Tag: சிறுவர் இலக்கியம்

  • மந்திரச் சந்திப்பு -4

    பகுதி-4 (கொரோனா வைரஸ் பரவுலைத்தடுக்க, மக்கள் எல்லோரையும் வீட்டுக்குள் இருக்கும்படி கூறியதோடு, ஊரடங்கு உத்தரவையும் அரசு பிறப்பித்தது. வெளியே செல்லமுடியாத சோகத்தில் சூர்யா, இருந்தபோது சுண்டைக்காய் இளவரசன் சுந்தரன், அவன் முன் முத்திரள் உருவமாகத் தோன்றினான். வெளியில் செல்ல அனுமதி இல்லாததால், விரும்புகிறவர்களை வீட்டுக்குள்ளேயே அழைத்துவருகிறேன் என்று அவன் தெரிவித்தோடு, சூரியாவின் தங்கை ஷாலினியையும், அவள் விரும்பிய மரப்பாச்சி பொம்மையையும் அதன் தோழி மயிலையும் சந்திக்கவைத்தான். இனி..) ”யாரை சந்திக்க விரும்புகிறாய் மயில்?” “அதுதான் என்ன சொல்லன்னு…

  • மந்திரச் சந்திப்பு- 3

    ஷாலுவின் கண் முன் மரப்பாச்சித் தோன்றியது. வேறு ஆடைகள் அதற்கு அணிவிக்கப்பட்டிருந்தது. ஆடை மாறினாலும் அதனை அடையாளம் காண்பது ஷாலுவிற்கு என்ன கடினமா என்ன? மரப்பாச்சியைப் பார்த்த்துமே அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது, “ஏய்! ஷாலு ஏன் இப்ப அழுரே!” “சாரி இளவரசி, நான், உன்னைய தொலைச்சிட்டேன். இப்ப நீ எங்க இருக்க? எப்படி இருக்க?” “ஹா..ஹா.. இதுக்கா அழுகிறாய். நீ என்னை தொலைக்கவில்லை ஷாலு. நானாகத்தான் உன் கையில் இருந்து நழுவிக்கொண்டு போனேன். இப்போ இங்கே…

  • மந்திரச் சந்திப்பு- 2

    யாரை சந்திக்க விரும்புகிறாயோ அவர்களை இந்த அறைக்குள்ளேயே கொண்டுவருகிறேன் என்று சுண்டைக்காய் இளவரசன் சொன்னதும் முதலில் வியந்துபோனான் சூர்யா. பின் சுதாரித்துக்கொண்டு, யாரை அழைக்கலாம் என்று யோசித்தவனுக்கு ஊரில் இருக்கும் தங்கை ஷாலு நினைவு வந்தாள். (ஆம்! மரப்பாச்சி சொன்ன ரகசியம் கதையில் வந்தே அதே ஷாலினிதான்.) ”என்ன யோசனை செய்தாயிற்றா இல்லையா?” என்று கேட்டான் சுந்தரன். “ம்.. ஊரில் இருக்கும் என் தங்கை ஷாலினியை இங்கே வரவைக்க முடியுமா?” “ஹா..ஹா.. ஏன் முடியாது? நான் சொல்லுகின்றபடி…

  • மந்திரச்சந்திப்பு- 1

    மந்திரச்சந்திப்பு- 1

    1. அந்த அறைக்குள் சுவரில் சரிந்து அமர்ந்திருந்தான் சூர்யா. அவனைச் சுற்றிலும் பல கதைப்புத்தகங்கள் சிதறிக்கிடந்தன. பரிட்சை அட்டையில் செருகிய காகிதத்தில், வாட்டர் கலரில் வரைந்த ஓவியம் ஒன்று மின்விசிறியின் காற்றினால் படபடத்துக்கொண்டிருந்தது. திறந்திருந்த ஜன்னலின் வெளியே நடமாட்டமே இல்லாத தெருவை எவ்வளவு நேரம் தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க முடியும். அப்புறம் படம் வரைந்தான். இந்த புத்தகங்களை எல்லாம் ஏற்கெனவே படித்துவிட்டான். இப்போது சோர்வார் அமர்ந்துவிட்டான். தலையை உயர்த்தி,  à®…றையைச் சுற்றிலும் நோட்டமிட்டன் சூர்யா. எத்தனை முறை…

  • யானை ஏன் முட்டை இடுவதில்லை? சிறுவர் கதை

    கதை படிக்க இங்கே செல்லவும்.யானை ஏன் முட்டை இடுவதில்லை?      யானை ஏன் முட்டை இடுவதில்லை?

  • அரும்புக்கொண்டாட்டம் 2019

      மனித குலத்தின் வரலாற்றில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது என்ற செயலுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. முதன் முதலில் சக்கரத்தைக் கண்டுபிடித்தவர் அதை எப்படிச் செய்வது என்பதை அடுத்த தலைமுறையினரிடம் பகிர்ந்து கொள்ளாமல் போயிருந்தால்.. என்னவாகி இருக்கும்..? இன்று வரை நம் மனித இனத்தின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பாக சக்கரம் மட்டுமே இருந்திருக்கும். ஆம்! மீண்டும் மீண்டும் அதை மட்டுமே ஒவ்வொரு தலைமுறையும் கண்டுபிடித்துக் கொண்டு இருந்திருக்கக்கூடும். ட்ரெட் மில் இயந்திரத்தில் நின்ற இடத்திலேயே நடப்போமே, அப்படியாக…

  • புதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்

    பயணம் பிடிக்காதவர்கள் இருக்கமுடியுமா? அல்லது பயணம் பிடிக்காத குழந்தைகள் இருக்கமுடியுமா? நானறிந்த வரை குதுகுலமாக குழந்தைகள் பயணங்களுக்குத் தயாராகிவிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால்.. ஊட்டிக்குப் போய் மலர்கண்காட்சி பார்ப்பதும், ஆக்ரா போய் தாஜ்மகால் பார்ப்பதும் வயதுவந்தவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு புது இடத்திற்குப் போகிறோம் என்பதே மகிழ்வளிக்கக்கூடியதுதான். தமிழைச் சிரமமின்றி வாசிக்கத்தெரிந்த 10 வயதுக் குழந்தை தொடங்கி, எவரும் வாசித்துவிடக்கூடிய அளவில் எழுதப்பட்டுள்ள கதைதான் ’இருட்டு எனக்குப் பிடிக்கும்’  இச்சிறுவர் நாவலின் ஆசிரியர் ரமேஷ் வைத்யாவுக்கு தனி…

  • காகங்கள் ஏன் கருப்பாச்சு?

    கிச்சா பச்சா என்று இரண்டு காகங்கள், தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம்..? என்ற கேள்விக்கு விடை தேடி பயணப்படுகின்றன. இதுதான் விழியனின் கிச்சா பச்சா நூலின் ஒன் லைனர். மொத்தம் 9 அத்தியாயங்கள் கொண்ட கதை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு விலங்குகளைச் சந்தித்து, தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம் என்ற கேள்விக்கு விடை தேட முயல்கின்றன. விலங்குகள் சொல்லும் எந்தப் பதிலும் இவற்றைச் சமாதானப்படுத்தவில்லை என்பதால் இவற்றின் பயணம் தொடர்கிறது. நமக்கும் சுவாரஸ்யமான கதை கிடைக்கிறது. தொடர்…

  • மதுரைக்கு வந்த வேற்றுக்கிரக வாசிகள்

    ஐந்தாம் வகுப்பில் படிக்கும் அருண் என்ற சிறுவனும், அவனது நண்பர்களும் ஒரு வேற்றுக்கிரக்க வாசியைச் சந்திக்கிறார்கள். அதனுடன் விண்கலத்தில் பயணமாகி, அதன் உலகிற்குச் செல்கின்றனர். அங்கே என்னென்ன பார்த்தார்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதைக் குழந்தைகளுக்கான மொழியில் எளிமையாக எழுதியுள்ளார் நூலாசிரியர் க.சரவணன். மதுரையில் ஒதுக்குப்புறமாகக் குடிசையில் வாழும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் அருண். அவனுடைய நண்பர்களோ வேறு பகுதியில் வசிக்கும் மத்தியதர குடும்பத்தினர். அருண் வீட்டில் மின்சாரம் இல்லை என்பதே நண்பர்களுக்கு பெரும் அதிர்ச்சியான செய்தி. அதோடு அவனுடனேயே…

  • வீரம் விளைந்தது (இளையோர் பதிப்பு)

    வீரம் விளைந்தது (இளையோர் பதிப்பு) நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி – தான் எழுதிய ஒரே புத்தகத்தின் மூலம் உலகம் முழுவதிலும் பிரபலமானவர். அந்த நாவலின் பெயர், ‘வீரம் விளைந்தது’ உலகப்புகழ்பெற்ற ரஷ்ய நாவல் இது. பாவெல் என்ற இளைஞனின் கதை இது. அவனது பிறப்பு, சிறுவயதில் அவன் அடையும் துயரங்கள், பின் ரஷ்ய ராணுவத்தில் அவன் பணியாற்றியபோது செய்த சாகசங்கள் பற்றி எல்லாம் விரிவாக சொல்லப்பட்டிருக்கும்; பின் ஒரு போரில் காயம்பட்டு, படுக்கையில் சாய்கிறான் பாவெல். ஆனாலும் கம்யூனிஸ்ட்…