துகொண்டு, மற்றவர்களின் அறிமுகமும் பெற்று, கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். பதிவர்களின் சந்திப்புகள் தொடந்து நடைபெறட்டும். எழுதுவதோடு மட்டுமல்லாமல்.. பல்வேறு வளர்ச்சிக்கும், நமது ஒற்றுமைக்கும் வழி வகுக்கட்டும் சந்திப்புகள். மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறேன். சந்திப்பின் ஒலிவடிவம் கேட்க.. மதுவதனன் பதிவுக்கு போகலாம். படங்களைக்காண.. வந்தியத்தேவன் மற்றும் ஆதிரை பதிவுக்கு…

  • அப்பா!

    தலைக்கேறிய போதையில் அம்மாவை அடிக்கும் அப்பாக்களும், அதற்காக மகனிடம் அடிவாங்கிய அப்பாக்களையும் நிறைய பார்த்திருக்கிறேன். தன்னால் செய்யமுடியாமல் போன காரியங்களை தன் வாரிசு வடிவில் நிறைவேற்றிக்கொள்ள அவர்களை கட்டாயப்படுத்தும் தந்தைகளையும் நாம் அறிவோம். ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவ சிந்தனைகள் இருக்கும். தங்களின் குடும்பத்திற்காக அப்பா, அம்மா என்ற உறவுகளின் எண்ணங்களுக்காக அவற்றை இழந்தவர்களை பட்டியல் போட்டால் அது நீளும். நான் உன்னோட அப்பாடா.. எனக்குத்தெரியும் நீ என்ன படிக்கனும்னு என்று படிப்பு விசயத்தில் தொடங்கி, பல்வேறு கட்டங்களில்…

  • விடுபட்டவை – 04.08.09

    சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக இருந்தவர் கே.சுரேஷ். இவர் தூத்துக்குடி துறைமுகம், சேது சமுத்திரத் திட்டம் ஆகியவற்றுக்காக நடக்கும் பணிகளில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கும், திமுகவுக்கும் மிகவும் வேண்டப்பட்டவர் என்ற பேச்சும் உள்ளது. இந்த முறை காங்கிரஸ்- திமுக கூட்டணி வெற்றி பெற்று வந்தபின் சில உள்ளடிகளால் டி.ஆர். பாலுவுக்கான வாய்ப்பு பறிபோனது. கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக காங்கிரஸைச் சேர்ந்த ஜி.கே. வாசன் பதவியேற்ற உடன், செய்த…

  • பெரியாரும் நானும்..

    எனக்குள் பெரியாரின் விதை விழுந்ததற்கு என் அப்பாவிற்கு என்றும் நன்றி சொல்லக்கடமைப் பட்டிருக்கிறேன். சோசலிச காங்கிரஸ்வாதியான அவருக்கு பெரியாரின் மீது எப்போதும் ஒரு பற்று இருந்தது. அதனால் தான் என் சின்ன சகோதரியை திராவிடர் கழகம் நடத்தும் கல்லூரியில் தான் சேர்த்தார். என் வாழ்க்கையில் நான் பெரிதும் வியக்கும் மனிதர் என்றால் அது ஈ.வெ.ரா தான். நான் இணையத்திற்குள் அடியெடுத்து வைத்த சமயங்களில் ஈ.வெ.ராவின் எழுத்துக்களுக்கு நிறைய பஞ்சமிருந்தது. திரிபுகளும், புரணிகளுமே அதிகம் வலம் வந்துகொண்டிருந்தது. நிறைய…