Tag: சிறார் இலக்கியம்

  • மந்திரச் சந்திப்பு -18

    பூமிக்கு அடியில் தாவரங்களின் பாதுகாவலர்களையும், வண்ண வீரர்களையும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் வளன். அவர்களில் வண்ண வீரர்கள் அனைவருமே சின்னச் சின்னதாக வண்ண பைகளை இடுப்பில் கட்டிருந்தனர். அவற்றில் பச்சை நிறம் அல்லது பழுப்பு நிறக் கலவைகள் இருந்தன. இவனே கறையான் அளவில் இருந்தான். அந்த வீரர்கள் இவனை விட, சின்னதாக இருந்தனர். தன் கண்களை அவனாலேயே நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். பழுப்பு வண்ணப் பையுடன் சென்றுகொண்டிருந்த ஒரு வண்ண வீரனை, கை நீட்டி நிறுத்தினான் வளன்.…

  • மந்திரச் சந்திப்பு – 17

    மண்புழுவின் மேலிருந்து, சறுக்கிக்கொண்டு கீழே இறங்கியதும், அதற்கு நன்றி சொன்ன வளன் அதன் பெயரைக் கேட்டான். “சின்ன மாத்தன்” என்றது அந்த மண்புழு. “சின்ன மாத்தனா?” “ஆமா, எங்க தாத்தா பெயர் ‘மாத்தன் மண்புழு’ மிகவும் பிரபலம். பென்ஷன் கேட்டு கேஸ் எல்லாம் நடத்தி இருக்கார்!” என்றது சின்ன மாத்தன். “அப்படியா..?” “ஆமா, ’மாத்தன் மண்புழுவின் வழக்கு’ என்னும் பெயரில் தனிக்கதையாகவே வந்திருக்கு. வாங்கிப் படித்து அறிந்துகொள்” என்றது சின்ன மாத்தன். “ஓ.. கண்டிப்பாகப் படிக்கிறேன். சரி!…

  • சிறார் இலக்கியம்: எதிர்காலம்

      சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரும் படைப்பாளிதான். என் கையில் இருந்த புத்தகப்பையை வாங்கிப் பார்த்தார். அதன் உள்ளே ஏழெட்டு சிறார் இலக்கிய புத்தகங்கள் இருந்தது. “இதையெல்லாம் விட்டுட்டு வந்து பலவருசம் ஆச்சு.. இன்னுமா இதையெல்லாம் படிச்சிகிட்டு இருக்க?” என்று கேட்டார். “வாசிப்புக்கு ஏதுப்பா எல்லை. எல்லாத்தையும் தான் வாசிக்கிறேன்” என்று சொன்னேன். “எப்படித்தான் இன்னும் இதையெல்லாம் படிக்கிறியோ?” என்று சலித்துகொண்டார். நல்ல வேளை சமீபத்தில் வெளிவந்த என்னுடைய சிறார் நாவல் பற்றி அவருக்கு ஏதும்…

  • நல்ல சூழல் என்பது நாம் நம் குழந்தைகளுக்குத் தரும் நல்ல சிந்தனைகளே! -ஆர்.எம். கெளரி (ஓய்வு பெற்ற ஆசிரியர்)

    (ஆமை காட்டிய அற்புத உலகம்- நூல் குறித்து, தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கும் ஆசிரியர் அம்மா கௌரி அவர்களுக்கு நன்றி) ================ ஒரு தாய் தன் குழந்தைகளுக்குக் கதை சொல்லி மகிழ்விப்பாள். ஆனால் எனக்கு என் பிள்ளைகள் கதை சொல்லி அதை நான் கேட்கும் வாய்ப்புக் கிடைத்துவிட்டது. என் பிள்ளை போன்ற யெஸ்.பாலபாரதியின் சிறார் நாவல் “ஆமை காட்டிய அற்புத உலகம்” படிக்கும் போது நானும் ஒரு குழந்தையாகவே உணர்ந்தேன். பாலா – பொதுவுடைமைவாதி. தன் சிந்தனையைப் படைப்பில் கொண்டுவரும்…

  • வாசிப்பனுபவம் – வாத்து ராஜா

    வாத்து ராஜா மடமன்னன் ஒருவனுக்கு மக்கள் வைத்துள்ள பெயர் தான் வாத்து ராஜா. அது அம்மன்னனுக்கும் தெரியவர.. நாட்டில் உள்ள எல்லா வாத்துக்களையும் கொல்ல உத்தரவிடுகிறான். வாத்துக்களும் கொல்லப்படுகின்றன. சுந்தரி என்ற சிறுமி தன்னிடமுள்ள வாத்துகளை காப்பாற்றிக்கொள்ள என்னென்ன முயற்சிகள் மேற்கொள்கிறாள் என்பது கதை. ஆனால் இது நேரடி கதையாக இல்லாமல் அமுதா என்ற சிறுமிக்கு அவள் பாட்டி சொல்லும் கதையாக விரிகிறது. கதைக்குள் கதை. ஒரு இடத்தில் பாட்டி கதையை முடிக்காமல்.. வேறு ஊருக்கு சென்று…