Tag: அனுபவம்

  • ஜனவரி-3, சென்னையில் நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா

    நாஞ்சில் நாடன் இவ்வாண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தாமதம் தான் என்றாலும் சரியான நபரை விருதுக்குழு தேர்வு செய்திருப்பது கொஞ்சம் ஆசுவாசத்தை தந்தது. சந்தேகமில்லாமல் எதிர்வரும் புத்தகக்கண்காட்சியில் இம்முறை நாஞ்சில் நாடனின் நூல்கள் அதிகம் விற்பனையாகும். ’டாப் செல்லர்’ அண்ணாச்சி தான் 🙂 . ஒரு வாசகனாகவும், முன்னாள் புத்தக விற்பனையாளனகவும் நான் பார்த்த அனுபவத்தில் சொல்லுகிறேன். (என்ன செய்ய.. உண்மையான எழுத்துக்குக்கூட, விருது போன்ற அரிதாரங்கள் தேவைப்படுகிறது, அப்போது தான் மக்களின் கவனம்…

  • வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் வண்ணதாசன் வாழ்க!-கேணி-அனுபவம்!!

    நாங்கள் கலந்துகொள்ளும் கேணியின் இரண்டாவது கூட்டம் இது.  இதற்கு முன்  ச.தமிழ்ச்செல்வன் கலந்து கொண்ட கூட்டத்துக்கு போனோம். அப்புறம் இன்று. கடந்த முறை போல இல்லாமல் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே போய்ச்சேர்ந்துவிட்டோம். நாங்கள் போன போதே வாசலில் நிறைய இளைஞர்களைப் பார்க்க முடிந்தது. மழையின் காரணமாக கிணற்றடியில் உட்கார முடியாத நிலை ஏற்பட்டிருந்ததால் வீட்டின் உள்ளேயே பாய் விரித்து வைத்திருந்தார்கள். சரியாக மணி 3.50க்கு எல்லாம் சிதறிக்கிடந்தவர்கள் எல்லாம் வீட்டினுள் வந்து அமர்ந்துகொண்டார்கள். கூட்டம் அதிகமாக அதிகமாக..…

  • ஒரு செல்போனும், கிப்ட் கவரும் – பின்னே ஞானும்..!

    இரண்டு செல்போன்களில் ஒன்றை முன்னமே இசை எங்கிருந்து வருது பாணியில் தரையில் தட்டித்தட்டி.. காலி பண்ணிவிட்டான் கனிவமுதன். அதில் சில நேரங்களில் எதிரில் இருந்து அழைப்பவரின் எண் வராது, அல்லது நான் பேசுவது எதிராளிக்கு கேட்காது. இன்னும் சில சமயங்களில் சத்தமே வராது, ஆனால் எதிராளிக்கு ரிங்க் போய்கிட்டே இருக்கும். இப்படி எத்தனை கோளாறுகள் உண்டோ அத்தனையும் அந்த செல்போன் ஏக காலத்தில் அனுபவித்து வந்தது. ஆனாலும் அதில் எஸ்.எம்.எஸ் அனுப்ப, எண்களை பார்த்துக்கொள்ள என பயன்படுத்தி…

  • எழுத்துக்கு கிடைக்கும் மரியாதை எழுதியவரின் பெயருக்கானது

    கவிதையின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது நண்பர்களால் தான். சிறுவயதிலேயே காமிக்ஸ், அம்புலிமாமா போன்ற கதை புத்தகங்கள் படிக்க தொடங்கி விட்டாலும்,எட்டாவது படிக்கும் போதே நூலகத்தில் உறுப்பினர் ஆனேன். அங்கும் வாண்டுமாமா, à®…à®´.வள்ளியப்பா, போன்ற எழுத்தாளர்களின் கதைத்தான் படித்து வந்தேன். அப்புறம், மாத நாவல்களின் அறிமுகம் ஏற்பட்டது.  கவிதையின் அறிமுகம் மட்டும் கொஞ்சம் தாமதமாகத்தான் தொடங்கியது. எட்டுக்கும் மேற்பட்ட நண்பர்கள் குழாம் அரட்டையில் ஈடுபடும்போது, எங்களின் பேச்சில் அனேகமாக இலக்கியமும், அரசியலுமே மையமாக இருக்கும். கம்பனிடம் ஒரு கேள்வி…

  • கடந்து போதல்.. (சிறுகதை)

    பயங்கரமான அந்த அலறலில் உறக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தேன். எனக்கு முன்னமே கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்திருந்தாள் ரேவதி. எத்தனையாவது அலறலில் உறக்கம் கலைந்தது என்பது தெரியாது. ஆனால் ரேவதி முதல் சத்தத்திலேயே எழுந்திருக்க வேண்டும். படுக்கையில் விழுந்த பின் இடையில் நான் எழுவதென்பது நடக்காத காரியம். அவளோ எனக்கு நேரெதிர் இரண்டு முறையாவது எழுந்து விடுவாள். பல முறை கனவுகளினால் பயந்து போய் என்னை எழுப்பி,எழுப்பி சோர்ந்து போய் படுத்திருக்கிறாள். இதை காலையில் அவளே சொல்லும் வரை…

  • பேய் வீடு

    உங்களுக்கு பேய்கள் பற்றித் தெரியுமா? பேய் கதைகள் கேட்டு இருக்கிறீர்களா..? புளிய மரத்தில் தூக்கு போட்டுக் கொண்ட சின்னையன் பேய், புருசன் கொடுமை தாங்காமல் கிணற்றில் குதித்து செத்துப்போன பொன்னம்மா பேய், காதல் மறுக்கப்பட்டதால் விஷம் குடித்து மரித்துப்போன கல்யாணி பேய்.. இப்படி பெயர் தெரிந்த பேய்கள் ஒரு புறமிருக்க. மோகினிப் பேய், ரத்தக் காட்டேரி, கொள்ளிவாய்ப் பிசாசு என  விதவிதமான பேய்கள், எல்லா பேய்களுக்கும் ஒவ்வொரு வித்தியாசமான கதைகள் எதற்கும் பஞ்சம் இருந்ததில்லை  அல்லது இருப்பதில்லை…

  • சினேகிதனின் அப்பா

    அப்போது நான் தமிழகத்திலிருந்து வந்துகொண்டிருந்த அரசியல் வார இதழின் மும்பை செய்தியாளன். அப்படியே அங்கே வந்துகொண்டிருந்த தமிழ்ப் பத்திரிக்கைகளில் கதை, கவிதை, கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது தான் அவன் பழக்கமானான். அவனும் மும்பை நாளிதழ்களில் கதை,கவிதை எழுதிக்கொண்டிருந்தவன். பத்திரிக்கை வாயிலாக தொலைபேசி எண் கிடைத்து, கிங்சர்கிளில் உள்ள பூங்காவில் ஒரு ஞாயிறு மதியம் சந்திப்பதென்று முடிவாகிறது. அங்கே இருந்தவரை, ஒவ்வொரு ஞாயிறும் நண்பர்களை ஏதேனும் ஒரு இடத்தில் சந்திப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தேன். அப்படி ஒரு ஞாயிறு மகேஸ்வரி பூங்காவுக்கு…

  • பக்கத்து வீட்டு ரவுசு…

    பக்கத்து வீடுல ஒரு பையன் இருக்கான். ஐந்திலிருந்து ஏழு வயசுக்குள் தான் இருக்கும். அவன் அடிக்கிற லூட்டிக்கு அளவே இல்லை. வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு போய் இருக்கிறான். சாமி கும்பிட்டு விட்டு அனுமார் இருந்த சன்னதியை வலம் வரத்தொடங்கி இருக்கிறான். கொஞ்ச நேரம் கழித்து அவை பார்த்த கோவில் அர்ச்சகருக்கு அதிர்ச்சி. வலமிருந்து இடமாக சுத்தாமல். பையன் இடமிருந்து வலமாக சுற்றிக்கொண்டிருந்திருக்கிறான். இவனது கோக்குமாக்கை பார்த்தவர் அவனை தடுத்து நிறுத்தி.. ’ஏண்டா இப்படி தலைகீழா சுத்தீண்டிருக்க?ன்னு…

  • குழந்தை வளர்ப்பில் ஆண்களின் பங்கு..

    என் பையனுக்கு மாதாந்திர தடுப்பூசி போடுவதற்காக குழந்தை நல மருத்துவரிடம் போய் இருந்தோம். டோக்கன் வாங்கி எங்கள் முறைக்காக காத்திருந்தோம். பலரும் தத்தம் குழந்தைகளுடன் அங்கே வந்திருந்தனர். எங்களுக்கு முன்னால் அமர்ந்திருந்த தம்பதியினரின் கையில் இருந்த ஆறுமாத குழந்தை ‘கக்கா’ போய்விட்டது. குழந்தையை சற்று பிடிங்க என்று மனைவி சொன்னது தான் தாமதம். வந்ததே கணவனுக்கு கோபம். மனைவியை கண்டபடி திட்டி விட்டு எழுந்து வெளியே போய் விட்டார். அவர் போவதையே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்த மனைவிக்கு என்ன…

  • DUPLICATE CREDIT CARD- ஓர் எச்சரிக்கை!! (Exclusive Visual)

    வாங்கும் பொருளுக்கு உடனடியாக பணம் கட்டத் தேவையில்லை. பொருள் வாங்கிய பின் 40 நாட்கள் கழித்து தான் முதல் பில்லே வரும். அப்போது கூட முழுப்பணத்தை செலுத்த வேண்டியதில்லை. தவணை முறையில் கட்டினால் போதும் என்ற உறுதிமொழிகளை நம்பி கிரெடிட் கார்டுகளை மக்கள் தேய்த்து வருகிறார்கள். பிளாஸ்டிக் பணம் என்று அழைக்கப்படும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மேலை நாடுகளைப் போல இங்கும் கூடியுள்ளது. கிரெடிட் கார்டு பயனர்களிடம் சமீபகாலமாக அச்சத்தை ஏற்படுத்தியுள்ள போலி கிரெடிட் கார்டுகளின்…