Tag: சிறுவர் கதை

  • மந்தைரச் சந்திப்பு – 8

    கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, அரசு விதித்த ஊரடங்கினால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எப்படியாவது உதவ முடிந்தால் நன்றாக இருக்கும் என்று நண்பர்களுக்கும் பேச்சு எழுந்தபோது, எல்லோரும் வீட்டுக்குள் இருந்துகொண்டு, வீதியில் கஷ்டப்படும் மக்களுக்கு எப்படி உதவ முடியும் என்ற கேள்வியும் எழுந்தது. தன்னிடம் ஒரு யோசனை இருப்பதாகச் சொன்னது காகிதப்பாப்பா. எல்லோரும் ஆர்வமாக, “என்ன யோசனை?” என்று கேட்டனர். “என்னால் காற்றில் பறக்க முடியும். அதுவும் காற்று அண்ணன் நினைத்தால் எவ்வளவு வேகமாக வேண்டுமானாலும் என்னைக்கொண்டு…

  • மந்திரச் சந்திப்பு- 7

    கிழிந்து போன காகிதப் பாப்பாவை சரி செய்ய என்ன செய்வது என்று எல்லோரும் கலங்கிக் கொண்டிருந்தபோது, அமீர் கொடுத்த ஆலோசனையின் படி, தன் வீட்டில் இருக்கும் முருங்கை மரப்பிசின் டப்பாவை எடுக்க ஓடினாள் மயில். வீட்டின் முன்பக்கம் இருந்த மர நிழலில் நார் கட்டிலைப் போட்டு அதில் அவளது அப்பா படுத்திருந்தார். அம்மவோ, அந்தப்பக்கம் கல் அடுப்பில் வெந்நீர் வைத்துக்கொண்டிருந்தார். வீட்டுக்குள் ஓடிய மயில், காகிதப் பாப்பாவையும் மரப்பாச்சியையும் கீழே வைத்துவிட்டு, அந்த மரப்பிசின் டப்பாவைத் தேடினாள்.…

  • மந்திரச் சந்திப்பு- 6

    காகிதப் பாப்பா சொன்னபடியே, சூர்யாவும் ஷாலுவும் மொட்டைமாடிக்கு வந்துவிட்டனர். மயிலும் குமாரும் வெட்டவெளியில் நின்றனர். மயிலுக்கு ஓர் அடி இடைவெளியில் தரையில் பரப்பப்பட்டிருந்தது காகிதப்பாப்பா. ஆள் நடமாட்டம் இல்லாத அரண்மனையின் உடற்பயிற்சி மைதானத்தில் நின்று கொண்டிருந்தான் சுந்தரன். மெதுவாக காற்று வீசத்தொடங்கியது. தரையில் விரித்துவைக்கப்பட்டிருந்த காகிதப் பாப்பா, இங்குமங்கும் காற்றில் ஆடியது. மெல்ல மெல்ல,, அப்படியே மேலே எழுந்து பறக்கத்தொடங்கியது. அது பறப்பதையே எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இப்போது காற்று சற்றே பலமாக வீசியதுபோல இருந்தது. எல்லோரின்…

  • மந்திரச் சந்திப்பு- 5

    திடீரென குறுக்கிட்ட குரலைக் கேட்டு குழம்பிப்போன சுந்தரன், குரலுக்குச் சொந்தக்காரரை அடையாளம் காட்டும்படி, தனக்கு மந்திரங்கள் கற்பித்த குருவை வேண்டினான். அவரோ, ஒரு பழைய காகிதத்தைக் காட்டினார். காகிதம் எங்காவது பேசுமா என்ன? அதுவும் செய்தித்தாள் போல இருந்தது. சுந்தரன், இம்முறை கண்ணை மூடி, அந்த செய்தித்தாள் எங்கே இருகிறது எனக்கண்டறிய முயன்றான். சூர்யா தொடங்கி, கடைசியாக உரையாடலில் இணைந்துகொண்ட குமார் வரை எல்லோரைச் சுற்றிலும் நோட்டமிடுவதுதான் அவனது திட்டமாக இருந்தது. அப்படி அவன் சூர்யாவிற்கு பின்…

  • மந்திரச் சந்திப்பு -4

    பகுதி-4 (கொரோனா வைரஸ் பரவுலைத்தடுக்க, மக்கள் எல்லோரையும் வீட்டுக்குள் இருக்கும்படி கூறியதோடு, ஊரடங்கு உத்தரவையும் அரசு பிறப்பித்தது. வெளியே செல்லமுடியாத சோகத்தில் சூர்யா, இருந்தபோது சுண்டைக்காய் இளவரசன் சுந்தரன், அவன் முன் முத்திரள் உருவமாகத் தோன்றினான். வெளியில் செல்ல அனுமதி இல்லாததால், விரும்புகிறவர்களை வீட்டுக்குள்ளேயே அழைத்துவருகிறேன் என்று அவன் தெரிவித்தோடு, சூரியாவின் தங்கை ஷாலினியையும், அவள் விரும்பிய மரப்பாச்சி பொம்மையையும் அதன் தோழி மயிலையும் சந்திக்கவைத்தான். இனி..) ”யாரை சந்திக்க விரும்புகிறாய் மயில்?” “அதுதான் என்ன சொல்லன்னு…

  • மந்திரச் சந்திப்பு- 3

    ஷாலுவின் கண் முன் மரப்பாச்சித் தோன்றியது. வேறு ஆடைகள் அதற்கு அணிவிக்கப்பட்டிருந்தது. ஆடை மாறினாலும் அதனை அடையாளம் காண்பது ஷாலுவிற்கு என்ன கடினமா என்ன? மரப்பாச்சியைப் பார்த்த்துமே அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது, “ஏய்! ஷாலு ஏன் இப்ப அழுரே!” “சாரி இளவரசி, நான், உன்னைய தொலைச்சிட்டேன். இப்ப நீ எங்க இருக்க? எப்படி இருக்க?” “ஹா..ஹா.. இதுக்கா அழுகிறாய். நீ என்னை தொலைக்கவில்லை ஷாலு. நானாகத்தான் உன் கையில் இருந்து நழுவிக்கொண்டு போனேன். இப்போ இங்கே…

  • மந்திரச் சந்திப்பு- 2

    யாரை சந்திக்க விரும்புகிறாயோ அவர்களை இந்த அறைக்குள்ளேயே கொண்டுவருகிறேன் என்று சுண்டைக்காய் இளவரசன் சொன்னதும் முதலில் வியந்துபோனான் சூர்யா. பின் சுதாரித்துக்கொண்டு, யாரை அழைக்கலாம் என்று யோசித்தவனுக்கு ஊரில் இருக்கும் தங்கை ஷாலு நினைவு வந்தாள். (ஆம்! மரப்பாச்சி சொன்ன ரகசியம் கதையில் வந்தே அதே ஷாலினிதான்.) ”என்ன யோசனை செய்தாயிற்றா இல்லையா?” என்று கேட்டான் சுந்தரன். “ம்.. ஊரில் இருக்கும் என் தங்கை ஷாலினியை இங்கே வரவைக்க முடியுமா?” “ஹா..ஹா.. ஏன் முடியாது? நான் சொல்லுகின்றபடி…

  • மந்திரச்சந்திப்பு- 1

    மந்திரச்சந்திப்பு- 1

    1. அந்த அறைக்குள் சுவரில் சரிந்து அமர்ந்திருந்தான் சூர்யா. அவனைச் சுற்றிலும் பல கதைப்புத்தகங்கள் சிதறிக்கிடந்தன. பரிட்சை அட்டையில் செருகிய காகிதத்தில், வாட்டர் கலரில் வரைந்த ஓவியம் ஒன்று மின்விசிறியின் காற்றினால் படபடத்துக்கொண்டிருந்தது. திறந்திருந்த ஜன்னலின் வெளியே நடமாட்டமே இல்லாத தெருவை எவ்வளவு நேரம் தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க முடியும். அப்புறம் படம் வரைந்தான். இந்த புத்தகங்களை எல்லாம் ஏற்கெனவே படித்துவிட்டான். இப்போது சோர்வார் அமர்ந்துவிட்டான். தலையை உயர்த்தி,  à®…றையைச் சுற்றிலும் நோட்டமிட்டன் சூர்யா. எத்தனை முறை…

  • யானை ஏன் முட்டை இடுவதில்லை? சிறுவர் கதை

    கதை படிக்க இங்கே செல்லவும்.யானை ஏன் முட்டை இடுவதில்லை?      யானை ஏன் முட்டை இடுவதில்லை?

  • குழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்

    மு. கலைவாணன் இப்பெயரை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழகத்தின் இன்றும் பொம்மலாட்டக் கலையைத் தாங்கிபிடித்து நிற்கும் கலைஞர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவம் சுற்றி வருகிறார். பொம்மலாட்டத்தின் வழி, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்துவரும் இவர், குழந்தைகளுக்காகவும் எழுதிவருகிறார். அப்படி, இவர் எழுதிய சின்னஞ்சிறுக் கதைகள் அடங்கிய 8 நூற்களைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். 32 பக்க அளவுடைய இக்குட்டி நூற்கள் ஒவ்வொன்றும் ரூ.10/. 8 நூற்களும் சேர்த்து ரூ.80/- மட்டுமே!   சின்னச்சின்னக் கதைகள் 1,2 அன்புள்ள குழந்தைகளுக்கு..…