Tag: அனுபவம்

  • 20. ஆட்டிசம் – நம்பிக்கை தரும் மனிதர்கள்- 5

    இது பிரவீன் கதை பிரவீனுக்கு ஏதோ பிரச்சனை என்று கண்டுகொண்டபோது பதினோரு மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தது. டெவலப்மெண்ட் டிலே, முளைவளர்ச்சிக்குறைபாடு அல்லது காது கேட்பதில்லை என்பதாக மருத்துவர்கள் ஆளுக்கொரு காரணங்களைச்  சொல்லிக்கொண்டிருந்தார்கள். சமூக சேவகரான அந்த தகப்பனும், ஆசிரியையான அந்த தாயும் தங்கள் பணிகள் போக மற்ற நேரத்தில் விடாமல் ஊர் ஊறாகச்சுற்றி ஒவ்வொரு மருத்துவரிடமும் குழந்தை பிரவீனை காட்டிக்கொண்டிருந்தார்கள். அக்குழந்தை நான்குவயதை நெருங்கும் போது, ஆட்டிசம் பாதிப்பு தான் இருக்கவேண்டும் என்று உறுதிபட, சேலம் அரசு…

  • 19. ஆட்டிசம்: NIEPMD என்னும் வழிகாட்டி

    ஆட்டிசம் என்றழைக்கப்படும் தன்முனைப்புக்குறைபாடு, லேர்னிங் டிஸபிளிட்டி என்று சொல்லப்படுகின்ற கற்றல்குறைபாடு உட்பட.. பல்வேறு குறைபாடுகளை உடைய குழந்தைளின் நிலையை மதிப்பீடு(assessment) செய்வது மிகவும் அவசியம். அதற்கு சென்னைக்கு அருகில் உள்ள அரசு நிறுவனமான niepmdஐ பரிந்துரைக்கிறேன். மனிதநேயமிக்க ஊழையர்களைக்கொண்ட இந்த நிறுவன ஊழியர்களின் அணுகுமுறை நிச்சயம் குறிப்பிட்டு பாரட்டப்படவேண்டியதாக உள்ளது. முகவரியும், வழித்தட வரைபடமும் கீழே:- National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD) East Coast Road, Muttukadu, Kovalam…

  • நன்றி நவிலல்- ஆட்டிசம் : சில புரிதல்கள் வெளியீட்டு விழா

    பாரதி பதிப்பகம் தோழர் நாகராசனுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போது, எத்தனை பேரு வருவாங்கன்னு தெரியுமா தோழர்? சேர் எல்லாம் போட்டு வைக்கனும்னு’ கேட்டார். சுமார் 75ல இருந்து 100 பேர் வருவாங்கன்னு நினைக்கிறேன் என்றேன். என்னது அம்புட்டுப்பேரா.. என்ன விளையாடுறீங்களா? அழைப்பிதழ் கூட அச்சடிக்கலை. மெயில்வழியாகவும், பேஸ்புக் வழியாகவும் தான் கொடுத்திருக்கோம்.. அத்தனை பேர் வர்றதுக்கு இது இலக்கிய நூலும் இல்லையே?  என்றார் தீராசந்தேகத்துடன். நான் நம்பிக்கையாகச்சொன்னேன். இல்லைதோழர்.. நான் எதிர்பார்க்கிற அளவுக்கு ஆட்கள் வருவாங்க என்று! …

  • உனக்கேன் இவ்வளவு அக்கறை..

    ஆட்டிசம் தொடர்பான கட்டுரைகள் ஒரு தற்காலிக முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கிறேன். தொடர்ந்து ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வுக்காக எழுதிக்கொண்டிருப்பேன் என்றாலும் இதுவொரு கமா தான். //..உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.. //பராசக்தி படத்திற்காக கலைஞர் மு.கருணாநிதி எழுதிய வசனம். மேற்கண்ட வசனம் அப்படியே எங்களுக்கும் பொருந்தும். தொடர்ந்து…

  • பக்கத்து வீட்டு ரவுசு – பாகம் 2

    படித்தால் மட்டும் போதுமா-ன்னு ஒரு பழைய படம் நீங்கள் பார்த்திருக்கலாம். கண்ணதாசன் வரிகளுக்கு PB ஸ்ரீநிவாஸும், TM சௌந்தர்ராஜனும் உயிர் கொடுத்திருப்பார்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. அந்த பாடலுக்கு படத்தில் பாலாஜியும், சிவாஜியும் நடித்திருப்பார்கள். நீச்சல் குளத்துக்குள்ளிருந்து.. பாடுவது போல படமாக்கி இருப்பார்கள். சில நாட்களுக்கு முன் காலை அப்பாடல் மெகா டிவியில் ஒளிபரப்பானது. “பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்லவேண்டுமா பூ ஒன்று கண்டேன் முகம்…

  • விடுபட்டவை 25-11-11

    பகலில் சூரியனோடும், இரவில் சந்திரனோடும் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையை தமிழக மக்களுக்கு தருவதற்காகவே டங்கடாரகை மின்சாரத்தின் விலையை ஏற்றி இருக்கிறார் என்பதை டமில் பீப்பிள் உணரவேண்டும். #அண்ணா நாமம்.. எம்.ஜி.ஆர் நாமம்.. டங்கடாரகை நாமம். மொத்தம் !!! குறிப்பு:- கிடைத்த முதல் தகவலின் படி: தமிழக அரசு மின்கட்டண உயர்த்தப்போவது அறிந்திருப்பீர்கள். வீடுகளுக்கு 1-100 யூனிட் மின்சாரம் ரூ.1.50 என்றும் 101-முதல் 600 வரை ரூ.5.75/-என்றும் தீர்மானித்திருப்பதாக சொல்கிறார்கள்.(நிறுவனங்களுக்கு வேறு கதை) ———— கொஞ்ச நாட்களாகவே…

  • எச்சரிக்கை: ON LINE FRAUD

    கடந்த ஆகஸ்ட் மாதம் http://www.indiavarta.com/ இணையதளத்தின் மூலம் ஒரு பொருள் வாங்க ஆடர் செய்தேன். பொருளின் விலை ரூ. 1.799.00/-. ஐசிஐசிஐ வங்கி மூலம் பணம் செலுத்தினேன். பணம் செலுத்திய சில நிமிடங்களியேயே ஏதோ எரர் காட்டி, அந்த பக்கம் வேலை செய்ய வில்லை. அதனால் இன்னொரு முறை http://www.indiavarta.com/ தளத்தில் குறிப்பிட்ட பொருளுக்கு இன்னோரு முறை பணம் செலுத்தி, ஆடரை உறுதி படுத்தினேன். (இதற்குள் முதல் தடவையே வங்கில் இருந்து பணம் எடுக்கப் படிருந்தது. )…

  • விடுபட்டவை 08-11-11

    கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் தில்லு முல்லு, முல்லு தில்லு என்று ஏகப்பட்டது நடந்திருப்பதாகக்கூறி, ஸ்டார் ஹெல்த் இன்சூயரன்ஸுக்கு கொடுக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்தார் முதல்வர் ஜெயலலிதா. பலரும் எதிர்ப்பு காட்டிய நிலையில், கொஞ்ச நாளுக்கு பிறகு அத்திட்டம் எம்.ஜி.ஆர் பெயரில் தொடரும் என்று அறிவிப்பு வெளியானது. சமீபத்தில் புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டது. நம் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் நான்கும் களத்தில் குதித்தன. கடந்த முறை தனியாரிடமிருந்து கிடைத்த, அனுபவத்தில் இம்முறை…

  • தகப்பனாய் உணர்தலும் சுகமே!

    — உறக்கத்தில் கடிகார முட்கள் போல கட்டிலில் சுற்றி வந்தாலும் பசியெடுக்கும் நடுசாமத்தில் சரியாக அவன் அம்மாவை அடையாளம் கண்டு எழுப்பி விடுகிறான் பசியை உணர்ந்தவள் தாய் தான் என எப்படித்தான் உணர்ந்துகொள்கின்றனவோ குழந்தைகள் — இன்னுமா உன் மகன் பேசவில்லை என்ற சுற்றத்தாரின் கேள்விக்கு பயந்து உயிரற்றவைகளையும், உயிருள்ளவைகளின் பெயர்களையும் சொல்லிக்கொடுக்கிறேன் தினம் அவனுக்கு. சொற்களற்ற அவனது உலகத்தில் பெயர்கள் அழிந்து வெறும் சப்தங்களாக வெளியேறுகின்றன அவனிடமிருந்து — தோற்றுப்போன முயல் கதையும் தந்திரக்கார நரி…

  • நாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா- ஓர் இனிமையான அனுபவம்

    விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் நாஞ்சில் நாடனுக்கு சென்னையில் பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ரஷ்யன் கலாச்சார மையத்தில் மாலை 6.30மணிக்கு என்று அறிவித்திருந்தார்கள். கொஞ்சம் முன்னதாகவே போய்ச்சேர்ந்தோம். நண்பர்கள் ரங்கசாமி, கே.ஆர்.அதியமான் போன்றவர்கள் எனக்கு முன்னமே வந்திருந்தனர். அப்படியே அவர்களோடு பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தினர் எல்லோரும் வேட்டியில் வந்து அசத்தியிருந்தனர். புளியமரம் தங்கவேலுவையும் பார்த்தேன். மனுசன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்து ஆறுமாசம் ஆச்சாம். தெரியவே இல்லை. 🙁 ஆறுமணிக்கு சற்று முன்னதாக நாஞ்சில், ஜெமோ,…