Category: அனுபவம்

  • ஈரோடு சங்கமம் – எவ்வளவு முடியுமோ அவ்வளவு லேட்டா..

    ஈரோடு சங்கமம் நிகழ்ச்சியில் விருது வழங்க என் பெயரை தேர்வு செய்திருப்பாதாகவும், விழாவில் கலந்துகொள்ள ஒப்புதல் கேட்டும் மின்னஞ்சல் வந்த்தும் கொஞ்சம் மிரண்டு தான் போனேன். சும்மாவே மெல்லுவாய்ங்க.. ஈரோடு ஆட்கள் பக்கோடா கொடுக்கப்பாக்குறாய்ங்களேன்னு தான் முதலில் தோணிச்சு. நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன், எதுக்கும் கொஞ்சம் யோசிக்க அவகாசம் வேணும்னு கேட்டு கதிருக்கு பதில் அனுப்பினேன். அவரோ 24மணி நேரம் கெடு கொடுத்தார். வலை உலகின் மூலம் அறிமுகமாகி, உடன் பிறந்த அண்ணன் போலாகிவிட்ட, மா.சிவக்குமாரிடம்…

  • விடுபட்டவை 25-11-11

    பகலில் சூரியனோடும், இரவில் சந்திரனோடும் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையை தமிழக மக்களுக்கு தருவதற்காகவே டங்கடாரகை மின்சாரத்தின் விலையை ஏற்றி இருக்கிறார் என்பதை டமில் பீப்பிள் உணரவேண்டும். #அண்ணா நாமம்.. எம்.ஜி.ஆர் நாமம்.. டங்கடாரகை நாமம். மொத்தம் !!! குறிப்பு:- கிடைத்த முதல் தகவலின் படி: தமிழக அரசு மின்கட்டண உயர்த்தப்போவது அறிந்திருப்பீர்கள். வீடுகளுக்கு 1-100 யூனிட் மின்சாரம் ரூ.1.50 என்றும் 101-முதல் 600 வரை ரூ.5.75/-என்றும் தீர்மானித்திருப்பதாக சொல்கிறார்கள்.(நிறுவனங்களுக்கு வேறு கதை) ———— கொஞ்ச நாட்களாகவே…

  • எச்சரிக்கை: ON LINE FRAUD

    கடந்த ஆகஸ்ட் மாதம் http://www.indiavarta.com/ இணையதளத்தின் மூலம் ஒரு பொருள் வாங்க ஆடர் செய்தேன். பொருளின் விலை ரூ. 1.799.00/-. ஐசிஐசிஐ வங்கி மூலம் பணம் செலுத்தினேன். பணம் செலுத்திய சில நிமிடங்களியேயே ஏதோ எரர் காட்டி, அந்த பக்கம் வேலை செய்ய வில்லை. அதனால் இன்னொரு முறை http://www.indiavarta.com/ தளத்தில் குறிப்பிட்ட பொருளுக்கு இன்னோரு முறை பணம் செலுத்தி, ஆடரை உறுதி படுத்தினேன். (இதற்குள் முதல் தடவையே வங்கில் இருந்து பணம் எடுக்கப் படிருந்தது. )…

  • தூக்கு தண்டனையை எதிர்ப்போம்! மனித நேயத்தை காப்போம்..

    உலகம் முழுவதும் பல நாடுகளில் தூக்கு தண்டனை என்பது உச்சபட்ச தண்டனையாக இருந்து வருகிறது. அதே சமயம்.. தூக்கு தண்டனைக்கு எதிராக பல பகுதிகளில் இருந்தும் எதிர்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. சமீபத்தில் பேரரிவாளன் உட்பட மூன்று பேரின் கருணை மனுவை நிகாரித்துள்ளது, ஜனாதிபதி அலுவலகம். ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு உதவிய காரணத்திற்காக இத்தண்டனை என்று சொல்லப்படுகின்ற போதும், இதுவரை செய்த குற்றத்தை நிறுவவில்லை அரசு. கட்டாயப்படுத்தியே.. வாக்குமூலம் பெறப்பட்டதாக வருகின்ற செய்திகளை காவல்துறையும் மறுக்க வில்லை. ஊழல்…

  • பாலபாரதி -மா.சிவக்குமார்

    Tuesday, January 06, 2009 பாலபாரதி 2007ம் ஆண்டு சனவரி மாதம். வலைப்பதிவுகள் எழுத ஆரம்பித்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தது. அருள் குமாரை சில முறை சந்தித்து எழுத்து, வாழ்க்கை குறித்து பேசியிருந்தேன். ஏதோ ஒரு விடுமுறை நாள், ஞாயிற்றுக் கிழமையோ, பொங்கல் நாளோ, அல்லது குடியரசு தினமோ நினைவில்லை. வீட்டில் இணைய இணைப்பு இல்லை, வீட்டுக்கு எதிரில் இருந்த இணையக் கூடத்தில் போய் பின்னூட்டங்களையும் புதிய பதிவுகளையும் மேய்ந்து கொண்டிருந்தேன். அப்போது அதுதான் வாழ்க்கையின்…

  • முகமொழி – கவிஞர் பாலபாரதி

    முகமொழி – கவிஞர் பாலபாரதி கவிஞர் பாலபாரதி சமத்துவபுரம் கழிவுநீர் சுத்தம் செய்ய அதே கருப்பன் விறகு விற்க பேரம் நடந்தது மர நிழலில் சாம்பலான குடிசைகள் அடுக்கப் பட்ட சடலங்கள் தின்று திமிறும் சா…தீ புதிய ஊர் புரியாத மொழி ஆறுதலாய் அதே நிலா கழுத்தில் கனத்தது ஓடிப்போன கணவனின் தாலி அன்பை போதிக்கும் மதம் ஆயுதமேந்தி ஆண்டவன் பசிக்கும் வயிறு சாப்பாட்டுக் கூடை சுமந்தபடி அவள் பாஸ்போர்ட் இல்லாமல் இந்திய எல்லைக்குள் வெளிநாட்டுப் பறவைகள்…

  • ராமனின் பெயரால்..

    விவரணைப் படங்களில் உலக அளவில் பேசப்படும் இந்திய இயக்குனர் ஆனந்த் பட்வர்த்தன். பல விருதுகளைப் பெற்றிருக்கும் இவரின் பல படங்கள் அரசு இயந்திரத்திற்கு எதிரானவையாக இருந்திருக்கின்றன. அதேசமயம் சாமானியர்களில் வாழ்க்கை பிரச்சனையை பேசும் படங்களாகவும் அவை இருப்பது இயல்பானது. 2002ல் மும்பையில் நடந்த உலகத்திரைப்பட விழாவில் இவரின் ‘வார் அண்ட் பீஸ்’ படம் திரையிடப்பட்டு, சர்ச்சைகளுக்கு மத்தில் விருதுக்கு தேர்வானது. அப்போது அதே விழாவில் தான் இப்படத்தினை பார்த்தேன். அதன் பின் ஆனந்த் பட்வர்த்தனின் சில படங்களை…

  • நாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா- ஓர் இனிமையான அனுபவம்

    விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் நாஞ்சில் நாடனுக்கு சென்னையில் பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ரஷ்யன் கலாச்சார மையத்தில் மாலை 6.30மணிக்கு என்று அறிவித்திருந்தார்கள். கொஞ்சம் முன்னதாகவே போய்ச்சேர்ந்தோம். நண்பர்கள் ரங்கசாமி, கே.ஆர்.அதியமான் போன்றவர்கள் எனக்கு முன்னமே வந்திருந்தனர். அப்படியே அவர்களோடு பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தினர் எல்லோரும் வேட்டியில் வந்து அசத்தியிருந்தனர். புளியமரம் தங்கவேலுவையும் பார்த்தேன். மனுசன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்து ஆறுமாசம் ஆச்சாம். தெரியவே இல்லை. 🙁 ஆறுமணிக்கு சற்று முன்னதாக நாஞ்சில், ஜெமோ,…

  • ஜனவரி-3, சென்னையில் நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா

    நாஞ்சில் நாடன் இவ்வாண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தாமதம் தான் என்றாலும் சரியான நபரை விருதுக்குழு தேர்வு செய்திருப்பது கொஞ்சம் ஆசுவாசத்தை தந்தது. சந்தேகமில்லாமல் எதிர்வரும் புத்தகக்கண்காட்சியில் இம்முறை நாஞ்சில் நாடனின் நூல்கள் அதிகம் விற்பனையாகும். ’டாப் செல்லர்’ அண்ணாச்சி தான் 🙂 . ஒரு வாசகனாகவும், முன்னாள் புத்தக விற்பனையாளனகவும் நான் பார்த்த அனுபவத்தில் சொல்லுகிறேன். (என்ன செய்ய.. உண்மையான எழுத்துக்குக்கூட, விருது போன்ற அரிதாரங்கள் தேவைப்படுகிறது, அப்போது தான் மக்களின் கவனம்…

  • மண்ணையும் மக்களையும் நேசிக்கும் நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது

    ”… யதார்த்த நாவல் என்றால் நமது அதிநவீனத் தமிழ்ப் படைபாளிகளிடம் இதழ்க்கடையோரம் இளக்காரமானதோர் கீற்றொன்று காணப்படும். யதார்த்தவாதத்துக்கும் எல்லை ஒன்று இன்மை எனும் தன்மை உண்டு. வெளிப்பாட்டின் தீவிரத்தன்மை தரிசனத் தேடல் இவை இருக்கும் படைப்பாளிக்கு எந்த வடிவமும் சிறந்த வடிவம் தான்…” – நாஞ்சில்நாடன் (கீரனூர் ஜாகிர்ராஜா எழுதிய துருக்கித்தொப்பி நாவலின் முன்னுரையில்..) இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருதுக்காக  தமிழ் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ”சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதை தொகுப்பு தேர்வு…