Author: admin

  • தமிழ் எழுது பொருட்கள் பாஸ்வேர்ட்டை திருடுகிறதா?

    தமிழ் எழுது பொருளால் நம் கடவுச்சொல்கள் திருடப்படுவதாக வசந்தம் ரவி ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதில் ரவிசங்கர் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்.. வலையுலக அரசியல்வாதிகள் போல மழுப்பலான பதிலையே கொடுத்துள்ளார். என் சிறு அறிவுக்கு (எழுதிகளின் செயல்பாடுகள் குறித்து முகுந்த் போன்றவர்களிடம் பிறாண்டி கேள்வி கேட்டு கொஞ்சம் அறிந்திருக்கிறேன்.)எட்டியவரை.. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்.. என்று ஆங்கிலம் தவிர்த்த ஏனைய எல்லா மொழி எழுதிகளும் keystrokeகளை monitor என்பதை செய்யும். அப்போது தான்…

  • இந்த கொலையில் எனக்கும் பங்கு உண்டு..! 🙁

    ஆம் நண்பர்களே! நான் சொல்லுவதெல்லாம் உண்மை. மேலே படத்தில் பார்க்கும் அந்த பெண் தான் கொலையானவர். இவர் பெயர் உமாராணி. இவரை எனக்கு எப்படி தெரியும்.. இவரின் கொலையில் நான் எப்படி சம்பந்தப்பட்டிருப்பேன் என்பது குறித்து அதிகம் குழம்ப வேண்டாம் நானே சொல்கிறேன். தற்போது செய்திப் பிரிவில் நான் வேலை பார்த்து வருவதால்.. அடிக்கடி அலுவலகத்தை விட்டு வெளியே செய்திக்காக போவது வழக்கம். அப்படி ஒர் அரசியல்வாதியின் நிகழ்ச்சிக்கு போயிருந்த போது தான்.. உமாராணியை சந்தித்தேன். (திரைப்படங்களில்…

  • 10. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் மண்டி உதயம்..

    ஒரு வழியாக முகவரியைக்கொண்டு சுப்பிரமணிய பிள்ளையின் வீட்டைக் கண்டு பிடித்தார் வெங்கட்டர். வீட்டின் வாசலின் நின்று கொண்டு, கதவு எண்களை சரி பார்த்துக்கொண்டார். நேரமோ.. நடு நிசியை நெருங்கிக்கொண்டிருந்தது. கதவைத் தட்டுவதில் கொஞ்சம் தயக்கம் காட்டினார் வெங்கட்டர். அவருடன் இருந்தவர்கள் பரவாயில்லை கதவைத் தட்டுங்கள் என்று சொன்னார்கள். வேறு வழி தெரியவில்லை. தான் தேடி வந்தது ராமசாமியைப் பார்க்க.. அவன் கிடைத்தால் போதும்.. கதவைத் தட்டினார். பதில் இல்லை. மீண்டும் பலங்கொண்டு கதவைத்தட்டினார். மொட்டைத் தலையில் கொஞ்சமாய்…

  • 9. மாட்டிக்கொண்ட ஈ.வெ.ரா.

    சில நாட்களாக இல்லை. சில மாதங்களாக.. ராமசாமியைக் காணாமல் மிகவும் வருந்தினார் வெங்கட்டர். மனைவி சின்னதாய்யம்மையாரோ.. பித்து பிடித்த நிலைக்கு ஆளானவர் போல.. புலம்பியபடியே இருந்தார். மறுபக்கம் நாகம்மையின் கண்ணீர். என்ன செய்வதென்று தெரிய வில்லை. வியாபாரத்தையும் சரியாக கவனிக்க முடியவில்லை. ஈ.வெ.ரா.வின் அன்றைய நெருங்கிய நண்பரான ப.வெ.மாணிக்க நாயக்கருக்கு கடிதம் எழுதினார் வெங்கட்டர். இவர் எதிர் பார்த்தபடி பதில் சாதகமாக வரவில்லை. அந்த காலகட்டத்தில் வீட்டை விட்டு ஓடிப் போகும் செல்வந்தர் பலருக்கும் போக்கிடமாக இருந்தது…

  • 8. காசிக்கு கும்பிடு போட்ட பெரியார்

    மடத்தை விட்டு வெளியேறிய பின்னர் எங்கு போய் தங்குவது என்ற குழப்பம் தோன்றியது. கால் போன போக்கில் காசியை வலம் வரத்தொடங்கினார். நிறைய மடங்களும் சத்திரங்களும் கண்ணில் பட்டன. சத்திரங்களில் பார்ப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர். சிறுகுடலை ருசி பார்க்கத்துடிக்கும் பெருங்குடலுக்கு என்ன தெரியவா போகிறது.. பெரிய இடத்துப்பிள்ளை இவர் என்று.. பசி.. காதை அடைக்க.., வேறு வழியின்றி.. ஒற்றை ஆடையுடன் வலம் வரும் தன் தோற்றத்தை வைத்து பிச்சை எடுத்து சில நாட்கள் கழித்தார் ராமசாமி.…

  • துயரத்திலிருந்து மீண்டு வா நந்தா! 🙁

    எங்களின் அன்புத் தோழன் நந்தா வின் தகப்பனார் இன்று(டிசம்பர் 24.2007) காலை ஒன்பது மணியளவில் அமரர் ஆனார் என்ற செய்தி, அதிர்ச்சியையும் சொல்லில் வடிக்கவியலா சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தகப்பனை இழந்து நிற்கும் தனையனுக்கும் அவர்தம் குடும்பத்தினற்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துகொள்கிறேன். 🙁

  • மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி எடுங்க!

    சென்னை வந்து இரண்டு வருடங்கள் முழுமையாகி விட்டது. மும்பையில் இருந்து 2005 செப்டம்பர் கடைசி வாரத்தில் வந்திறங்கினேன். மும்பையிலேயே பழக்கமாகி விட்ட நண்பன் ஒருவன் இருந்ததால் அவனுடன் ஜாகையை வைத்துக்கொண்டாகி விட்டது. சென்னை வந்து நிறைய நண்பர்களையும் பெற்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அறை நண்பனுக்கு பெண் பார்த்து முடிவு செய்திருக்கிறார்கள். அனேகமாக இன்னும் நாள் குறிக்கப்படாத அவனுடைய திருமணம் வரும் 2008 மே மாதம் இருக்கலாம். எனக்கும் அவனுக்கும் சரியான புரிதல் இருந்ததால்.. வேறு எவரையும் பாட்னராக…

  • 7. எச்சில் இலைகளில் பசியாறிய ஈ.வேரா!

    முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்யும் தலம். ஒவ்வொரு மண் துகளிலும் கடவுளின் உருவத்தை பார்க்க முடிகின்ற தேசம். பாலிலும் தேனிலும் குளித்து எழும் மனிதர்கள். செழிப்பும் வனப்புமாய் இருக்கும் குடிமக்கள். வாழும் காலத்திலேயே ஒருவன் சொர்க்கத்தை பார்க்க வேண்டுமென்றால் காசி போனால் போதும், எல்லா மனிதர்களின் பாவங்களை போக்கும் புனித கங்கை நதி ஓடும் பூமியின் சொர்க்கம். பசி என்று எவரும் இருந்து விட முடியாது.. செல்வந்தர்கள் பல அன்னதான சத்திரங்களை உருவாக்கி வருவோர், போவோர்…

  • தாவணிக்கனவுகள்

    குளித்து முடித்ததும் துவட்டிக்கொள்ளும் துண்டோடு இருக்கும் உறவு நம்மில் பலருக்கும் அதோடு முடிந்து விடுகிறது. சில சமயங்களில் இடுப்பில் கட்டிக்கொண்டு வீட்டுக்குள் அலைய நேர்ந்திருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு அதே துண்டு பயன்படும் விதம் குறித்து எத்தனை பேர் கவனித்திருப்பீர்கள். அதிலும் பெண்குழந்தைகளால் பயன்படுத்தப்படும் விதம் அலாதியானது. பத்து வயது கூட நிரம்பாத சிறுமிகளில் பலர் துண்டை தலையில் சுற்றிக்கொண்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். கூந்தலை அள்ளி கொண்டை போடுவது போலவோ, முன்பக்கம் கூந்தலைப் போடுவது போலவோ துண்டை பயன்படுத்துவதை…

  • 6. பிச்சை எடுத்து சாப்பிட்ட ராமசாமி

    ஊரை விட்டு காசிக்கு போவது என்று முடிவு செய்ததும்.. யாரையாவது துணைக்கு அழைத்து செல்வது என்ற முடிவுக்கு வருகிறார் ராமசாமி. தொலை தூர பயணம். அதுவும் மொழி தெரியாத வடக்கு தேசத்தை நோக்கி போகப்போகிறோம். தனியாளாகப் போய் அவதி படுவதைக்காட்டிலும் கூட்டுக்கு ஆள் இருந்தால் சிரமம் தெரியாது. அவரின் அழைப்பை ஏற்று, உடன் வர சம்மதித்தவர்கள் இருவர். ஒருவர் ராமசாமியின் தங்கையின் கணவர். மற்றொருவர் நணபர். மூவருமாக ஈரோட்டை விட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள். செண்ட்ரல் ரயில்…