Category: அனுபவம்

  • அருணா-வை கருணைக் கொலை செய்ய உதவுங்கள் பதிவர்களே..

    37 ஆண்டுகளுக்கு முன் நடந்த அருணாவின் சோகக் கதை தான் இந்த பதிவு முன்னமே இது பற்றி வலைப்பதிவில் எழுதி இருக்கிறேன். ———————– ‘உங்களுக்கு மேரி டிரின்டிக்னன்டை தெரியுமா….?’ “தெரியாது…” ‘எலிசபெத் ராட்-க்ரானெஜ்-ஐ…?’ “தெரியாதுங்களே…” ‘என்னங்க… இவங்களை எல்லாம் தெரியாதுங்கிறீங்க… இவங்கலெல்லாம் பெண் விடுதலைக்காக குரல் கொடுத்த வெளிநாட்டுக்காரங்க…’ என்று விடை சொன்னவரின் கையில் வார இதழ் ஒன்று இருந்தது. “அப்படியா… எனக்கு வெளிநாட்டுக்காரங்கள பத்தியெல்லாம் தெரியாதுங்க… அதுவும் பெண்விடுதலைக்காக குரல் கொடுத்தவங்களை சுத்தமா தெரியாது. ஆனா……

  • வலைப்பதிவரோடு BAR-க்கு போறீங்களா.. ஒரு நிமிசம்..!

    டிஸ்கி:- இந்த பதிவில் வரும் வார்த்தைகள் எதுவும், தனி நபரையோ, குழுவையோ அல்லது எவரையும் யாரையும் குறிப்பிடுபவன அல்ல. இவை அனைத்தும் நிகழக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால்.. கற்பனையாக எழுதப்பட்டவைகளே.. உஷாரா இருக்க வேண்டியது அவரவர் பொறுப்பு! — 1. தண்ணியடிக்க பதிவர் யாரவது வலிய வந்து கூப்பிட்டால்.. அதுவும் தொடர்ந்து சில நாட்கள் வற்புறுத்தினால் கொஞ்சம் யோசிப்பது நல்லது. 2. வலிய வந்து அழைப்பவருடன் பாருக்கு செல்வது என்பது தவிர்க்கவே முடியாது என்றால்.. தலையில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு…

  • அப்பா!

    தலைக்கேறிய போதையில் அம்மாவை அடிக்கும் அப்பாக்களும், அதற்காக மகனிடம் அடிவாங்கிய அப்பாக்களையும் நிறைய பார்த்திருக்கிறேன். தன்னால் செய்யமுடியாமல் போன காரியங்களை தன் வாரிசு வடிவில் நிறைவேற்றிக்கொள்ள அவர்களை கட்டாயப்படுத்தும் தந்தைகளையும் நாம் அறிவோம். ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவ சிந்தனைகள் இருக்கும். தங்களின் குடும்பத்திற்காக அப்பா, அம்மா என்ற உறவுகளின் எண்ணங்களுக்காக அவற்றை இழந்தவர்களை பட்டியல் போட்டால் அது நீளும். நான் உன்னோட அப்பாடா.. எனக்குத்தெரியும் நீ என்ன படிக்கனும்னு என்று படிப்பு விசயத்தில் தொடங்கி, பல்வேறு கட்டங்களில்…

  • விடுபட்டவை 03/ஜூன்/2009

    “பூவுலகு” சுற்றுச்சூழல் இதழ் வெளியீட்டு விழா, நாள்: 13–06–09 மாலை 6 மணிக்கு நடக்கிறது. வாய்ப்பு இருப்பவர்கள் அவசியம் கலந்துகொள்ளவும். இடம்: ரஷ்ய கலாச்சார மையம், 74, கஸ்தூரி ரங்கன் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை – 600 018 விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தேடும் “I want my father back“ என்ற குறும்படம் திரையிடப்படவிருக்கிறது. —- கலைஞர் கருணாநிதியின் 86வது பிறந்தநாள் இன்று. அறிவாலயம் களைகட்டியது. காலையில் இருந்து பார்த்த சிலவற்றை தருகிறேன். ஆண்டு…

  • கருணாநிதி என்ற மனிதர்..

    எப்போதுமே முரண்பாடுகள் இன்றி வாழ்வதென்பது சாத்தியமில்லாத ஒன்று. முரண்பாடுகளின் மூட்டை தான் வாழ்க்கை. தி.மு.கழகத்துடன் எனக்கு சில இடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், பல இடங்களில் ஒத்துப்போவது என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. அதுபோலத்தான்.. அதன் தலைவர் மு.கருணாநிதி மீதும் தி.மு.கழகத்தின் மீதும் பல சமயங்களில் விமர்சனம் வைத்திருக்கிறேன். அதற்காக சில/பல நல்ல காரியங்களைச் செய்யும் போது பாராட்டாமல்  இருக்க, நான் ஒன்றும் ஜெயலலிதா அல்ல! 🙂 எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நம்மில் பலரும் வாசித்திருப்போம். இன்று…

  • இனி அகதிகள் கதி என்ன?

    தொடர்ந்து சிங்கள அரசும், இந்திய அரசும், ஊடகங்களும் பிடிவாதமாக பிரபாகரனும், புலிகள் இயக்கமும் அழிந்து விட்டதாக சாதிக்க முயல்கின்றன. இடையிடையே வெகு சில ஊடகங்கள் அப்படியொன்றும் நடந்து விடாது என்ற நம்பிக்கையை பற்பல ஊகங்கள் மூலமும், உலாவரும் ஆதாரங்களின் மீதான சந்தேகங்கள் மூலமும் உயிர்ப்பிக்க முனைகின்றன. நிறைய அஞ்சலி கட்டுரைகள் – சில நிஜமான ரத்தக்கண்ணீரோடும், சில உள்ளுக்குள்ளே எழும் நிம்மதி பெருமூச்சை அடக்கிக் கொண்டும் எழுதப்பட்டு இணையமெங்கும் இறைக்கப் பட்ட வண்ணம் இருக்கின்றன. போர் ஓய்ந்து…

  • தனக்கு தானே விருது.. நன்றி அண்ணாச்சி!

    பொதுவாக எனக்கு விருதுகள் மீது நாட்டமில்லை. இதற்கு காரணம்.. எனக்கு எவன் கொடுப்பான் என்ற உள்ளார்ந்த குமைச்சலின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.  அதனாலேயே எந்த போட்டிகளிலும் கூட அதிகம் ஆர்வம் காட்டியதுமில்லை. சமீபத்தில் தமிழ்மணம் விருதுகளுக்கு விண்ணப்பிக்கச் சொன்னபோது கூட நான் செய்யவில்லை. அப்புறம், கிடைக்கும் வாய்ப்புகளில் வலைப்பக்கம் வந்து எட்டிப்பார்த்தால், பட்டாம்பூச்சி விருது அநேக பதிவுகளில் சிறகடித்துக் கொண்டிருந்தது. சிறகடிக்கும் பட்டாம்பூச்சியின் ரகசியம் குறித்து டாக்டர். புருனோ, லக்கி, முரளி கண்ணன், கேபிள் சங்கர், நர்சிம் ஆகியோருடன்…

  • எச்சரிக்கை:- ‘புனித கங்கை’படங்கள் -இதயம் பலகீனமானவர்கள் தவிர்க்கவும்

    இதுவும் மின்னஞ்சல் வழி வந்த படங்கள் தான். 2002ல் நானும் வாரணாசி என்ற காசிக்கு போய் வந்திருக்கிறேன். அப்போது ஒரு வார இதழில் பணியாற்றி வந்தேன். அவர்கள் செலவில் சுற்றிய சுக அனுபவம் அது.  🙂 காசிக்குப் போயும் கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. ஊடகங்களும், புராணங்களும் காட்ட்சிய காசி அல்ல நான் பார்த்தது. மிகவும் மலிவானதொரு காசியைத் தான் தர்ருசிக்க முடிந்தது. ஆனால்.. இதை எங்கள் வீட்டினருக்கு போனில்  சொன்ன போது என் அம்மா…

  • புத்தக கண்காட்சிக்கு போறீங்களா..? ஒரு நிமிசம் ப்ளீஸ்!!

    இது புத்தகப்பிரியர்களுக்கு திருவிழாக் காலம்.ஜனவரி மாதம் என்றாலே புத்தக கண்காட்சி, புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாக்கள், எழுத்தாளர்களை சாதாரணமாக அடிக்கடி சந்திக்கமுடிகின்ற வாய்ப்பு எல்லமே இந்த மாதம் நிகழும். சிறந்த நூல்கள் புதிய நூல்கள் என வலை உலகில் அனேகர் டாப் டென் தொடங்கி டாப் நூறு வரை புத்தகங்களின் பட்டியலை போட்டு விட்டார்கள். நான் ரசித்த நூல்களின் சிறு பட்டியல்.. வாசிக்கும் வழக்கம் உடைய அனைவரிடமும் இருக்கவேண்டியதாக நான் கருதும் நூல்களின் லிஸ்ட் இதோ.. 1.…

  • ஒரு முக்கிய அறிவிப்பு

    நண்பர்களே! வலையுலகம் கண்டிராத ஒரு புதுமையான தொடர்பதிவு இது. இருவர் மட்டுமே பங்குபெற முடிந்த, இத்தொடரின் முதல் பகுதி இங்கே. கடைசியாக(துவக்கமாக!) என் வாழ்க்கையிலும் திருமணம் என்ற சடங்கு நடந்தேறி விட்டது. ஏகப்பட்ட மனவருத்தங்களிருந்தாலும் பெற்றவர்களின் ஆசியுடன் 20.08.08 அன்று நானும் தோழி லக்ஷ்மி அவர்களும் வாழ்கையை இணைந்து துவக்கி விட்டோம். சென்னை வந்தபிறகு செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில்… வாழ்க்கைத் துணை அறிமுகமும் தேநீர் விருந்தும் வைப்பது  என முடிவு செய்திருக்கிறோம். இடமும்…