Tag: சிறார் நாவல்

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -13]

    அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா என எல்லோரும் சமாதானம் சொல்லிப் பார்த்துவிட்டனர். ஆனால் ஷாலுவால் மரப்பாச்சி கை நழுவிப் போனதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்கும் விடுதிக்கு வந்த பின்னும் அழுது அழுது முகமெல்லாம் வீங்கி இருந்தது. யாரோடும் பேசாமல் கட்டிலின் ஓரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். “இதோ பார் ஷாலு… இப்படியே மூஞ்சியைத் தூக்கி வச்சுகிட்டு உட்கார்றதுல எந்த அர்த்தமும் இல்லை. அப்பா வேணும்னா… வேற மரப்பாச்சி வாங்கித்தாரேன்” என்றார். இவள் எதுவும் பேசவில்லை. “அவகிட்ட என்ன கெஞ்சிகிட்டு…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -12]

    காரில் இருந்து இறங்கியதும் சுற்றிலும் பார்த்தாள் ஷாலு. அந்த இடம் மலையில் இருந்தாலும் சமதளமாக இருந்தது. மைதானம் போன்ற அந்த இடத்தின் முடிவில் மலையின் சரிவு தொடங்கியது. அதனால் அங்கே சில மைல்கல் நட்டு, மஞ்சள் வண்ணம் பூசி இருந்தனர். அங்கே இவர்களைப்போலவே பாராகிளைடிங்கில் பறக்க பத்துக்கும் மேற்பட்டவர்கள் நின்றிருந்தனர். அவர்களின் குடும்பத்தினர் தங்கள் வந்த கார்களை ஒட்டி நின்று கொண்டிருந்தனர். பாராகிளைடிங் பயிற்சியாளரிடம் சென்று செல்வம் பேசிவிட்டு வந்தார். அம்மாவும் சித்தியும் பறக்க மறுத்து விட்டனர்.…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -11]

    மறுநாள். பொழுது புலர்ந்து சூரியன் சோம்பல் முறிக்கும் முன் பெரியவர்கள் எல்லோரும் தயாராகிவிட்டார்கள். ஷாலு, ஹரி, சூர்யா மூவரையும் தூக்கத்திலேயே காரில் ஏற்றி விட்டனர். செல்வம்தான் காரை ஓட்டினார். நகரைக் கடந்து கார் நெடுஞ்சாலையில் ஓடத்தொடங்கியது. ஹெட்லைட் போட்டுக்கொண்டு அந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தன. சாலைக்கு அந்தப்பக்கம் வரும் வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சம் கண்ணைப் பறித்தது. நடுவே வைக்கப்பட்டிருந்த செடிகளினால் முழு விளக்கொளியும் அப்படியே நேராக விழவில்லை என்பது சற்று ஆறுதல். வேலூரைத் தாண்டி, ஆம்பூர்…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 9]

    வகுப்பறைக்குள் வந்து தனது இருக்கையில் அமர்ந்த பின்னும் நேத்ராவுக்கு மரப்பாச்சி நினைவாகவே இருந்தது. ஆசிரியர் எழுதிப் போட்டுக் கொண்டிருந்த கணக்குப் பாடத்தில் மனது செல்லவே இல்லை. என்னமோ வித்தியாசமாக நடப்பதாகத் தோன்றியது. மைதானத்தில் மரப்பாச்சி கைநழுவி விழுந்ததா? அல்லது கை நழுவி விழுந்ததா? மைதானத்திற்குள் அது உண்மையில் ஓடியதா, இல்லை காற்றில் பறந்ததா எதுவுமே புரியவில்லை. கேள்வி கேட்ட மிஸ்ஸிடமாவது எதையாவது சொல்லி இருக்கலாம். ஆனால் உண்மையைச் சொல்லி, இப்படி மாட்டிக்கொண்டோமே என்பதை நினைக்க நினைக்க அழுகையாக…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 8]

    பள்ளியில் வந்து இறங்கியதும், நேராகப் பூஜாவின் வகுப்பறைக்குச் சென்றாள் ஷாலு. அவளது இருக்கை காலியாக இருந்தது. யாரிடமும் பேசாமல் தன்னுடைய வகுப்பறையில் வந்து அமர்ந்து கொண்டாள். ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தாலும் ஷாலுவின் கவனம் அதில் பதியவே இல்லை. பூஜா அமரவேண்டிய இடம் காலியாக இருப்பதையே நினைத்துக் கொண்டிருந்தாள். முதல்நாள் பயந்த அவளது முகம் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. அவள் இல்லாத வெற்றிடம் மனதை சங்கடப்படுத்தியது. யாரிடம் விசாரிப்பது என்றும் தெரியவில்லை. பூஜாவின் வீட்டிற்கு அருகில் இவள்…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 7]

    முதல் மாடியில் இருந்து பார்ப்பது போல் இல்லாமல், பலமாடி கட்டடத்தின் மிகவும் உயரமான ஜன்னல் வழியாக, கீழே பார்ப்பது போலிருந்தது. என்ன செய்வது மரப்பாச்சியின் உருவம் அப்படி! வீட்டில் இருந்து வெளியே வர உதவிய கேபிள் டிவியின் வயர் எங்கே செல்கிறது என்று கவனித்தது மரப்பாச்சி. அது கீழ்வீட்டுக்குச் சென்றது. ஐடியா… இந்த வயரையே பிடித்துக் கீழ்வீட்டுக்குச் சென்று அங்கிருந்து நாம் வெளியேறிவிடலாம் என்று திட்டமிட்டது. இந்தக் கீழ்வீட்டில் தானே அந்தத் தாத்தாவும், பாட்டியும் இருக்கிறார்கள். அவர்களையும்…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 6]

    பூஜா வீட்டுக்குள் நுழையும் போதே, அப்பா ஹாலில் அமர்ந்து வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்தார். இது தினப்படி வழக்கம். காய்கறிகளை அப்பா வெட்டினால் அம்மா சமையல். அம்மா வெட்டினால் அப்பா சமையல். இன்று அம்மா கிச்சனில் இருந்தார். கதவு திறந்த சத்தம் கேட்டு, ஹாலுக்கு வந்த அம்மாவின் முகம் கடுகடுவென இருந்தது. “எங்கடி போயிட்டு வர்ற..?” “டான்ஸ் கிளஸுக்கும்மா..” “அது தெரியுது… ஆனா… ஸ்கூல் விட்டு வீட்டுக்கே வரலையாம்மே… கீழே தாத்தா சொன்னாரே…” என்று அம்மா கேட்டார். பதில் ஏதும்…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 5]

    மரப்பாச்சி சொன்ன அதன் கதையை எல்லாம் கேட்ட பிறகும் பூஜாவால் நம்ப முடியவில்லை. இமைகளை மூட மறந்து அப்படியே அமர்ந்திருந்தாள். “ஏய்… என்னடி… இப்படி உட்கார்ந்திருக்க…?” என்றபடியே பூஜாவின் தோள் தொட்டு உலுக்கினாள் ஷாலு. “என்ன சொல்லுறதுன்னே தெரியலையேடி… இப்படி ஒரு மரப்பாச்சி பேசினால்… ஷாக் ஆகாம இருக்க முடியுமா?” “ஹா…ஹா…” என்று சிரித்த மரப்பாச்சி, “பூஜா நீ இன்னும் ஷாலுவின் கேள்விக்குப் பதில் சொல்லவே இல்லையே…? எதுவானாலும் சொல்லு. நான் உனக்கு உதவுகிறேன்” என்று சொன்னது.…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார்நாவல் – 4]

    நடன வகுப்பு முடிந்தது. சுவரில் சாய்ந்து ஓரமாக அமர்ந்திருந்த பூஜாவை அழைத்துக்கொண்டு, மண்டபத்தில் இருந்து வெளியே வந்தாள் ஷாலு. ஷாலுவின் ஷோல்டர் பேக் அவளின் முதுகில் சவாரி செய்தது. மரப்பாச்சி பொம்மையைக் கையில் வைத்திருந்தாள். பூஜாவும் தனது ஸ்கூல் பேக்கை முதுகில் மாட்டி இருந்தாள். மறுகையில் அவளது சாப்பாட்டுக்கூடை இருந்தது. “ஆமா… இன்னிக்கு சுடிதார் போடாமல், ஸ்கூல் யூனிபார்ம்லயே ஏண்டி வந்துட்ட…” என்று கேட்டாள் ஷாலு. “அதுவா… ம்…” என்று சிறிது யோசித்த பூஜா, “ஸ்கூல் வேன்…