Category: விளம்பரம்

  • வாசிப்பனுபவம் – வாத்து ராஜா

    வாத்து ராஜா மடமன்னன் ஒருவனுக்கு மக்கள் வைத்துள்ள பெயர் தான் வாத்து ராஜா. அது அம்மன்னனுக்கும் தெரியவர.. நாட்டில் உள்ள எல்லா வாத்துக்களையும் கொல்ல உத்தரவிடுகிறான். வாத்துக்களும் கொல்லப்படுகின்றன. சுந்தரி என்ற சிறுமி தன்னிடமுள்ள வாத்துகளை காப்பாற்றிக்கொள்ள என்னென்ன முயற்சிகள் மேற்கொள்கிறாள் என்பது கதை. ஆனால் இது நேரடி கதையாக இல்லாமல் அமுதா என்ற சிறுமிக்கு அவள் பாட்டி சொல்லும் கதையாக விரிகிறது. கதைக்குள் கதை. ஒரு இடத்தில் பாட்டி கதையை முடிக்காமல்.. வேறு ஊருக்கு சென்று…

  • வாசிப்பனுபவம்- உச்சி முகர்

    விழியனின் உச்சிமுகர் நூல் குறித்து எனது எண்ணங்களைச்சொல்லும் முன் கொஞ்சம் கொசுவர்த்தி சுற்றுகிறேன். அதையும்  படித்துவிடுங்கள். சம்பவம் :- 1 என் சிறுவயதில் நடந்த சம்பவம் இது. அனேகமாக ஆறாம்வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன். படித்தது தமிழ்வழிக்கல்வி என்பதால்.. ஆங்கிலப்பாடங்கள் ஆறாவதில் தான் துவங்கின. அதுவரை ஏ, பி, சி, டி என இருபத்தியாறு எழுத்துகள் மட்டுமே தெரிந்திருந்தது. வகுப்பு தொடங்கிய சில நாட்களில் ஒன், ட்டூ, த்ரி என்று எண்களில்  ஆரம்பித்திருந்தார்கள். அப்போது பதினைந்து…

  • வெல்கம் 2014!

    முந்தைய ஆண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் நிறைய அனுபவப் பாடங்களையும், சில நல்ல நட்புகளையும் அடையாளம் காட்டியுள்ளது. என்னால் ஆனா காரியங்கள் என இதுவரை இயன்றதை இச்சமூகத்திற்கு செய்தி வந்திருந்தேன். ஆனால் கடந்த ஆண்டில் இருந்து ஆட்டிசம் விழிப்புணர்வுக்குத்தான் முதலிடம் என்று முடிவெடுத்து செயலில் இறங்கினேன். கனிக்கு என் அருகாமை தேவை என்பதால், அலுவலகம் விட்டதும் வேறு எந்த கூட்டங்களுக்கும் செல்லமுடியாமல், வீட்டுக்கு ஓடிவந்து கொண்டிருக்கிறேன். இனியும் சில ஆண்டுகள் இப்படித்தான் போகுமென நினைக்கிறேன். நூல்வெளியீடு, இலக்கியக்கூட்டம் என…

  • 21. ஆட்டிசம்- சில புரிதல்கள் – ஓர் ஆவணப்படம் (திரைக்கு அப்பால்)

    ஆட்டிசம் பற்றி என் அனுபவப் பயணத்தினைக்கொண்டு, ஒரு விழிப்புணர்வு ஆவணப்படம் எடுக்கலாம் என அதற்கான வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, அண்ணன் கார்மல் மூலம் விபரம் அறிந்த திரு. கைலாசம் சார் அழைத்தார். (அப்போது சானலின் ஹெட்-ஆக இருந்தார்) தனியா பண்ணப்போறியா..? ஆமாசார் பேசாம சானலுக்கு பண்ணிடேன். நிறைய பேருக்கு போய்ச்சேரும். நான் மவுனமாக நின்றிருந்தேன். இதன் மூலம் விருதுகிருதுன்னு ஏதுனா யோசிக்கிறியா? இல்லசார். விழிப்புணர்வும், பெத்தவங்களுக்கு ஒரு நம்பிக்கையும் கொடுக்கனும்னு தான் யோசிச்சிருக்கிறேன். அப்ப சானலுக்கே பண்ணு..…

  • நான் மட்டும், ஏன் இப்படி? -நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன்

    கிருஷ்ணா என்றொரு அற்புதமான மனிதர், எழுத்தாளர், இளைஞர், வித்தியாசமானவர். அண்மையில் “ஒய் மீ?’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் அவர் எழுதிய புத்தகம் ஆளுநர் கே. ரோசய்யாவால் வெளியிடப்பட்டது. “சரி…. இது என்ன புத்தக விமர்சனமா?’ என்ற கேள்வி உங்கள் கண்களில் எழுவது தெரிகிறது. விமர்சனம் இல்லை. வித்தியாசம். கிருஷ்ணாவுக்கு “ஆட்டிசம்’. “ஆட்டிசம்’ என்ற சொல்லுக்கு “மன இறுக்கம்’ என்று தமிழாக்கியுள்ளார்கள். “மதியிறுக்கம்’ என்றும் கூறுகிறார்கள். ஆட்டிசத்தின் பாதிப்பு ஒருவரைத் தன்னுள்ளே அமிழ்ந்து போகவைக்கும், வெளி உலகத்துடன் தொடர்பு…

  • தகவல் அறியும் உரிமைச்சட்டம்- ஓர் அறிமுகம்

    தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும். சட்டம் எதற்கு? அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும்.…

  • ஆட்டிசம் – விரைவாக அறிந்துகொள்ள சில எளிய வழிகள்

    ஆட்டிசம் – விரைவாக அறிந்துகொள்ள சில எளிய வழிகள்

    இந்தியாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் சரியான புள்ளிவிபரங்கள் இங்கே இல்லை. பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரை ஆட்டிசம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. மேலை நாடுகளோடு, ஒப்பிடும் போது இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது. இந்தியாவில் வட இந்தியாவோடு ஒப்பிடும் போது, தென்னிந்தியாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தென்னிந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது. ஆட்டிசம் என்பது மூளை தகவல்களை பயன்படுத்திப்…

  • சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுகம்-கூட்டம்

    எதிர் வரும் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில் காலை10மணிக்கு சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுகம் – கூட்டம். துவக்கத்தில் புதியவர்களின் கவிதை வாசிப்பு. அப்புறம் நூலாசிரியர் அறிமுகம்- எழுத்தாளர். ஆங்கரை பைரவி. சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுக உரை- எழுத்தாளர். தோழர். பாட்டாளி. இறுதியில் ஏற்புரை நூலாசிரியர் என திட்டமிட்டிருக்கிறார்கள். நான் போகிறேன். முடிந்தவர்களும் கலந்துகொள்ளுங்கள்.. – விழா ஏற்பாடு திருச்சி கலை இலக்கியப் பெருமன்றம்.

  • பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ – ஸ்டாலின் ஃபெலிக்ஸ்

    பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ சமூக ஆர்வலர், எழுத்தாளர், ஊடகவியலாளர் என பல முகங்கள் கொண்ட பாலபாரதியின் முதல் சிறுகதை தொகுப்பு ‘சாமியாட்டம்’. பன்னிரெண்டு சிறுகதைகளை கொண்ட இந்த தொகுப்பினூடே பயணிக்கும் போது சில கதைகள் புலம் பெயர் வாழ்வின் வெம்மையையும் சில மாலை நேரத்து மழை குளிர்ச்சியையும் தருகின்றது. இச்சிறுகதைகளின் வழியாய் ஆசிரியரின் அகவுலகை எளிதாய் தரிசிக்க முடிகிறது. ‘அம்மாவின் கை உணவிற்கு ஏங்கும் வாலிபனாய்’ ‘சாதிய படிநிலையை கண்டு சாடும் முற்போக்குவாதியாய்’ ‘ஊரின் நினைவை தன்னோடு சுமந்து திரியும்…

  • சாமியாட்டம் – ஒரு பார்வை -க.ரா

    சாமியாட்டம் – ஒரு பார்வை சாமியாட்டம் முதலில் ஒரு சொல். இந்த கட்டுரையை தயவு செய்து ஒரு விமர்சனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு வாசகனாக நான் வாசித்து உணர்ந்ததை மற்றவர்களுக்கும் கடத்தும் ஒரு சிறு முயற்சி மட்டுமே இக்கட்டுரை. கதாசிரியர் தாம் பிறந்த மண்ணிலும் தன் தொழில் பொருட்டு தான் தங்க நேர்ந்த ஊர்களிலும் தன்னை சுற்றி நடந்த நிகழ்வுகளை எழுத்தில் கோர்த்திருக்கிறார். அவர், அவர் வாழ்வில் கடந்து வந்த இந்த தருணங்களில்  சிலவற்றையாவது நாம் கடந்து…