Author: admin

  • விடுபட்டவை 05 ஜூன் 2008

    எப்போதுமே என் மீது எனக்கு மீது பரிதாப உணர்ச்சியும், கழிவிரக்கமும் உண்டு. அதே அளவுக்கு என் மீது எனக்கு கோபமும், வருத்தமும் கூட உண்டு. இவை இருப்பதால் தான்.. உள்ளுக்குள் உந்தப்பட்டு மேலே மேலே என்று வர முயன்றுகொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் என் அருகில் இருப்பவர்கள் மீது நான் காட்டும் கோபம் கோழிக் காமம் மாதிரி.. வர்றதும் தெரியாது, போறதும் தெரியாது. ஆனால்.. முன்பு எல்லா இடத்திலேயும் சண்டை போடத் தயாராக இருப்பேன். சமூகம் அங்கிகரிக்காத காரியங்களை எவர்…

  • விடுபட்டவை 4 ஜூன் 2008

    புதிய அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்துக்கொள்ளுவதற்கு முன் மெடிக்கல் செக்கப் எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அவர்களே ஒரு இடத்தையும் பிக்ஸ் செய்து, ஒரு கடிதத்தை கொடுத்து டெஸ்ட் பண்ணிட்டு மட்டும் வந்துடுங்க என்றும் சொல்லி விட்டார்கள். அதில் கொடுமை என்னவென்றால்.. வெறும் வயிற்றுடன் காலை 7.30 மணிக்கு ஸ்கேன் செண்டரில் இருக்கவேண்டும் என்ற உத்தரவு வேறு. தரமணியில் இருந்து அதிகாலையிலேயே எழுந்து தயாராகி, ஒரு வழியாக கடிதத்துடன் ஸ்கேன் செண்டர் போய் சேர்ந்தேன். அங்கே என்னோடு…

  • விடுபட்டவை 03 ஜூன் 2008

    இன்று சென்னையின் அனேக இடங்களில் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளிலும் (இதை இடையில் தடை பண்ணியதாக நினைவு!), ஸ்பீக்கர் பாக்ஸ்களிலும் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக கழக பாடல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. “கட்டு கட்டா கள்ளப் பணம் வச்சிருக்குற கும்பல் இது, அத்தனையும் அள்ளிவிட்டு, ஓட்டு கேட்டு வீடு தேடி வருவாங்க.. விரட்டியடிங்க…” என்றும், ”உப்புக் கருவாடும், ஊறவச்ச சோறும் கூட கிடைக்கலையே எனக்கு.. கொள்ளை கொள்ளையா பணத்தை சேர்க்குறியே ஒனக்கு!” என்றும் ஆளும் அரசை விமர்சிக்கின்ற பாடல்கள்.…

  • விடுபட்டவை 31 மே 2008

    சின்ன வயதிலிருந்து என்னையும் மீறி, இந்த பாடத்திட்ட முறைகளை வெறுத்து வந்திருக்கிறேன். பாடம் தவிர்த்த என்னுடைய எல்லா ஆர்வங்களையும் குடும்பத்தாரும், ஆசிரியர்களும் சேர்ந்து தடை போட்டிருக்கிறார்கள். அல்லது அந்த ஆர்வங்களை ஒரு வடிவத்துக்குள் கொண்டுவர என்னை கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். எட்டாவது படிக்கும் போது அரைப் பரிட்சையில் 90 மார்க் அறிவியலில் வாங்கியது நினைவு இருக்கிறது. என் வீட்டில் எட்டாவது பையனாகிப் போனதால்.. நான் செய்யும் எதுவுமே அவர்களுக்கு புதியதாக படவில்லை. (முன்னோர்களால்.. ஏற்கனவே செய்யப்பட்டவைகளாக அவை இருந்திருக்கும்…

  • நித்யாவும் நானும்..

    உங்களில் பலருக்கும் கென் தெரிந்தவராக இருக்கலாம். அனேக குழுமங்களில் சண்டைக்கோழி சேவலாக வலம் வரும் கோபக்காரன். ஆனால்.. மெல்லிய மனதுக்கு சொந்தகாரன். எதையும் வெளிக்காட்டிக்கொள்வதில் அவனுக்கு தகராறு உண்டு. அது அன்பாக இருக்கட்டும், கோபமாக இருக்கட்டும். கவிதைகள் மட்டுமே தன் வலைப்புக்களில் எழுதிக்கொண்டிருக்கும் கென், அவ்வப்போது உரைநடைபக்கமும் எட்டிப் பார்ப்பதுண்டு. கவிதைகளை விட அவனது உரைநடைக்கு நான் வாசகன். இந்த வாரத்தில் பண்புடன் குழுமத்தில் அவன் எழுதி இருந்ததை பதிவர்களின் பார்வைக்கு வைக்கிறேன். -OoO- ஒன்றாம் வகுப்பு…

  • விடுபட்டவை 30.மே.2008

    சென்னைக்கு வரும் பதிவர்கள் பலரை சந்திக்கும் விருப்பத்தை தெரிவித்தாலும், அதனை பதிவு நாம் போட்டு அறிவித்தாலும்.. எல்லோரின் கண்ணிலும் அப்பதிவு படுவதில்லை. விளைவு சந்திப்புக்கு முன்பாக எஸ்.எம்.எஸ் வழியாகவோ, தொலைபேசியோ சென்னையில் இருப்பவர்களுக்கு மீண்டும் நினைவு படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. பதிவு போட்டால் தானே பார்க்க முடியாமல் போகிறது.. மெயிலாக அனுப்பிவிட்டால்.. என்ற ரோசனையை செயல்படுத்த உடனடியாக(!) ஒரு குழுமம் தொடங்கப்பட்டிருக்கிறது. Homepage: http://groups.google.com/group/chennaibloggersmeet Group email: chennaibloggersmeet@googlegroups.com இதில் யார் வேண்டுமானாலும் சேரலாம். ஆனால்…

  • விடுபட்டவை 29.மே.2008

    நீங்கள் வலைப் பதிவரா? இது உங்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம். உங்களின் சுற்றம் மற்றும் உறவினர்களிடம் வலைப்பதிவர் என்று சொல்லிக்கொள்ளுவதில் நிறைய சிரமம் இருந்திருக்கும். அவர்களுக்கு வலைப்பதிவுகள் பற்றி புரியவைத்து, திரட்டிகள் குறித்து பேசி.. நானும் அதுல எழுதுறேன். உலகம் முழுக்க இருக்கும் பல தமிழர்கள் எனக்கு இதன் மூலம் நண்பர்களாகி இருக்காங்க.. அப்படீன்னு சொல்லுறதுக்குள்ள தாவு தீர்ந்து போய் இருக்கும். நீங்கள் பட்ட கஷ்டம் இனி குறையப்போகிறது. வார இதழ்கள், தினசரிகள், தொலைக்காட்சிகள் என்று…

  • விடுபட்டவை 28.மே.2008

    சென்னையில் ஆர். எஸ்.எஸ் அலுவலகத்தின் குண்டு வைத்து பலியான தீவைரவாதி ஒருவனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர் இறந்து 13 ஆண்டுகள் கழித்தும் அடையாளம் தெரியாததால்.. அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக 28மே 2008 ம் தேதி தினத்தந்தி 11ம் பக்கத்தில் செய்தி வெளியிட்டு உள்ளது. அதே தேதியில் வந்திருக்கும் தினகரன் 5ம் பக்கத்தில் அடையாளம் தெரிந்ததால் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதே போல.. கால்டாக்ஸி டிரைவர் தனசேகர் என்பவனி காவல்துறை கது செய்திருக்கிறது. அவன்…

  • விடுபட்டவை 27.மே.2008

    ‘கமல் கவிதை படிச்சு இருக்கீங்களா.. என்னமா யோசிக்கிறார்ண்ணே?’ “ம்..ஆமா..” ‘ஞாநிக்கு என்ன திறமைண்ணே.. நாமெல்லாம் ஏன் இப்படி சிந்திக்கக்கூட முடியல?’ ” 🙂 ” ‘மதன் எழுதின இந்த வார பதில் படிச்சீங்களா? எவ்வளவு விசயம் தெரிஞ்சு வச்சு இருக்காங்க.. வியப்பா இருக்குண்ணே’ ”ம்..” ‘சுஜாதா எழுத்து என்ன எழுத்துண்ணே.. இருபது வருசத்துக்கு முந்தியே இப்படி எழுதி இருக்காரே.., நாமெல்லாம் எப்ப இப்படி ஆகுறது?’ “ம்..ஆவலாம்.” ‘என்ன ஆச்சுண்ணே.. எல்லாதையும் சாதாரணமா எடுத்துக்கிட்ட மாதிரி தெரியுது! ஒங்களுக்கு…

  • இணையம்+ கணினி குறித்த சந்தேகமா உங்களுக்கு?

    பொதுவாக பாரம் (Forum) குறித்த தெளிவான பார்வை என்னிடம் இருந்ததில்லை. அது ஒரு தொல்லையாக மட்டுமே இதுவரை பார்த்து வந்திருக்கிறேன். வலைப்பதிவுகளில் எழுதுவது போல அங்கேயும் கதை கவிதை கட்டுரை என்று எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் எனக்கு வியப்பாகத் தோன்றும். நம் கருத்துக்களை நம்ம வலைப்பக்கத்தில் சொல்லாமல் இப்படி ஒரு கட்டம் போட்ட சட்டத்துக்குள் சொல்லுறாங்களேன்னு பல நாள் வியந்திருக்கிறேன். இவ்வகை பாரங்களில் மொக்கை போடுபவர்களும் உண்டு! பின்னூட்ட கும்மி போன்ற வகைகளும் கூட உண்டு! தமிழ், இணையம்,…