Category: சினிமாப் பார்வை

  • 21. ஆட்டிசம்- சில புரிதல்கள் – ஓர் ஆவணப்படம் (திரைக்கு அப்பால்)

    ஆட்டிசம் பற்றி என் அனுபவப் பயணத்தினைக்கொண்டு, ஒரு விழிப்புணர்வு ஆவணப்படம் எடுக்கலாம் என அதற்கான வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, அண்ணன் கார்மல் மூலம் விபரம் அறிந்த திரு. கைலாசம் சார் அழைத்தார். (அப்போது சானலின் ஹெட்-ஆக இருந்தார்) தனியா பண்ணப்போறியா..? ஆமாசார் பேசாம சானலுக்கு பண்ணிடேன். நிறைய பேருக்கு போய்ச்சேரும். நான் மவுனமாக நின்றிருந்தேன். இதன் மூலம் விருதுகிருதுன்னு ஏதுனா யோசிக்கிறியா? இல்லசார். விழிப்புணர்வும், பெத்தவங்களுக்கு ஒரு நம்பிக்கையும் கொடுக்கனும்னு தான் யோசிச்சிருக்கிறேன். அப்ப சானலுக்கே பண்ணு..…

  • என்னைப் போல் ஒருவன் (The King’s Speech)

    திக்குவாயன் பாலா.. இப்படித்தான் படிக்கும் காலங்களில் அழைக்கப்பட்டேன். ஒரு வயதுக்குள்ளாகவே பேச்சு வந்த குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஒன்னரை வயது நடந்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த சைக்கிள் தலையில் விழுந்து, பலத்த அடிபட்டுவிட்டது. பதிநான்கு தையல் போட்டு விட்டு, இனி பையன் பேசவே மாட்டான் என்று சொல்லி விட்டார்கள் மருத்துவர்கள். எட்டு  மாதங்கள் எதுவும் பேசாமல் மௌனியாகவே வீட்டுக்குள் அலைந்திருக்கிறேன். என் தேவைகளைக்கூட சைகையின் மூலமே தெரியபடுத்தி வந்திருக்கிறேன். அப்புறம் ஒரு நாள் கொஞ்சம்…

  • ராமனின் பெயரால்..

    விவரணைப் படங்களில் உலக அளவில் பேசப்படும் இந்திய இயக்குனர் ஆனந்த் பட்வர்த்தன். பல விருதுகளைப் பெற்றிருக்கும் இவரின் பல படங்கள் அரசு இயந்திரத்திற்கு எதிரானவையாக இருந்திருக்கின்றன. அதேசமயம் சாமானியர்களில் வாழ்க்கை பிரச்சனையை பேசும் படங்களாகவும் அவை இருப்பது இயல்பானது. 2002ல் மும்பையில் நடந்த உலகத்திரைப்பட விழாவில் இவரின் ‘வார் அண்ட் பீஸ்’ படம் திரையிடப்பட்டு, சர்ச்சைகளுக்கு மத்தில் விருதுக்கு தேர்வானது. அப்போது அதே விழாவில் தான் இப்படத்தினை பார்த்தேன். அதன் பின் ஆனந்த் பட்வர்த்தனின் சில படங்களை…

  • தடைகளைத் தாண்டி.. நாளை திரைக்கு வருகிறார் டாக்டர் அம்பேத்கர் (தமிழில்)

    ஒரு மாமாங்கத்திற்கு பிறகு பல தடைகளைத்தாட்டி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது ‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ திரைப்படம். மிகப் பெரும் போராட்டத்திற்கும், நீதிமன்றத் தீர்ப்பிற்கும் பிறகு திரைப்படத்தை முடக்கி வைத்திருந்தவர்கள் வழி விட்டு, ஒதுங்கவேண்டியதாகிவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னையும், தன் வாழ்வையும் அர்ப்பணித்துக் கொண்ட டாக்டர் பாபா சகேப்பின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம். எடிட்டர் லெனின் தன் சொந்த பணத்தில் இருந்து ரூ. 6லட்சத்தை இப்படம் வெளியாவதற்க்காக கொடுத்துள்ளார். அவரின் உதவியுடன்,தமிழ்நாடு முற்போக்கு…

  • ரசித்துப் பார்க்க ஒரு படம்- ”இன் கோஸ்ட் ஹவுஸ் இன்ன்”

    இன் கோஸ்ட் ஹவுஸ் இன்ன்(In Ghost House Inn)- மலையாளம் சமீபத்தில் மிகவும் ரசித்து, சிரித்துப் பார்த்த படம் ”இன் கோஸ்ட் ஹவுஸ் இன்ன்”. மலையாளத்தில் வெளிவந்திருக்கும் இப்படம் ஒரு பேய் படம். ஒரு திகில் படத்தை இவ்வளவு நகைச்சுவையாக எடுக்க முடியுமா.. என்று ஆச்சரியப்படும் வகையில் எடுத்திருக்கிறார்கள். முகேஷ், அசோகன், ஜெகதீஷ் மற்றும் சித்திக் ஆகிய நால்வரும் தான் கதையின் நாயகர்கள். இதே கூட்டனி சுமார் இருபதுவருடங்களுக்கு  முன் (1990) ’இன் ஹரிகர் நகர்’ என்ற…

  • நீங்களும் உலக சினிமா விமர்சனம் எழுதலாம்..!

    டிஸ்கி: The Patient – படத்தின் கதையை படித்து வரும் போது நடு நடுவே.. அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருப்பதை கவனிப்பீர்கள். சினிமாவில் பார்த்த அந்த காட்சியை நாம் எழுதும் போது எப்படி சொல்லவேண்டும் என்பதையே அப்படி கொடுத்திருக்கிறேன். பின்ன..  உலக சினிமாவுக்கு விமர்சனம் எழுதும் போது கொஞ்சம் உழைப்பும், பொறுமையும் தேவை என்பதை நினைவு படுத்தவே இக்குறிப்பு. — கதையின் நாயகன் ஒரு மருத்துவர். க்யூபாவைச் சேர்ந்தவன். பணக்காரக்குடும்பத்தின் வாரிசு என்றாலும், கம்யூனிஸ நாடான க்யூபாவில் பிறந்ததால் ஏழை…

  • விடுபட்டவை 07/04/2010

    அங்காடி தெரு- நிச்சயம் ஒரு நல்ல படம். கடைநிலை மனிதர்களின் வாழ்க்கையை பிரபதிலிக்கும் முயற்சி. படத்தின் நீளம் சில இடங்களில் பாடல்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்திற்கு பின்னனி இசையும் கூட ஏனோ சரியாக இல்லை என்றே தோன்றுகிறது. ஜெயமோகனின் வசனம் மிக கூர்மையாக எழுதப்பட்டுள்ளது. தனது நான்காவது படத்திலேயே சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் ஜெமோ. நிச்சயம் நல்ல எதிர்காலம் அவருக்கு சினிமா உலகில் உண்டு! வசந்த பாலனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. இதுமாதிரியான ஒரு கதைக் கருவை எடுத்தமைக்காக..!…

  • எங்க வீட்டுல.. ஒரு DUCKக்கு இருந்துச்சு…

    எங்க வீட்டில் ஒரு டக்(duck) இருந்துச்சு.. அது என்ன ஆச்சு தெரியுமா? சிவகிரி- திரைப்படத்தில் ராகிங் செய்யும் மாணவிகளிடம் நாயகன் சிவகிரி சொல்லும் கதை தான் மேலே பார்த்தது..

  • நீங்க எல்லாம் சோத்தத் தானடா துண்ணுறீங்க?!

    பொதுவாகவே ரஜினி படங்களில் லாஜிக் பார்ப்பது கிடையாது. கொடுக்கும் காசுக்கு விறுவிறுப்பான ஒரு தமிழ்படம் பார்க்க முடியும். அதுவும் சில வித்தியாசமான மேனரிசங்களை ரசிக்க முடியும் அவ்வளவு தான். சிவாஜி படத்தின் கதையை பலரும் இங்கு அலசி காயப்போட்டு விட்டதால்.. அது பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. படத்தில் எனக்கு ஒவ்வாத காட்சிகளைப் பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். * தமிழ்ச்செல்வி என்று நாமகரம் சூட்டப்பெற்ற நாயகி ஸ்ரேயா எல்லா பாடல்காட்சிகளிலும் மேலாடையின்றி, பாலிவுட் நடிகை…