Category: வீடியோ

  • வணக்கம் தமிழா- நேர்காணல்

    சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு இது. அதே நிறுவனத்தில் செய்தியாளனாகவும் பணியாற்றி இருந்தேன். அதை நினைவுகூர்ந்து அங்கே பணியாற்றிய பலரும் தொலைபேசியில் அழைத்துப் பேசினர். பெரும் மகிழ்ச்சியைத் தந்த சமீபத்திய நேர்காணல் இது. மரப்பாச்சி சொன்ன ரகசியம் – நூலுக்கு பால சாகித்ய புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டத்தைத்தொடர்ந்து இந்த நேர்காணல் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. யூடியூப் சுட்டி இங்கே

  • துலக்கம் – விமர்சனங்கள்

    துலக்கம் அமெரிக்காவில் ஒரு சிறுவனை திடீரென்று காணவில்லை. பெற்றோர் பதறிப்போய் தேடுகிறார்கள். சிறுவனுக்கு ‘ஆட்டிசம்’ பிரச்சினை வேறு உண்டு. மூன்று நாட்கள் கழித்து, அவர்கள் இருந்த ஊரிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தள்ளி வேறொரு ஊரில் அவனை கண்டுபிடித்தார்கள். அந்த மூன்று நாட்களும் பெற்றோர் பட்ட பாடு சொல்லி மாளாது. சாதாரண நிலையில் இருக்கும் குழந்தைகள் காணோம் என்றாலே கண்டுபிடிப்பது கடினம். இவனோ ஆட்டிச பாதிப்பில் இருப்பவன். ஆட்டிசம் பற்றிய புரிதல் இல்லாதவர்களைப் பொறுத்தவரை அவன் மனநிலை…

  • 21. ஆட்டிசம்- சில புரிதல்கள் – ஓர் ஆவணப்படம் (திரைக்கு அப்பால்)

    ஆட்டிசம் பற்றி என் அனுபவப் பயணத்தினைக்கொண்டு, ஒரு விழிப்புணர்வு ஆவணப்படம் எடுக்கலாம் என அதற்கான வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, அண்ணன் கார்மல் மூலம் விபரம் அறிந்த திரு. கைலாசம் சார் அழைத்தார். (அப்போது சானலின் ஹெட்-ஆக இருந்தார்) தனியா பண்ணப்போறியா..? ஆமாசார் பேசாம சானலுக்கு பண்ணிடேன். நிறைய பேருக்கு போய்ச்சேரும். நான் மவுனமாக நின்றிருந்தேன். இதன் மூலம் விருதுகிருதுன்னு ஏதுனா யோசிக்கிறியா? இல்லசார். விழிப்புணர்வும், பெத்தவங்களுக்கு ஒரு நம்பிக்கையும் கொடுக்கனும்னு தான் யோசிச்சிருக்கிறேன். அப்ப சானலுக்கே பண்ணு..…

  • ஆட்டிசம் – Nammal Thammil – Asia net tv

    மலையாள தொலைக்காட்சியான ஏசியாநெட்டில் ஆட்டிசம் தொடர்பான விவாத நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்தது. இங்லீஸ் மருத்துவர்களின் பணம் பிடுங்கும் குணமும், இந்திய மருத்துவ வைத்தியர்களின் பணம் பிடுங்கும் குணமும் பட்டவர்த்தனமாக வெளிவந்திருக்கிறது. அரசு இக்குழந்தைகளின் பால் திரும்பவில்லை என்பதற்கு மேலும் வலு சேர்க்கும் வீடியோகாட்சிகள் இவை. பாகம்1:- http://www.youtube.com/watch?v=C3a42zcBBao& பாகம்2:- http://www.youtube.com/watch?v=Rx6zTm98Hxc& என் சேமிப்பிற்காகவும் இங்கே!

  • ஆட்டிசம் – வரலாறு

    எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது, தன்னந்தனியே சிரித்துக்கொள்வது, சுற்றக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது, சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங்கூட்டத்தில் தனி ஒருவனாக இருப்பது என்பது ஆட்டிசத்தின் கூறுகளாக நாம் இன்று அறிந்திருக்கிறோம். ஆனால்.. இதை முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது அந்த மருத்துவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை நினைத்தாலே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. குழந்தை பிறந்த பின் – காது கேட்காமல் போவது, பேசாத்தன்மை, பார்வைக்குறைபாடு, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்குறைபாடு போன்றவற்றை…

  • ராமனின் பெயரால்..

    விவரணைப் படங்களில் உலக அளவில் பேசப்படும் இந்திய இயக்குனர் ஆனந்த் பட்வர்த்தன். பல விருதுகளைப் பெற்றிருக்கும் இவரின் பல படங்கள் அரசு இயந்திரத்திற்கு எதிரானவையாக இருந்திருக்கின்றன. அதேசமயம் சாமானியர்களில் வாழ்க்கை பிரச்சனையை பேசும் படங்களாகவும் அவை இருப்பது இயல்பானது. 2002ல் மும்பையில் நடந்த உலகத்திரைப்பட விழாவில் இவரின் ‘வார் அண்ட் பீஸ்’ படம் திரையிடப்பட்டு, சர்ச்சைகளுக்கு மத்தில் விருதுக்கு தேர்வானது. அப்போது அதே விழாவில் தான் இப்படத்தினை பார்த்தேன். அதன் பின் ஆனந்த் பட்வர்த்தனின் சில படங்களை…

  • தடைகளைத் தாண்டி.. நாளை திரைக்கு வருகிறார் டாக்டர் அம்பேத்கர் (தமிழில்)

    ஒரு மாமாங்கத்திற்கு பிறகு பல தடைகளைத்தாட்டி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது ‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ திரைப்படம். மிகப் பெரும் போராட்டத்திற்கும், நீதிமன்றத் தீர்ப்பிற்கும் பிறகு திரைப்படத்தை முடக்கி வைத்திருந்தவர்கள் வழி விட்டு, ஒதுங்கவேண்டியதாகிவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னையும், தன் வாழ்வையும் அர்ப்பணித்துக் கொண்ட டாக்டர் பாபா சகேப்பின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம். எடிட்டர் லெனின் தன் சொந்த பணத்தில் இருந்து ரூ. 6லட்சத்தை இப்படம் வெளியாவதற்க்காக கொடுத்துள்ளார். அவரின் உதவியுடன்,தமிழ்நாடு முற்போக்கு…

  • கவாலி பாடல்

    மும்பையில் வாழ்ந்த காலங்களில் அதிக நேரத்தை விழுங்கியது, மின் தொடர் வண்டி பயணங்கள் தான். வீட்டில் உறங்கிய பொழுதுகளை விட மின் தொடர் வண்டியில் உறங்கிய நாட்கள் அதிகமாக இருக்கும். அப்படி ஒரு பயணத்தின் போது, முதல்முதலில் கவாலி பாடல் ஒன்றை கேட்டேன். ”நிலவைத்தொடும் மனிதா- கேள் மரத்தின் விந்தையை” என்று தொடங்கும் அந்த பாடல் பல நாட்களுக்கு என்னை வதைத்துக் கொண்டிருந்தது. பொதுவாக கவாலி பாடல்கள் உருதுமொழியில் தான் இயற்றப்படுகிறது. அதன் இசை வடிவம், கொஞ்சம்…

  • DUPLICATE CREDIT CARD- ஓர் எச்சரிக்கை!! (Exclusive Visual)

    வாங்கும் பொருளுக்கு உடனடியாக பணம் கட்டத் தேவையில்லை. பொருள் வாங்கிய பின் 40 நாட்கள் கழித்து தான் முதல் பில்லே வரும். அப்போது கூட முழுப்பணத்தை செலுத்த வேண்டியதில்லை. தவணை முறையில் கட்டினால் போதும் என்ற உறுதிமொழிகளை நம்பி கிரெடிட் கார்டுகளை மக்கள் தேய்த்து வருகிறார்கள். பிளாஸ்டிக் பணம் என்று அழைக்கப்படும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மேலை நாடுகளைப் போல இங்கும் கூடியுள்ளது. கிரெடிட் கார்டு பயனர்களிடம் சமீபகாலமாக அச்சத்தை ஏற்படுத்தியுள்ள போலி கிரெடிட் கார்டுகளின்…