Category: சிறுகதை

  • அப்துல்லாவின் கிளிகள் – சிறுவர் கதை

    “எங்கே இருந்து கிடைச்சுச்சுடா…?” என்று கேட்டான் தமிழ்ச்செல்வன். இடம் : தந்தை பெரியார் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம். “நாங்க குடி இருக்கிற வீட்டு மாடியிலடா…!” என்று கூறும்போதே அப்துல்லாவின் குரலில் ஒரு பெருமிதம் தெரிந்தது. “எப்படிடா கிடைச்சது..?” “மாடியில காயப்போட்ட துணிகளை எடுத்து வந்துடுன்னு சொல்லிவிட்டு, எங்க அம்மா வீட்டு வேலைக்குப் போயிட்டாங்க. நானும் மாடிக்குப் போனேன். அங்கே காக்கைகள் கூட்டமாக அமர்ந்து, ‘கா..கா..’ன்னு கரைஞ்சுகிட்டு இருந்துச்சு. என்னடான்னு பார்த்தேன். ரெண்டு கிளிக் குஞ்சுகளை அதுங்க…

  • சுழல் – சிறுவர் கதை (டைம்லூப் சிறுகதை)

    சுழல் வீட்டின் வாகனம் நிறுத்துமிடத்தில், அப்பாவின் இருசக்கர வாகனத்திற்கு அருகில், காகிதங்களால் பொதியப்பட்டு நிறுத்தப்பட்டிருந்ததைப் பார்த்ததுமே தெரிந்தது, அது மிதிவண்டி என்று. அதைப்பார்த்ததும் ஏற்பட்ட சந்தோஷம் சுதாகரனை திக்குமுக்காடச் செய்தது. அடுத்த வாரம் வரவுள்ள அவனது பிறந்தநாளுக்கு, வெளிநாட்டில் வசிக்கும் அவனது மாமாவின் அன்பு பரிசு அது. அவர் இணையம் வழியாக ஆர்டர் போட்டுவிட, நேரடியாக இவன் வீட்டுக்கு வந்து, மிதிவண்டியைக் கொடுத்துவிட்டது, தயாரிப்பு நிறுவனம். அதன் மீது சுற்றி இருந்த ஜிகு ஜிகு பிளாஸ்டிக் தாள்களை…

  • சட்டம்

    தங்கள் குடிசைக்கபகுதிக்கு அருகில் கட்டப்படும் கட்டுமான நிறுவனத்தில் காவலாளியாக வேலைக்குச் சேர்ந்தார் பரமசிவம். அவரது மகன் வேலன் ஏழாம்வகுப்பு படித்துவந்தான். திடீரென பரவிய தீக்கிருமியால், வேலனின் பள்ளி வாழ்க்கை முடிவுக்கு வந்தது. கொரோனா கால ஊரடங்கினால் மக்கள் பலவிதங்களில் பாதிக்கப்பட்டனர். அடுத்த சில மாதங்களில் கட்டடப்பணிக்கு அரசு அனுமதி அளித்ததும், வேலை மீண்டும் தொடங்கியது. ஆனாலும், பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் வீட்டில் இருந்த வேலன், கட்டட வேலைகள் நடப்பதை வேடிக்கை பார்க்கப்போவான். சில நாட்கள் தன் அப்பாவுக்கு…

  • தாத்தா பயந்த கதை

    தாத்தா பயந்த கதை கோடை விடுமுறையில் கிராமத்திற்கு வந்திருந்தான் ஆதவன். அவன் தாத்தாவும், அம்மாச்சியும் மற்ற கிராம மக்கள் போலவே விவசாயம் செய்துவந்தனர். பகலில் வயலுக்குச்செல்லும்போது ஆதவனையும் உடன் அழைத்துச்செல்வர். மாலையில் வீடு திரும்பியதும், முன் வாசல் பக்கம் அமர்ந்துகொண்டு, தினம் தினம் கதை கேட்பது இவனின் வழக்கம். அம்மாச்சி ரத்தினமோ, தாத்தா மாரிமுத்துவோ இருவரில் ஒருவர் சமையல் செய்யப் போய்விடுவர். மற்றொருவர் இவனுக்கு கதை சொல்வார்கள். அன்று மாலை திடீரென மின் வெட்டு. அகல்விளக்கை ஏற்றிவைத்தார்…

  • தானே தெளியும்!

      எப்போதும் பிஸியாக இருக்கும் பெரிய தொழிலதிபர் ராமு, மிகவும் பிரபலமான அந்த மருத்துவரைப் பார்க்கக் காத்திருந்தார். இவரது முறை வந்தது. கல்லூரியில் சேர்த்துள்ள தனது மகன் எப்போதும் விளையாட்டில் கவனம் செலுத்துவதாகவும், தனக்குப் பிறகு தனது தொழிலை அவன் கவனித்துக்கொள்வான் என்ற நம்பிக்கை அற்றுப்போய் விட்டதாகவும், அவனாலேயே தன் உடல் நிலையும் மன நிலையும் தனக்கு மோசமடைந்து வருவதாகவும் பெரிய புகார் பட்டியலை வாசித்தார் ராமு. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட மருத்துவர், மகனை அழைத்துக்கொண்டு அடுத்த வாரம்…

  • சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுகம்-கூட்டம்

    எதிர் வரும் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில் காலை10மணிக்கு சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுகம் – கூட்டம். துவக்கத்தில் புதியவர்களின் கவிதை வாசிப்பு. அப்புறம் நூலாசிரியர் அறிமுகம்- எழுத்தாளர். ஆங்கரை பைரவி. சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுக உரை- எழுத்தாளர். தோழர். பாட்டாளி. இறுதியில் ஏற்புரை நூலாசிரியர் என திட்டமிட்டிருக்கிறார்கள். நான் போகிறேன். முடிந்தவர்களும் கலந்துகொள்ளுங்கள்.. – விழா ஏற்பாடு திருச்சி கலை இலக்கியப் பெருமன்றம்.

  • பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ – ஸ்டாலின் ஃபெலிக்ஸ்

    பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ சமூக ஆர்வலர், எழுத்தாளர், ஊடகவியலாளர் என பல முகங்கள் கொண்ட பாலபாரதியின் முதல் சிறுகதை தொகுப்பு ‘சாமியாட்டம்’. பன்னிரெண்டு சிறுகதைகளை கொண்ட இந்த தொகுப்பினூடே பயணிக்கும் போது சில கதைகள் புலம் பெயர் வாழ்வின் வெம்மையையும் சில மாலை நேரத்து மழை குளிர்ச்சியையும் தருகின்றது. இச்சிறுகதைகளின் வழியாய் ஆசிரியரின் அகவுலகை எளிதாய் தரிசிக்க முடிகிறது. ‘அம்மாவின் கை உணவிற்கு ஏங்கும் வாலிபனாய்’ ‘சாதிய படிநிலையை கண்டு சாடும் முற்போக்குவாதியாய்’ ‘ஊரின் நினைவை தன்னோடு சுமந்து திரியும்…

  • சாமியாட்டம் – ஒரு பார்வை -க.ரா

    சாமியாட்டம் – ஒரு பார்வை சாமியாட்டம் முதலில் ஒரு சொல். இந்த கட்டுரையை தயவு செய்து ஒரு விமர்சனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு வாசகனாக நான் வாசித்து உணர்ந்ததை மற்றவர்களுக்கும் கடத்தும் ஒரு சிறு முயற்சி மட்டுமே இக்கட்டுரை. கதாசிரியர் தாம் பிறந்த மண்ணிலும் தன் தொழில் பொருட்டு தான் தங்க நேர்ந்த ஊர்களிலும் தன்னை சுற்றி நடந்த நிகழ்வுகளை எழுத்தில் கோர்த்திருக்கிறார். அவர், அவர் வாழ்வில் கடந்து வந்த இந்த தருணங்களில்  சிலவற்றையாவது நாம் கடந்து…

  • துரைப்பாண்டி – மா.சிவக்குமார்

    துரைப்பாண்டி (சாமியாட்டம் – பாலபாரதி) ஒரு வலைப்பதிவருக்கும் எழுத்தாளருக்கும் என்ன வேறுபாடு? ஒரு வலைப்பதிவுக்கும் சிறுகதைக்கும் என்ன வேறுபாடு? சாமியாட்டம் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் போது ‘துரைப்பாண்டி’யைப் படிக்கும் போது தோன்றிய கேள்வி. ‘துரைப்பாண்டி’ ஒரு சிறந்த பதிவு என்பதைத் தாண்டி போகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எடுத்துக் கொண்ட, கிடைத்த கனமான விஷயத்தின் அனைத்து பரிமாணங்களையும் ஊடுருவாமல் ஒற்றைக் கோட்டில் நகர்ந்து முடிந்து விடுகிறது. ‘தொறப்பாண்டி’ கதை சொல்லியை விட சிறியவன், பரிதாபத்துக்குரியவன் என்பதற்கு ‘பதினொரு…

  • தண்ணீர் தேசம் -மா.சிவக்குமார்

    தண்ணீர் தேசம் (சாமியாட்டம் – பாலபாரதி) ஒன்பது வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பி வந்து ஊர் எப்படி முன்னேறியிருக்கிறது என்று ஆர்வமாக தேடிப்பார்க்கிறார். ஊரில் ‘முன்னேற்றங்களுக்கான’ அறிகுறிகள் நிறைய தென்படுகின்றன. ஊர் மாறிப் போனது போலவே வீடும் மாறிப் போய் இருந்தது. சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி விட்ட நிலைக்கு வந்து விட்ட பிறகும் பல கிராமங்களுக்கு குடிதண்ணீர் வசதி மட்டும் இன்னும் வாய்க்கவில்லை. சிறு வயது நண்பனின் குடிசைக்குப் போனால், குடி தண்ணீர் தீர்ந்து போயிருந்தது.…