Category: எதிர் வினை

  • புரிந்துகொள்ளுங்கள் மக்களே!

    நம்மில் பலரும் உடலியக்கம் அளவில் மகிழ்ச்சியான வாழ்வே வாழ்கின்றோம். அதனால் தான் பிறர் வலியை உணர்வதே இல்லை. ஆம்! மாற்றுத்திறனாளிகள் என்ற சமூகத்தில் வலியும் கனவுகளைப் பற்றியும் அறியாதவர்களாகவும் அதுபற்றிய பிரக்ஞை கூட இல்லாதவர்களாகவுமே உள்ளோம். பல இடங்களிலும் எல்லோரையும் உள்ளடக்கிய சூழல் உருவாக வேண்டும் என்பதைப் போலவே சில இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தனிப்பட்ட சில வசதிகளும் தேவை என்பதை உணர்வோம். ரயில் நிலையம் தொடங்கி, மருத்துவமனை, விமானநிலையம் என எல்லா இடங்களிலும் தளம் வழுவழுப்பாக…

  • நிப்மெட்டை -மாற்றாதே!

    எனது தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு நிப்மெட் பற்றி அறிந்த்திருப்பீர்கள். பலமுறை அதனைப்பற்றி நான் எழுதி உள்ளேன். பேசி உள்ளேன். ஆண்டுக்கு குறைந்தது 500 பெற்றோர்களையாவது அங்கே செல்லும்படி அறிவுறுத்தி வருகிறேன். நிப்மெட் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட வளர்ச்சிக்குறைபாடு உடையவர்களின் மேம்பாட்டுக்கான நிறுவனம். சென்னை, முட்டுக்காடு பகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. காங்கிரஸ்- திமுக ஆட்சியின் போது தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிறுவனம் இது. இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு உடையவர்களுக்கா நாட்டில் உள்ள நிறுவனங்களிலேயே இது…

  • போலிகள் போலிகள் -ஆஷா லெனின்

    இது விழிப்புணர்வு எச்சரிக்கைப் பதிவு “சாப்பிடவில்லை என்று போன் காட்டின அம்மாவை – அம்மா என்று அழைக்காத குழந்தைதான் ஆட்டிசம் என்று அழைக்கப்படும்” மேற்சொன்ன கருத்தை தனது முகநூலில் எழுதி உள்ளார் ஹோமியோபதி டாக்டர் ஆஷா லெனின். தனக்கு ஆனா, ஆவன்னா கூடத் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி பொதுத்தளத்தில் அடித்து விளாச ஒரு தனித் திறன் வேண்டும். இந்தக்காவுக்கு அது நிறையவே இருக்கு. இவங்கதான் ஆட்டிசக் குழந்தைகள காப்பாத்த புதுசா அவதாரமெடுத்திருக்கும் நவயுக அன்னை தெரசா.…

  • மாற்று எரிசக்தி..

    முதலில் கருணாநிதியை குற்றம் சாட்டினார்கள்.. இப்போது ஜெயலலிதாவைக் குற்றம் சாட்டுகிறார்கள்.. நாம் செய்ய வேண்டியவை/ அறிந்து வைத்திருக்க வேண்டியவை என எனக்குத் தோன்றும் சில கருத்துக்களின்/விடயங்களின் பட்டியல் இதோ.. தினம் எட்டுமணி நேரம் மின்வெட்டு என இன்று (08.02.12) அறிவித்திருக்கிற அரசு. அப்படியே மாற்று எரிசக்திக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் போறோம்னும் சொல்லி இருக்கலாம்/ சொல்லவேண்டும். வழிப்பாட்டுத் தலங்கள், அரசு/ அரசியல் விழாக்கள், வணிக நிறுவனங்கள் என சீரியல் பல்பு எரியவிடுவதைத் தடை செய்யலாம். அப்படியும் அவர்கள்…

  • அணு உலைக்கு எதிராக அதிரடி நோட்டீஸ்!

    100 நாட்களுக்கு மேலாக தொடர்ந்துகொண்டிருக்கிறது… கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம். இந்தபோராட்டைத்தை மழுங்கடிக்க அணு உலைக்கு ஆதராவாகவும் போராட்டங்கள்…பிரஸ்மீட்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.”அணு உலை பாதுகாப்பானதுதான். ஏற்கனவே… அணு உலை இயங்கிவரும் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை சுற்றியுள்ள மக்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறார்கள்.அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை” என்று  அணுசக்தித்துறை விஞ்ஞானிகள், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், அஸ்பியர்(ASPIRE) தொண்டு நிறுவனத்தின் காரணிவியல் டாக்டர்.மஞ்சுளா தத்தா, மத்திய ஆய்வுக்குழுவினர், அடையார் புற்றுநோய் மைத்தின் இயக்குனர் சாந்தா…

  • பஸ்ஸு தொல்லைகள்

    வயது வந்தோர்க்கான எழுத்துக்கள் கோவைக்கு போய் இருந்த போது நண்பரின் வீட்டில் தான் தங்கி இருந்தேன். பகல் முழுக்க வீட்டிலேயே கிடந்தாலும்,இணையம், கணினி என வசதிகள் இருந்த போதிலும் வலைப்பதிவுகளின் பக்கம் வருவதற்கு எனக்கு துணிவு இல்லை. அப்படியே ரீடர் வழி பதிவுகளை படிக்கலாம் என்றாலும் அதற்கும் ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. நண்பரின் வீட்டினர் எவராவது எனக்கு பின்னால் வந்து நின்று நான் படிக்கும் வலைப்பதிவுகளில் (புதிய நண்பர்கள் பலரின் வலைப்பதிவுகளும் இப்படி இருப்பது வேதனை)…

  • இலக்கிய உலகின் தாதாக்கள்

    ஒரு கேள்வி ஒருவர் முன் வைக்கப் பட்டால் அதற்கு சாதாரணமானவர்கள் பதில் சொல்வதற்கும் பொது வாழ்வில் இருப்பவர் பதில் சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. ஒரு அரசியல்வாதியிடம் அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்து யார் வேண்டுமானாலும் கேள்வி எழுப்பலாம். பதில் சொல்லியே ஆக வேண்டும். மக்களின் பிரதிநிதியாக இருப்பவர் அவர்.  அப்படி பதில் சொல்ல விருப்பமில்லையென்றாலும் அதை நாசூக்காக தாண்டிச் செல்ல வேண்டுமே அன்றி, நீ யார் என்னை கேட்க என்று எகிறுவது நல்ல பண்பாகாது. இதே அளவுகோல்…

  • பதிவு (மட்டும்) நீக்கப்படுகிறது.. எச்சரிக்கை தொடர்கிறது!

    என்கடந்த பதிவான பெண்பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை பதிவு நீக்கப்படுகிறது. வலை உலகில் நான் மதிக்கும் பதிவர்களின் ஒருவரான திரு. ஜ்யோவ்ராம் சுந்தர் ஒரு பதிவு போட்டிருந்தார். அவர் பதிவின் மூலமாக அவரைப்போன்றே சிலருக்கும் சங்கடங்கள் ஏற்பட்டிருக்கும் என அறிய முடிகிறது. (அவரும் கூட தொலைபேசியில் பேசி இருக்கலாம்) யாரையும் சங்கடப்படுத்தவோ, தேவையற்ற பீதியைக் கிளப்பவோ எழுதப்பட்ட பதிவு அல்ல அது. ஓர் எச்சரிக்கை மணி அடிக்க விரும்பினேன் அவ்வள்வே!. ”மற்ற பெண் பதிவர்கள் தங்கள் புகைப்படம்,  குடும்ப…