Author: admin

  • மந்திரச் சந்திப்பு- 3

    ஷாலுவின் கண் முன் மரப்பாச்சித் தோன்றியது. வேறு ஆடைகள் அதற்கு அணிவிக்கப்பட்டிருந்தது. ஆடை மாறினாலும் அதனை அடையாளம் காண்பது ஷாலுவிற்கு என்ன கடினமா என்ன? மரப்பாச்சியைப் பார்த்த்துமே அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது, “ஏய்! ஷாலு ஏன் இப்ப அழுரே!” “சாரி இளவரசி, நான், உன்னைய தொலைச்சிட்டேன். இப்ப நீ எங்க இருக்க? எப்படி இருக்க?” “ஹா..ஹா.. இதுக்கா அழுகிறாய். நீ என்னை தொலைக்கவில்லை ஷாலு. நானாகத்தான் உன் கையில் இருந்து நழுவிக்கொண்டு போனேன். இப்போ இங்கே…

  • மந்திரச் சந்திப்பு- 2

    யாரை சந்திக்க விரும்புகிறாயோ அவர்களை இந்த அறைக்குள்ளேயே கொண்டுவருகிறேன் என்று சுண்டைக்காய் இளவரசன் சொன்னதும் முதலில் வியந்துபோனான் சூர்யா. பின் சுதாரித்துக்கொண்டு, யாரை அழைக்கலாம் என்று யோசித்தவனுக்கு ஊரில் இருக்கும் தங்கை ஷாலு நினைவு வந்தாள். (ஆம்! மரப்பாச்சி சொன்ன ரகசியம் கதையில் வந்தே அதே ஷாலினிதான்.) ”என்ன யோசனை செய்தாயிற்றா இல்லையா?” என்று கேட்டான் சுந்தரன். “ம்.. ஊரில் இருக்கும் என் தங்கை ஷாலினியை இங்கே வரவைக்க முடியுமா?” “ஹா..ஹா.. ஏன் முடியாது? நான் சொல்லுகின்றபடி…

  • மந்திரச்சந்திப்பு- 1

    மந்திரச்சந்திப்பு- 1

    1. அந்த அறைக்குள் சுவரில் சரிந்து அமர்ந்திருந்தான் சூர்யா. அவனைச் சுற்றிலும் பல கதைப்புத்தகங்கள் சிதறிக்கிடந்தன. பரிட்சை அட்டையில் செருகிய காகிதத்தில், வாட்டர் கலரில் வரைந்த ஓவியம் ஒன்று மின்விசிறியின் காற்றினால் படபடத்துக்கொண்டிருந்தது. திறந்திருந்த ஜன்னலின் வெளியே நடமாட்டமே இல்லாத தெருவை எவ்வளவு நேரம் தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க முடியும். அப்புறம் படம் வரைந்தான். இந்த புத்தகங்களை எல்லாம் ஏற்கெனவே படித்துவிட்டான். இப்போது சோர்வார் அமர்ந்துவிட்டான். தலையை உயர்த்தி,  à®…றையைச் சுற்றிலும் நோட்டமிட்டன் சூர்யா. எத்தனை முறை…

  • அவசியமான முன்னெடுப்பு

    டெம்பிள் கிராண்டின்(Temple Grandin) கொலராடோ பல்கலைக்கழகத்தின் கால்நடை அறிவியல் துறையில் ஒரு பேராசிரியர். ஆட்டிச நிலையாளரான இவர் தனது சிறுவயதில் பல்வேறு வகையான சென்சரி பிரச்சனைகளை சந்தித்தவர். நல்வாய்ப்பாக தனது தகவல் தொடர்பாற்றலை மேம்படுத்திக் கொண்டு நிகர் சராசரி வாழ்வை(near normal life) அடைந்த சாதனையாளர். சிறுவயதில் அவருக்கு இருந்த எண்ணற்ற சிக்கல்களில் ஒன்று தொடு உணர்வைப் புரிந்து கொள்வதில் உள்ள குழப்பம். அதாவது எதை இறுகப் பற்றுவது, எதை மென்மையாகப் பற்றுவது என்ற புரிதல் இல்லாமல்…

  • யானை ஏன் முட்டை இடுவதில்லை? சிறுவர் கதை

    கதை படிக்க இங்கே செல்லவும்.யானை ஏன் முட்டை இடுவதில்லை?      யானை ஏன் முட்டை இடுவதில்லை?

  • அடி!அடி!அடி!

    எழுத்தாளர் ஜெயமோகன்அவர்கள் எழுதாப் பயணம் நூலினைக்குறித்து எழுதிய பதிவு இது   ஆட்டிச வளர்ச்சிக் குறைபாடு  கொண்ட சிறுவனாகிய கனியை ஒரு தனியார் பராமரிப்பாளரிடம் சிலநாள் அனுப்புகிறார்கள் அவன் பெற்றோர். அதன்பின் ‘அடி’ என ஒலிக்கும் எச்சொல்லைக் கேட்டாலும் அவன் வெறிகொண்டு  ’அடி! அடி! அடி!’ என கூவியபடி தன்னைத்தானே கைகளால் அடித்துக்கொள்கிறான். அங்கே அவனை அவர்கள் அடித்திருக்கிறார்கள். அடி என்னும் சொல்லுடன் அவன் அச்செயலை இணைத்துக்கொண்டிருக்கிறான். அதன்பொருள் அவனுக்குத்தெரியவில்லை லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் எழுதாப்பயணம் ஓர் அன்னையின்…

  • அரும்புக்கொண்டாட்டம் 2019

      மனித குலத்தின் வரலாற்றில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது என்ற செயலுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. முதன் முதலில் சக்கரத்தைக் கண்டுபிடித்தவர் அதை எப்படிச் செய்வது என்பதை அடுத்த தலைமுறையினரிடம் பகிர்ந்து கொள்ளாமல் போயிருந்தால்.. என்னவாகி இருக்கும்..? இன்று வரை நம் மனித இனத்தின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பாக சக்கரம் மட்டுமே இருந்திருக்கும். ஆம்! மீண்டும் மீண்டும் அதை மட்டுமே ஒவ்வொரு தலைமுறையும் கண்டுபிடித்துக் கொண்டு இருந்திருக்கக்கூடும். ட்ரெட் மில் இயந்திரத்தில் நின்ற இடத்திலேயே நடப்போமே, அப்படியாக…

  • சின்னச் சின்ன ஆசை :2 (கனியின் தோழன்)

    ஆட்டிச நிலையாளர்கள் பெரும்பாலும் ஏதாவதொரு கற்பனையில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். கண்களை கண் கொண்டு நோக்குவது, முகம் பார்த்து புன்னகைப்பது போன்ற செயல்களை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இப்படி இருப்பவர்களை எவர்தான் விரும்புவர். அதனாலேயே இவர்களுக்கு நண்பர்கள் வாய்ப்பது என்பது அரிது. பக்கத்தில் இருக்கும் ஒருவனை மதிக்காமல் கற்பனையில் மிதந்து கொண்டிருப்பவனை எந்த நண்பன் ஏற்றுக்கொள்வான். நட்பு என்பது ஒருவழிப் பாதை அல்லவே. இருவரும் பரஸ்பரம் பேசி சிரித்து பகிர்ந்துகொண்டால் மட்டுமே நல்ல நட்பு வளரமுடியும். இதன் காரணமாகவே…

  • அஞ்சலி : பிரபஞ்சன் எனும் ஆசான்

      மேடையில் குழுமி இருக்கும் பலருக்கும் பிரபஞ்சனை நேரடியாக அறிமுகம் இருக்கும். அவரோடு பேசியும் பழகியும் ஒன்றாக உணவருந்தியும் இருப்பீர்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிட்டியதில்லை. நான் எப்போதுமே அவரை மதிப்பு மிக்க எழுத்தாளராக, ஒரு வாசகனாக இருந்து மட்டுமே அணுகி இருக்கிறேன். அவர் கலந்துகொண்ட பல கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தாலும் பார்வையாளனாக, அவரது ரசிகனாக, ஆசிரியனைக்கண்டு பயம்கலந்த மரியாதையோடு விலகி நிற்கும் மாணவனாகத் தள்ளி நின்று, அவரை அவரின் ஆளுமையை ரசித்திருக்கிறேன். அவ்வளவுதான். பொதுவாக காவியம் என்பதன்,…

  • சின்னச்சின்ன ஆசை- சிறுவிளக்கம்

    சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தியை படித்தேன் இங்கிலாந்தில் உள்ள ஓர் ஆட்டிசநிலைச் சிறுவன் தினம்தோறும் வெவ்வேறு நாடுகளின் கொடிகளை தன் வீட்டு முன்னால் ஏற்றி வருகிறான். அந்த செய்தியை ஒட்டி அச்சிறுவன் மற்றும் அவன் தாயாரின் பேட்டிகளை பார்க்க நேர்ந்தது அப்பேட்டியில் அச்சிறுவன் சொல்லியிருந்த ஒரு விஷயம் என் மனதில் தைத்தது. ஒவ்வொரு நாளும் “காலையில் எழும்போது எதற்காக இன்று எழவேண்டும் என்ற என் கேள்விக்கு இந்த கொடியேற்றும் செயல் ஒரு நல்ல பதிலாக இருக்கிறது”…