Category: தகவல்கள்

  • ஆட்டிசம் – சரியும் தவறும்

    ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர் என்பதை தமிழில் மதியிறுக்கம் என்றும் மனயிறுக்கம் என்று சொல்கிறார்கள். வேறு சிலரோ ‘தன்முனைப்பு குறைபாடு’ என்று சொல்லுகிறார்கள். எனக்கும் தன்முனைப்பு குறைபாடு என்பது தான் சரியான சொல்லாகப்படுகிறது. பொதுவாக ஆட்டிசம் குறைபாடுகளை இப்படியானது என்று வரையறுக்க முடியாது. அதே சமயம், இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். இவர்களில் அனேகரும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரக்கூடிய பிரச்சனை என்றால் அது, ’சென்ஸரி பிரச்சனைகள்’ தான். இப்பாதிப்புக்குள்ளானவர்களை சமன் நிலைக்குக்…

  • ஆட்டிசம் – உட் பிரிவுகள்

    கடந்த பகுதியின் இறுதியில் ஆட்டிசம் குறித்து நிலவும் தவறாக கருத்துக்களை அடுத்த பகுதியில் பார்ப்போம் என்று சொல்லி இருந்தேன். அதற்கு முன், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் எனும் பெயருக்கடியில் வரும் எல்லா குறைபாடுகளையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை அவசியமாகிறது. அதனால் முதலில் அதைப் பற்றி அறிந்துகொள்வோம்! ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (ASD) எனும் பெரிய குடையின் கீழ் குழந்தைகளில் மூளை வளர்ச்சியில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் தொடர்பான குறைபாடுகள் வகைப்படுத்தப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் எப்போதும் தனித்தனி பெயர்…

  • ஆட்டிசம் – வரலாறு

    எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது, தன்னந்தனியே சிரித்துக்கொள்வது, சுற்றக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது, சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங்கூட்டத்தில் தனி ஒருவனாக இருப்பது என்பது ஆட்டிசத்தின் கூறுகளாக நாம் இன்று அறிந்திருக்கிறோம். ஆனால்.. இதை முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது அந்த மருத்துவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை நினைத்தாலே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. குழந்தை பிறந்த பின் – காது கேட்காமல் போவது, பேசாத்தன்மை, பார்வைக்குறைபாடு, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்குறைபாடு போன்றவற்றை…

  • ஆட்டிசம் – விரைவாக அறிந்துகொள்ள சில எளிய வழிகள்

    ஆட்டிசம் – விரைவாக அறிந்துகொள்ள சில எளிய வழிகள்

    இந்தியாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் சரியான புள்ளிவிபரங்கள் இங்கே இல்லை. பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரை ஆட்டிசம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. மேலை நாடுகளோடு, ஒப்பிடும் போது இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது. இந்தியாவில் வட இந்தியாவோடு ஒப்பிடும் போது, தென்னிந்தியாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தென்னிந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது. ஆட்டிசம் என்பது மூளை தகவல்களை பயன்படுத்திப்…

  • சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுகம்-கூட்டம்

    எதிர் வரும் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில் காலை10மணிக்கு சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுகம் – கூட்டம். துவக்கத்தில் புதியவர்களின் கவிதை வாசிப்பு. அப்புறம் நூலாசிரியர் அறிமுகம்- எழுத்தாளர். ஆங்கரை பைரவி. சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுக உரை- எழுத்தாளர். தோழர். பாட்டாளி. இறுதியில் ஏற்புரை நூலாசிரியர் என திட்டமிட்டிருக்கிறார்கள். நான் போகிறேன். முடிந்தவர்களும் கலந்துகொள்ளுங்கள்.. – விழா ஏற்பாடு திருச்சி கலை இலக்கியப் பெருமன்றம்.

  • பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ – ஸ்டாலின் ஃபெலிக்ஸ்

    பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ சமூக ஆர்வலர், எழுத்தாளர், ஊடகவியலாளர் என பல முகங்கள் கொண்ட பாலபாரதியின் முதல் சிறுகதை தொகுப்பு ‘சாமியாட்டம்’. பன்னிரெண்டு சிறுகதைகளை கொண்ட இந்த தொகுப்பினூடே பயணிக்கும் போது சில கதைகள் புலம் பெயர் வாழ்வின் வெம்மையையும் சில மாலை நேரத்து மழை குளிர்ச்சியையும் தருகின்றது. இச்சிறுகதைகளின் வழியாய் ஆசிரியரின் அகவுலகை எளிதாய் தரிசிக்க முடிகிறது. ‘அம்மாவின் கை உணவிற்கு ஏங்கும் வாலிபனாய்’ ‘சாதிய படிநிலையை கண்டு சாடும் முற்போக்குவாதியாய்’ ‘ஊரின் நினைவை தன்னோடு சுமந்து திரியும்…

  • துரைப்பாண்டி – மா.சிவக்குமார்

    துரைப்பாண்டி (சாமியாட்டம் – பாலபாரதி) ஒரு வலைப்பதிவருக்கும் எழுத்தாளருக்கும் என்ன வேறுபாடு? ஒரு வலைப்பதிவுக்கும் சிறுகதைக்கும் என்ன வேறுபாடு? சாமியாட்டம் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் போது ‘துரைப்பாண்டி’யைப் படிக்கும் போது தோன்றிய கேள்வி. ‘துரைப்பாண்டி’ ஒரு சிறந்த பதிவு என்பதைத் தாண்டி போகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எடுத்துக் கொண்ட, கிடைத்த கனமான விஷயத்தின் அனைத்து பரிமாணங்களையும் ஊடுருவாமல் ஒற்றைக் கோட்டில் நகர்ந்து முடிந்து விடுகிறது. ‘தொறப்பாண்டி’ கதை சொல்லியை விட சிறியவன், பரிதாபத்துக்குரியவன் என்பதற்கு ‘பதினொரு…

  • தண்ணீர் தேசம் -மா.சிவக்குமார்

    தண்ணீர் தேசம் (சாமியாட்டம் – பாலபாரதி) ஒன்பது வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பி வந்து ஊர் எப்படி முன்னேறியிருக்கிறது என்று ஆர்வமாக தேடிப்பார்க்கிறார். ஊரில் ‘முன்னேற்றங்களுக்கான’ அறிகுறிகள் நிறைய தென்படுகின்றன. ஊர் மாறிப் போனது போலவே வீடும் மாறிப் போய் இருந்தது. சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி விட்ட நிலைக்கு வந்து விட்ட பிறகும் பல கிராமங்களுக்கு குடிதண்ணீர் வசதி மட்டும் இன்னும் வாய்க்கவில்லை. சிறு வயது நண்பனின் குடிசைக்குப் போனால், குடி தண்ணீர் தீர்ந்து போயிருந்தது.…

  • Autism குறித்த விழிப்புணர்வு விளம்பரம்

    விகேன் – என்ற நிறுவனத்திற்காக சூர்யாவும் ஜோதிகாவும் நடித்துக்கொடுத்துள்ள விழிப்புணர்வு விளம்பரப்படம். வீடியோ சுட்டி:- http://video.google.com/videoplay?docid=7308785909724630603

  • காற்றைப்போல எளிய கதைகள் – ச.தமிழ்ச்செல்வன்

    யெஸ்.பாலபாரதியைப் பல ஆண்டுகளாகப் பழக்கமென்றாலும் அவர் எழுத்துக்களை இதுவரை நான் வாசித்ததில்லை. கோட்டி முத்து பாரதியின் ஒரு பாட்டு பொம்மை கடந்துபோதல் தண்ணீர் தேசம் துரைப்பாண்டி பேய்வீடு நம்பிக்கை சாமியாட்டம் சாமியாட்டம்-2 ஆகிய இந்தப்பத்துக்கதைகளை 2003லிருந்து 2010 வரை எட்டு ஆண்டுகளாக எழுதியிருக்கிறார்.நம்மைவிடப் பெரிய சோம்பேறி ஒருத்தரைப் பார்த்துவிட்ட அற்ப சந்தோசம்தான் முதலில் எனக்கு ஏற்பட்டது..35 ஆண்டுகளில் 29 கதைகள் எழுதியவன் நான்.ஆகவே என்னிடம் ஒரு முன்னுரை அல்லது அணிந்துரை வாங்கிப்போட பாலபாரதி எடுத்த முடிவு அந்த…