Category: அனுபவம்

  • புதுவருட நல்வாழ்த்துகள் 2013

    பதிவுகளில் எப்போதுமே கொசுவர்த்தி சுத்துவதுதான் வேலை என்பதால்.. டிசம்பர் 31ம் தேதியோ, ஜனவரி 1ம் தேதியோ திரும்பிப் பார்க்கிறேன்; சைடுல பார்க்கிறேன்; ஓரமாக பார்க்கிறேன்; மேலே ஆகாயம், கீழே பூமிங்கிற ரோஞ்சுல எழுத என்னிடம் புதிதாக ஏதுமில்லை. தொடர்ந்து ஃபர்பாக்ஸ் பயனர் என்பதால் அவங்களின் போஸ்டருடன், நானும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறேன். அத்துனைபேரும் புதுவருட நல் வாழ்த்துகள்!!

  • டோட்டோ சான் – ஜன்னலில் ஒரு சிறுமி

      டெட்சுகோ குரோயாநாகி என்ற பெண்மணி தன் வாழ்க்கையை திரும்பிப் பார்த்திருக்கும் கதை தான் டோட்டோசான். டெட்சுகோ குரோயாநாகி பின்னாளில் ஜப்பான் முழுக்கத் தெரிந்த முகமானார். தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியில் இருந்தார். (இப்போது ஓய்வில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்) தொடர்ந்து மிகச்சிறந்த பல விருந்துகளைப் பெற்றிருக்கிறார். இந்நூல் வெளியான ஒரே ஆண்டில் 45 லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்திருக்கிறது. டோமாயி தொடக்கப்பள்ளி, நாம் பார்த்து வளர்ந்த பள்ளி போல, சாதாரணப்பள்ளி அல்ல. இனி பயன்படாது என ஒதுக்கப்பட்ட,…

  • பக்கத்து வீட்டு ரவுசு – பாகம் 2

    படித்தால் மட்டும் போதுமா-ன்னு ஒரு பழைய படம் நீங்கள் பார்த்திருக்கலாம். கண்ணதாசன் வரிகளுக்கு PB ஸ்ரீநிவாஸும், TM சௌந்தர்ராஜனும் உயிர் கொடுத்திருப்பார்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. அந்த பாடலுக்கு படத்தில் பாலாஜியும், சிவாஜியும் நடித்திருப்பார்கள். நீச்சல் குளத்துக்குள்ளிருந்து.. பாடுவது போல படமாக்கி இருப்பார்கள். சில நாட்களுக்கு முன் காலை அப்பாடல் மெகா டிவியில் ஒளிபரப்பானது. “பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்லவேண்டுமா பூ ஒன்று கண்டேன் முகம்…

  • தெரிந்ததும்.. தெரியாததும்- தாராவி

    தாராவி குடிசைப்பகுதியா? மும்பையில் இருந்த சமயங்களில் என்னை அதிகம் கவர்ந்த பகுதிகளில் தாராவியும் ஒன்று. எங்கு பார்த்தாலும் தமிழில் சாயல் முகங்கள்.. வேட்டி, சேலைகளில் மனிதர்கள், மனுசிகள்.., சத்தமாக தேனீர்கடையில் கேட்கும் தமிழ் பாடல்கள், தமிழில் பெரிய பெரிய விளம்பரப் பலகைகள்.. என்று எங்கு பார்த்தாலும் தமிழ்நாட்டின் ஏதோவோரு நகரத்தை.. பார்ப்பவரின் பார்வைக்கேற்ப காட்டும் பகுதி தாராவி. தமிழ்நாட்டுக்கே வந்து விட்ட உணர்வை அது தோற்றுவிக்கும். அப்படிப்பட்ட தாராவி குறித்து… “ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி; இரண்டாம்…

  • தெரிந்ததும்.. தெரியாததும்- பீடி தொழில்

    என் சிறு வயதில் எங்க ஊரில் ஓர் அப்பத்தா பீடி புகைத்து பார்த்திருக்கிறேன். ஆரம்பகாலத்தில் தாத்தாவோடு சேர்ந்து சுருட்டு புகைத்தாராம். அவரின் மறைவுக்குப் பின் பீடிக்கு மாறியவர் அப்பத்தா! குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து பிடிகள் வரை புகைப்பார். ஆனாலும் அவருக்கு சளி கட்டியோ, இருமல் இருந்த மாதிரியோ நினைவில் இல்லை. ராமேசுரத்திற்கு சுற்றுலா வரும் உ.பி மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாய மக்கள் பலரும் ஆண்,பெண் பாகுபாடில்லாமல் புகைத்து மகிழ்வதை பார்த்திருக்கிறேன். இன்றைய இந்தியாவில்…

  • வாங்க பழகலாம்..

    சின்ன வயசில் நான் மிகவும் வியப்பாக பார்த்த மனிதர் என்றால் அது நாகராசன் என்ற அண்ணன் தான். அவர் ஒரு சவ்வு மிட்டாய் வியாபாரி. தோளில் பெரிய மூங்கிலை சாய்த்து வைத்திருப்பார். அந்த கழியின் மேல பாவாடைச் சட்டை அணிந்து, கையில் சலங்கை மாட்டி இருக்கும் பெண் பொம்மை பார்க்க அழகாக இருக்கும். கண் எழுதி, உதட்டுக்கு சாயமிட்டு, தலைவாரி, காதுகளில் கம்மல் மாட்டிக்கொண்டு இருக்கும் பொம்மை அது. மூங்கிலில் உள்ளே இருந்து வரும் கயிறு ஒன்றில்…

  • என்னைப் போல் ஒருவன் (The King’s Speech)

    திக்குவாயன் பாலா.. இப்படித்தான் படிக்கும் காலங்களில் அழைக்கப்பட்டேன். ஒரு வயதுக்குள்ளாகவே பேச்சு வந்த குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஒன்னரை வயது நடந்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த சைக்கிள் தலையில் விழுந்து, பலத்த அடிபட்டுவிட்டது. பதிநான்கு தையல் போட்டு விட்டு, இனி பையன் பேசவே மாட்டான் என்று சொல்லி விட்டார்கள் மருத்துவர்கள். எட்டு  மாதங்கள் எதுவும் பேசாமல் மௌனியாகவே வீட்டுக்குள் அலைந்திருக்கிறேன். என் தேவைகளைக்கூட சைகையின் மூலமே தெரியபடுத்தி வந்திருக்கிறேன். அப்புறம் ஒரு நாள் கொஞ்சம்…

  • மாற்று எரிசக்தி..

    முதலில் கருணாநிதியை குற்றம் சாட்டினார்கள்.. இப்போது ஜெயலலிதாவைக் குற்றம் சாட்டுகிறார்கள்.. நாம் செய்ய வேண்டியவை/ அறிந்து வைத்திருக்க வேண்டியவை என எனக்குத் தோன்றும் சில கருத்துக்களின்/விடயங்களின் பட்டியல் இதோ.. தினம் எட்டுமணி நேரம் மின்வெட்டு என இன்று (08.02.12) அறிவித்திருக்கிற அரசு. அப்படியே மாற்று எரிசக்திக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் போறோம்னும் சொல்லி இருக்கலாம்/ சொல்லவேண்டும். வழிப்பாட்டுத் தலங்கள், அரசு/ அரசியல் விழாக்கள், வணிக நிறுவனங்கள் என சீரியல் பல்பு எரியவிடுவதைத் தடை செய்யலாம். அப்படியும் அவர்கள்…

  • நம்ம ஊர் பேய், வெள்ளைக்கார பேய் – ?!

    நம்மவர்கள் அனேகரிடமும் ஒரு பேய் கதைகள் இருக்கும். என்னிடமும் ஏராளமான கதைகள் உண்டு. ரத்தக்காட்டேரி, தலை இல்லா முண்டம் (முண்டம் என்றாலே தலை இல்லாததுன்ன தானே பொருள்?!), கொள்ளி வாய் பிசாசு தொடங்கி, கிணற்றில் விழுந்து உயிர் நீத்த காந்திமதி அக்கா, மரத்தில் தொங்கிய செந்தில் அண்ணன் என ஊருக்கு ஊர் விதவிதமான சம்பவங்களும், கதைகளும் இருக்கும். ஆனால் மற்றவர்களின் கதைகளில் வரும் படியான கொடுரமான பேய் எதையும் நான் பார்த்ததில்லை. சிறுவயதிலிருந்தே அப்படி வளர்க்கப்பட்டது ஒரு…

  • ஒரு முன்கதைச் சுருக்கம்

    பாடப் புத்தகங்கள், புராண இதிகாசக் கதைகள் தவிர்த்து வேறு ஏதும் படிக்கத் தக்கவையே அல்ல என்று தீவிரமாக நம்பும் பின்புலத்தில் வளர்ந்தாலும் நான் மட்டும் மந்தையிலிருந்து பிரிந்த ஆடாக கதை, கவிதைப்புத்தகங்களில் பொழுதை வீணடிப்பது என் குடும்பத்தினரை ரொம்பவே வருத்தியது. இதனால் நிறைய மனஸ்தாபங்கள். ஒரு கட்டத்தில் மும்பைக்குச் செல்ல வேண்டிய சூழல். சொந்தமண்ணைப் பிரிந்து, மும்பைக்கு போய்ச் சேர்ந்த பிறகுதான் வாழ்க்கையை நேரடியாக உணரத்தொடங்கினேன். அதுநாள் வரையில் நூல்களின் வழியே கற்றுத்தேறிய வாழ்க்கையை நிஜ அனுபவ…