Author: admin

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலுக்கு -பாலசாகித்ய புரஸ்கார்

    மரப்பாச்சி சொன்ன ரகசியம் – நான் எழுதிய சிறுவர் நாவல். 2018ஆம் ஆண்டு வெளியானது. குழந்தைகளின் மீது நிகழ்த்தபப்டும் பாலியல் அத்துமீறலை எதிர்த்து குரல்கொடுக்க, பிள்ளைகளை ஊக்கப்படுத்தும் கதைக்களம். பள்ளி விடுமுறையில் பாட்டி வீட்டுக்குச் செல்லும் ஷாலினி என்னும் சிறுமிக்கு ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. அந்த பொம்மை உயிர்பெற்று ஷாலினியோடு பேசுகிறது. அவளின் தோழி பூஜாவுக்கு ஒரு பிரச்னை வரும்போது மரப்பாச்சி பொம்மை அதிலிருந்து விடுபட வழிகாட்டுகிறது. ஓவியர் ராஜனின் அழகான ஓவியங்கள் கதை வாசிப்பை…

  • கோடுகள் இல்லாத வரைபடம் – நூல் அறிமுகம்

    +++++++++++++++++++++++++++ நூல் அறிமுகம்: உலகை வலம் வந்தவர்களின் பயணக்குறிப்புகளில் இருந்து இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. 11 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு நூல் இது. இதில் 10 கட்டுரைகள் மனிதர்களின் பயணக்குறிப்புகளை விவரிக்கிறது. அந்த பயணக்குறிப்புகள் விவரிக்கும் பண்டைய உலகை சுவாரஸ்யமாக நமக்கு அறிமுகம் செய்கிறார். அதிலும் அப்பயணக்குறிப்புகளில் அதிபுனைவாக கருதப்படும் தகவல்களையும் சேர்த்து எஸ்.ரா வாசகர்களுக்கு குறிப்பிட்டுச்சொல்கிறார். 11வது கட்டுரை, ஒட்ட்கச்சிவிங்கி என்ற உயிரினம் எப்படி நாடுகள் கடந்து இங்கே வந்தது என்பதைப் பற்றி பேசுகிறது. முந்தைய கட்டுரைகளில்…

  • உப்பு வேலி – நூல் அறிமுகம்

    (நீண்ட நாட்களாக நூல் அறிமுகம் ஏதும் எழுதவில்லை. பழைய நூல்கள் தான் என்றாலும் எனது வாசிப்பு அனுபவத்தை பதிவு செய்வது நன்றாக இருக்கும் என்று எண்ணுவதால், இனி அவ்வப்போது, நூல்கள் குறித்து எழுததிட்டம்) ராய் மாக்ஸம் எனும் பிரிட்டீர் ஆய்வாளர், ஒரு பழைய புத்தகக்கடையில் ஒரு நூலை கண்டெடுக்கிறார். அது, 1893இல் வெளியான மேஜர் ஜெனரல் ஸ்லீமன் எழுதிய ஒரு இந்திய அதிகாரியின் புலம்பல்களும் ஞாபகங்களும் (Rambles and recollections of an Indian official –…

  • தொடர்புத்துணைவன் ‘அரும்பு மொழி’

    சிறப்புக்குழந்தைகளின் தொடர்புத்துணைவன் ‘அரும்பு மொழி’மொபைல் செயலி. ஆட்டிசநிலைக் குழந்தைகளில் பலரால் பேச முடியாது. பேசுபவர்களிலும் பெரும்பாலானோர் முழுமையான வடிவில் பேசமாட்டார்கள். பெரும்பாலும் துண்டு துண்டான சொற்களையே சொல்லுவார்கள். அதன் மூலம் அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதை எதிரில் இருப்பவர்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும். பல சமயங்களில் அந்த துண்டுவார்த்தைகளையும் புரிந்துகொள்ளாமல் கடந்துவிடுவோர் அதிகம். ஆட்டிசம் என்றில்லை, வேறுபல வகையான அறிவுசார் குறைபாடு உடையவர்களும் கூட சரளமான பேச்சுத் திறன் அற்றவர்களாகவே இருப்பர். தங்களுடைய எண்ணங்களை பகிரமுடியாமல் போவதின்…

  • கிண்டில் நூல் இலவசம்

    கிண்டில் பதிப்பில் உள்ள எனது நூல்ககளை, கீழ்காணும் தேதிகளில் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம். *1.07.21 முதல் 02.07.21 வரை – ஆட்டிசம் சில புரிதல்கள்* https://tinyurl.com/autismsila *03.07.21 முதல் 04.07.21 வரை – சந்துருவுக்கு என்னாச்சு?* https://tinyurl.com/chandrukku *05.07.21 முதல் 06.07.21 வரை – அன்பான பெற்றோரே!* https://tinyurl.com/anbana *07.07.21 முதல் 08.07.21 வரை – துலக்கம் (குறுநாவல்)* https://tinyurl.com/thulakkam குறிப்பிட்ட நாட்களில் மதியம் 12.30க்கு தொடங்கி, மறுநாள் 12.29 வரை இச்சலுகை இருக்கும்.

  • போலிகள் போலிகள் -ஆஷா லெனின்

    இது விழிப்புணர்வு எச்சரிக்கைப் பதிவு “சாப்பிடவில்லை என்று போன் காட்டின அம்மாவை – அம்மா என்று அழைக்காத குழந்தைதான் ஆட்டிசம் என்று அழைக்கப்படும்” மேற்சொன்ன கருத்தை தனது முகநூலில் எழுதி உள்ளார் ஹோமியோபதி டாக்டர் ஆஷா லெனின். தனக்கு ஆனா, ஆவன்னா கூடத் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி பொதுத்தளத்தில் அடித்து விளாச ஒரு தனித் திறன் வேண்டும். இந்தக்காவுக்கு அது நிறையவே இருக்கு. இவங்கதான் ஆட்டிசக் குழந்தைகள காப்பாத்த புதுசா அவதாரமெடுத்திருக்கும் நவயுக அன்னை தெரசா.…

  • போலிகள் போலிகள்

    “சாப்பிடவில்லை என்று போன் காட்டின அம்மாவை – அம்மா என்று அழைக்காத குழந்தைதான் ஆட்டிசம் என்று அழைக்கப்படும்” மேற்சொன்ன கருத்தை தனது முகநூலில் எழுதி உள்ளார் ஹோமியோபதி டாக்டர் ஆஷா லெனின். தனக்கு ஆனா, ஆவன்னா கூடத் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி பொதுத்தளத்தில் அடித்து விளாச ஒரு தனித் திறன் வேண்டும். இந்தக்காவுக்கு அது நிறையவே இருக்கு. இவங்கதான்  ஆட்டிசக் குழந்தைகள காப்பாத்த புதுசா அவதாரமெடுத்திருக்கும் நவயுக அன்னை தெரசா. தொடர்புடைய பதிவில் பல பெற்றோர்…

  • புவியாழத்தில் வேர்விட்டு வானளாவிச் செழிக்கட்டும் குழந்தைகள்! -யூமாவாசுகி நேர்காணல்

    யூமா வாசுகி, தமிழின் குறிப்பிடத்தக்க நவீன எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், கவிதை, சிறுகதை, நாவல் என இலக்கியத்தின் சகல வடிவங்களிலும் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தவர். தமிழ்ச் சிறார் இலக்கியத்திற்கு மிகச்சிறப்பான பிறமொழிபடைப்புக்களைக் கொண்டுவந்து சேர்க்கும் முதன்மையான ஆளுமை இவர். தனது மனம் திறக்கிறார். தீவிரமான இலக்கிய உலகில் இயங்கிக்கொண்டிருந்த நீங்கள் சிறார் இலக்கியத்தின் பக்கம் எப்படி நுழைந்தீர்கள்? என் பாலபருவத்தில் சிறார் இலக்கியம் அதிகம் வாசித்தேன். வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் அது நின்றுவிட்டது. பிறகு, மலையாளம்…

  • ஆற்றுப்படை

    1 யெஸ்.பாலபாரதியின் நாவலைப் படிக்கப்போகிறீர்கள். ‘முத்திரள் உருவமாக’இந்தக் கதையில் சிலர் சந்திக்கிறார்கள். அவர்கள்  ‘மாய உருவமாகவும்’இருக்கிறார்கள். இந்தச் சொற்களுக்கிடையே இருக்கும் வேறுபாடு, அவற்றின் பொருள் உங்களுக்குப் புரிகிறதா? 2 இது அறிவியல் புனைகதையா, மிகுபுனைவா? மேலே சொன்ன இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ‘எல்லாம் ஒண்ணுதானே, படிக்க சுவாரசியமாக இருந்தால் போதாதா?’ என்று கேட்பவர்கள், இந்த அளவில் இதை வாசிப்பதை நிறுத்திவிட்டு, கதைக்குள் போய்விடுங்கள். இங்கே அந்த இரு வகைகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டைப் பார்க்கப்போகிறோம். அறி(வியல்) புனைகதை…

  • பூமிக்கு அடியில் ஒரு மர்மம் – சிறார் நாவலுக்கான முன்னுரை.

    புதியகதையுடன் உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி! இக்கதையின் களம் நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் நடைபெறுகிறது. சிலஇடங்கள் நிஜத்தில் உள்ளவை. மற்றவை வழக்கம்போலக் கற்பனையானவை. இதுவொரு சாகச, த்ரில்லர், சஸ்பென்ஸ் வகைக்கதை. எனது முந்தைய கதைகளைப் போலவே இதுவும் பதின்பருவத்தினருக்கான கதைதான். இதில்சில நண்பர்கள் சேர்ந்து, ஒரு சுரங்கத்தைக் கண்டறிகின்றனர். அதன் உள்ளே இருப்பதை அறியவும் சுரங்கத்தின் இன்னொரு வாசலைத்தேடியும் அவர்கள்அதற்குள் நுழைகின்றனர். அங்கே அவர்களுக்கு என்ன நேர்கிறது? அங்கே எதையெல்லாம் பார்க்கிறார்கள் என்பதைப் படித்து…