Category: தகவல்கள்

  • ராமனின் பெயரால்..

    விவரணைப் படங்களில் உலக அளவில் பேசப்படும் இந்திய இயக்குனர் ஆனந்த் பட்வர்த்தன். பல விருதுகளைப் பெற்றிருக்கும் இவரின் பல படங்கள் அரசு இயந்திரத்திற்கு எதிரானவையாக இருந்திருக்கின்றன. அதேசமயம் சாமானியர்களில் வாழ்க்கை பிரச்சனையை பேசும் படங்களாகவும் அவை இருப்பது இயல்பானது. 2002ல் மும்பையில் நடந்த உலகத்திரைப்பட விழாவில் இவரின் ‘வார் அண்ட் பீஸ்’ படம் திரையிடப்பட்டு, சர்ச்சைகளுக்கு மத்தில் விருதுக்கு தேர்வானது. அப்போது அதே விழாவில் தான் இப்படத்தினை பார்த்தேன். அதன் பின் ஆனந்த் பட்வர்த்தனின் சில படங்களை…

  • நாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா- ஓர் இனிமையான அனுபவம்

    விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் நாஞ்சில் நாடனுக்கு சென்னையில் பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ரஷ்யன் கலாச்சார மையத்தில் மாலை 6.30மணிக்கு என்று அறிவித்திருந்தார்கள். கொஞ்சம் முன்னதாகவே போய்ச்சேர்ந்தோம். நண்பர்கள் ரங்கசாமி, கே.ஆர்.அதியமான் போன்றவர்கள் எனக்கு முன்னமே வந்திருந்தனர். அப்படியே அவர்களோடு பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தினர் எல்லோரும் வேட்டியில் வந்து அசத்தியிருந்தனர். புளியமரம் தங்கவேலுவையும் பார்த்தேன். மனுசன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்து ஆறுமாசம் ஆச்சாம். தெரியவே இல்லை. 🙁 ஆறுமணிக்கு சற்று முன்னதாக நாஞ்சில், ஜெமோ,…

  • ஜனவரி-3, சென்னையில் நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா

    நாஞ்சில் நாடன் இவ்வாண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தாமதம் தான் என்றாலும் சரியான நபரை விருதுக்குழு தேர்வு செய்திருப்பது கொஞ்சம் ஆசுவாசத்தை தந்தது. சந்தேகமில்லாமல் எதிர்வரும் புத்தகக்கண்காட்சியில் இம்முறை நாஞ்சில் நாடனின் நூல்கள் அதிகம் விற்பனையாகும். ’டாப் செல்லர்’ அண்ணாச்சி தான் 🙂 . ஒரு வாசகனாகவும், முன்னாள் புத்தக விற்பனையாளனகவும் நான் பார்த்த அனுபவத்தில் சொல்லுகிறேன். (என்ன செய்ய.. உண்மையான எழுத்துக்குக்கூட, விருது போன்ற அரிதாரங்கள் தேவைப்படுகிறது, அப்போது தான் மக்களின் கவனம்…

  • மண்ணையும் மக்களையும் நேசிக்கும் நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது

    ”… யதார்த்த நாவல் என்றால் நமது அதிநவீனத் தமிழ்ப் படைபாளிகளிடம் இதழ்க்கடையோரம் இளக்காரமானதோர் கீற்றொன்று காணப்படும். யதார்த்தவாதத்துக்கும் எல்லை ஒன்று இன்மை எனும் தன்மை உண்டு. வெளிப்பாட்டின் தீவிரத்தன்மை தரிசனத் தேடல் இவை இருக்கும் படைப்பாளிக்கு எந்த வடிவமும் சிறந்த வடிவம் தான்…” – நாஞ்சில்நாடன் (கீரனூர் ஜாகிர்ராஜா எழுதிய துருக்கித்தொப்பி நாவலின் முன்னுரையில்..) இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருதுக்காக  தமிழ் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ”சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதை தொகுப்பு தேர்வு…

  • The Story of Bottled Water

    இன்று அனேக மக்கள் பாட்டில் குடிநீர் தான் சுத்தமானது என்றும் சுகாதாரமானது என்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் பின்னனியில் இருக்கும் பெருமுதலாளிகளின் பயங்கரமுகம் பற்றி இவ்விவரணைப்படம் பேசுகிறது. நம் சென்னையின் புறநகர் பகுதில் இருக்கும்(பள்ளிக்கரணை ஏரி அருகில்) கும்பை மேடு குறித்தும் இதில் வருகிறது. இப்படத்தை தயாரித்தவர்கள், இது போன்று சந்தைப்படுத்தப்படும் பலவற்றைப் பற்றி மக்களிடம் கொண்டு போய்ச்சேர்க்க ஒர் இயக்கத்தையே நடத்துகின்றனர் அவர்களின் வலைத்தள முகவரி: http://www.storyofstuff.org/ —

  • தவறவிடும் அழைப்புகளுக்காக..பொருத்தருள்வீர்!

    இன்று காலை மீண்டும் என் கைபேசியில் பையன் மூச்சா போய்விட்டான். பழைய கைபேசியையும் இது போல ஒரு சந்தர்ப்பத்தில் சாவடித்துவிட்டதால் புதியது வாங்க வேண்டியதிருந்தது (அது பற்றி இங்கே:- http://216.185.103.157/~balabhar/blog/?p=786 ). இந்த கைபேசி வாங்கி ஒரு மாதமே ஆன நிலையில், வழமை போல இதற்கும் வேட்டு வைத்தாயிற்று. எப்படித்தான் குழந்தைகளுக்கு தெரிகிறதோ.. நாம் பயன்படுத்தும் முக்கியமானவற்றை சிதைக்கவேண்டுமென. 🙁 ஆனது தான் ஆயிற்று, கைபேசி வாங்கி ஒருமாதம் தான் ஆகிறது என்பதால் சென்னையில் இக்கைபேசியின் ஊழிய…

  • ஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்!

    ஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்! (டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்காலங்களையும் ஆக்கிரமித்து நிற்கும் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் ஊடகங்களாலும், மக்களாலும் பேசப்படும் நிலையில் மற்றொரு பிரமாண்ட ஊழலை மறைக்க முடிந்திருப்பது ஆச்சரியம்தான். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்களாக திமுகவைச் சேர்ந்த டி. ஆர். பாலுவும், ஆ. ராசாவும் பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட தவறான கொள்கை முடிவுகளால் இந்தியாவின்…

  • தடைகளைத் தாண்டி.. நாளை திரைக்கு வருகிறார் டாக்டர் அம்பேத்கர் (தமிழில்)

    ஒரு மாமாங்கத்திற்கு பிறகு பல தடைகளைத்தாட்டி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது ‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ திரைப்படம். மிகப் பெரும் போராட்டத்திற்கும், நீதிமன்றத் தீர்ப்பிற்கும் பிறகு திரைப்படத்தை முடக்கி வைத்திருந்தவர்கள் வழி விட்டு, ஒதுங்கவேண்டியதாகிவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னையும், தன் வாழ்வையும் அர்ப்பணித்துக் கொண்ட டாக்டர் பாபா சகேப்பின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம். எடிட்டர் லெனின் தன் சொந்த பணத்தில் இருந்து ரூ. 6லட்சத்தை இப்படம் வெளியாவதற்க்காக கொடுத்துள்ளார். அவரின் உதவியுடன்,தமிழ்நாடு முற்போக்கு…

  • ரசித்துப் பார்க்க ஒரு படம்- ”இன் கோஸ்ட் ஹவுஸ் இன்ன்”

    இன் கோஸ்ட் ஹவுஸ் இன்ன்(In Ghost House Inn)- மலையாளம் சமீபத்தில் மிகவும் ரசித்து, சிரித்துப் பார்த்த படம் ”இன் கோஸ்ட் ஹவுஸ் இன்ன்”. மலையாளத்தில் வெளிவந்திருக்கும் இப்படம் ஒரு பேய் படம். ஒரு திகில் படத்தை இவ்வளவு நகைச்சுவையாக எடுக்க முடியுமா.. என்று ஆச்சரியப்படும் வகையில் எடுத்திருக்கிறார்கள். முகேஷ், அசோகன், ஜெகதீஷ் மற்றும் சித்திக் ஆகிய நால்வரும் தான் கதையின் நாயகர்கள். இதே கூட்டனி சுமார் இருபதுவருடங்களுக்கு  முன் (1990) ’இன் ஹரிகர் நகர்’ என்ற…

  • ட்ரைலருக்கே ட்ரைலர் விடும் காலமிது..

    இன்று எல்லா துறைகள் பற்றியும் எழுதுபவர்கள் உண்டு. படைப்பிலக்கியம் தாண்டி தமிழில் எழுதப்படுவதற்கு என நிறைய துறைசார்ந்த இடங்கள் காலியாக முன்பு இருந்தன. இவ்வொன்றாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. சரியோ தவறோ.. துறைசார்ந்த எழுத்துக்கள் தமிழில் அதிகமாகிவருவது கவனிக்கத்தக்கது. அதிலும் பொருளாதாரம் பற்றி தமிழில் எழுதுவதற்கு சரியான நபர்கள் இல்லாதிருந்தது. அதிலும் கூட இன்று பலர் வந்துவிட்டார்கள். எனக்கு தெரிந்து மிச்சமிருக்கும் துறைகளில் இசையும், மோட்டார்வாகனத்துறையும் மிக முக்கியமானதாக எனக்குப் படுகிறது. மோட்டார் வாகனத்தை பற்றி எழுதினால்…