Tag: ஈழத்தமிழர்

  • ’ஈழம்-ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு ஓர் அறிமுகம்

    நான் மும்பையில் வசித்த காலங்களில் அறிமுகமானவர்களில் பாலாவும் ஒருவர். எனக்கு முன்னமே சென்னைக்கு வந்து குமுதத்தில் கார்டூனிஸ்டாக வேலைக்கு சேர்ந்தவர். திசை தெரியாமல் திக்கற்றுப் போய் சென்னை வந்திறங்கியபோது, தாயைப் போல அணைத்து, அரவனைத்த இளவல் இவன். பாலகிருஷ்ணன் என்பது தான் அவரின் இயற்பெயரும். எங்களிருவருக்கும் பெயரில் இருந்த ஒற்றுமை கருத்துக்களில் பலசமயங்களில் இருந்ததில்லை. அதனாலென்ன… நட்பு வேறு அரசியல் பார்வை வேறு என்று இருவருக்குமே புரிந்திருந்ததால்.. இன்றும் இந்த நட்பு இனிமையாக தொடர்கிறது. ஈழம் பற்றி…

  • பார்வதியம்மாளுக்கு ஒரு ராயல் சல்யூட்!

    “மயிர் நீப்பின் வாழாக் கவரி மாவன்னா ருயிர் நீப்பர் மானம் வரின்!” -திருவள்ளுவர் அதிகாரம்: மானம் குறள் இலக்கம்: 969

  • பிரபாகரனின் தாயாருக்கு அனுமதி மறுப்பு- கண்டனம்

    சென்னை, ஏப்.-17, சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வந்த பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரபாகரன் அவர்களைப் பெற்ற தாயார் பார்வதி அம்மையார் உடல் நலன் குன்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காக மலேசியாவில் உள்ள இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து ஆறு மாத காலத்திற்கு விசா பெற்று இந்தியாவுக்கு 16-ஏப்ரல்-2010 இரவு 10.45 மணிக்கு  விமானத்தில் வந்தார். படுத்தப்…

  • முதல்வர் கருணாநிதி மனதை கரைந்த கட்டுரை.. இதோ!

    கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா டுடே வார இதழின் தமிழ் பதிப்பில் வெளிவந்த இருள்படிந்த கூடாரங்கள் என்ற கட்டுரையே.. தமிழக முதல்வரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக அவரே கடிதம் எழுதி இருக்கிறார். இன்று காலை அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் முதல்வர். அதன் படி, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் வசதிக்காக ரூ.12 கோடியை ஒதுக்கி இருப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இலங்கை அகதிகள் நிலை குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்தது.…

  • விடுபட்டவை 23 August 09

    மிகுந்த மகிழ்சியாக உணர்கிறேன். இன்று வெற்றிகரமாக இலங்கை தமிழ்வலைப்பதிவர்களின் சந்திப்பு மிகச்சிறப்பாக நடந்தேறி இருக்கிறது. சந்திப்புக்கு என உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும், சந்திப்பில் கலந்துகொண்டு, மற்றவர்களின் அறிமுகமும் பெற்று, கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். பதிவர்களின் சந்திப்புகள் தொடந்து நடைபெறட்டும். எழுதுவதோடு மட்டுமல்லாமல்.. பல்வேறு வளர்ச்சிக்கும், நமது ஒற்றுமைக்கும் வழி வகுக்கட்டும் சந்திப்புகள். மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறேன். சந்திப்பின் ஒலிவடிவம் கேட்க.. மதுவதனன் பதிவுக்கு போகலாம். படங்களைக்காண.. வந்தியத்தேவன் மற்றும் ஆதிரை பதிவுக்கு…

  • விடுபட்டவை – 04.08.09

    சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக இருந்தவர் கே.சுரேஷ். இவர் தூத்துக்குடி துறைமுகம், சேது சமுத்திரத் திட்டம் ஆகியவற்றுக்காக நடக்கும் பணிகளில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கும், திமுகவுக்கும் மிகவும் வேண்டப்பட்டவர் என்ற பேச்சும் உள்ளது. இந்த முறை காங்கிரஸ்- திமுக கூட்டணி வெற்றி பெற்று வந்தபின் சில உள்ளடிகளால் டி.ஆர். பாலுவுக்கான வாய்ப்பு பறிபோனது. கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக காங்கிரஸைச் சேர்ந்த ஜி.கே. வாசன் பதவியேற்ற உடன், செய்த…

  • இனி அகதிகள் கதி என்ன?

    தொடர்ந்து சிங்கள அரசும், இந்திய அரசும், ஊடகங்களும் பிடிவாதமாக பிரபாகரனும், புலிகள் இயக்கமும் அழிந்து விட்டதாக சாதிக்க முயல்கின்றன. இடையிடையே வெகு சில ஊடகங்கள் அப்படியொன்றும் நடந்து விடாது என்ற நம்பிக்கையை பற்பல ஊகங்கள் மூலமும், உலாவரும் ஆதாரங்களின் மீதான சந்தேகங்கள் மூலமும் உயிர்ப்பிக்க முனைகின்றன. நிறைய அஞ்சலி கட்டுரைகள் – சில நிஜமான ரத்தக்கண்ணீரோடும், சில உள்ளுக்குள்ளே எழும் நிம்மதி பெருமூச்சை அடக்கிக் கொண்டும் எழுதப்பட்டு இணையமெங்கும் இறைக்கப் பட்ட வண்ணம் இருக்கின்றன. போர் ஓய்ந்து…

  • தமிழினத் துரோகிகள் ஒழிக!

    http://i454.photobucket.com/albums/qq262/chinthaka1250/19052009002.jpg http://www.fileden.com/files/2006/9/17/223855/paraya_id.JPG http://www.youtube.com/watch?v=RED0EjlrVAE வேறு என்ன சொல்ல.. துரோகத்தில் சிறந்த , மானங்கெட்டவர்களின் தலைமையின் கீழும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அற்ப அடிமைகள் நாம். 🙁 வீரவணக்கம்.. வீர வணக்கம்..

  • தி.மு.க கூட்டணி வெற்றி பெற முடியுமா?

    ஒரு பொது அறிவு தகவல்:- இந்த தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் போட்டிருக்கும் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? 1200 கோடி ரூபாய். ——– கொஞ்சமல்ல.. நிறையவே பயந்து போய் இருக்கிறது தி.மு.க! தேர்தல் தோல்வி பயம் அளவுக்கு அதிகமாக வாட்டிஎடுக்கிறது அங்கிருப்போரை. அதனாலேயே.. அதிகாரத்தின் வாயிலாக வெற்றியை அடைந்து விடலாம் என்று முனைந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை கிடைக்கும் வெற்றிகள் கூட நிச்சயம் நியாயமான முறையில் கிடைத்ததாக இருக்காது என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். கடந்த கால வரலாற்றில்…

  • முத்துக்குமாரின் உடல் வீழ்ந்து கிடக்கும் சடலமல்ல..

    தமிழர்களே! தமிழர்களே! என்னைத் தூக்கி கடலில் எரிந்தாலும் நான் கட்டுமரமாக மிதப்பேன். கவிழ்த்து விட மாட்டேன்’’ திரு. மு.கருணாநிதி. தமிழின் சிறந்த வசனகர்த்தாவாகிய கலைஞர் கருணாநிதியின் மேற்கண்ட வசன வரிகளைப் போன்ற எத்தனையோ வசனங்களைக் கேட்டு ஏமந்த தமிழினத்தின் முன் நம் அவமானத்தின் சாட்சியமாய் பெருமிதத்துடன் கிடக்கிறது தோழர் முத்துகுமாரின் உடல். கருணாநிதி அரசின் கையாலாகாத் தனத்திற்கும் ரத்த வெறி பிடித்த சிங்கள பேரினவாத பாசிசத்திற்கும் முதுகில் குத்தும் இந்திய வல்லாதிக்கத்தின் துரோகத்திற்கும் எதிராய் தன் மரணத்தை…