Tag: பதிவர்கள்

  • ஒரு முன்கதைச் சுருக்கம்

    பாடப் புத்தகங்கள், புராண இதிகாசக் கதைகள் தவிர்த்து வேறு ஏதும் படிக்கத் தக்கவையே அல்ல என்று தீவிரமாக நம்பும் பின்புலத்தில் வளர்ந்தாலும் நான் மட்டும் மந்தையிலிருந்து பிரிந்த ஆடாக கதை, கவிதைப்புத்தகங்களில் பொழுதை வீணடிப்பது என் குடும்பத்தினரை ரொம்பவே வருத்தியது. இதனால் நிறைய மனஸ்தாபங்கள். ஒரு கட்டத்தில் மும்பைக்குச் செல்ல வேண்டிய சூழல். சொந்தமண்ணைப் பிரிந்து, மும்பைக்கு போய்ச் சேர்ந்த பிறகுதான் வாழ்க்கையை நேரடியாக உணரத்தொடங்கினேன். அதுநாள் வரையில் நூல்களின் வழியே கற்றுத்தேறிய வாழ்க்கையை நிஜ அனுபவ…

  • ஈரோடு சங்கமம் – எவ்வளவு முடியுமோ அவ்வளவு லேட்டா..

    ஈரோடு சங்கமம் நிகழ்ச்சியில் விருது வழங்க என் பெயரை தேர்வு செய்திருப்பாதாகவும், விழாவில் கலந்துகொள்ள ஒப்புதல் கேட்டும் மின்னஞ்சல் வந்த்தும் கொஞ்சம் மிரண்டு தான் போனேன். சும்மாவே மெல்லுவாய்ங்க.. ஈரோடு ஆட்கள் பக்கோடா கொடுக்கப்பாக்குறாய்ங்களேன்னு தான் முதலில் தோணிச்சு. நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன், எதுக்கும் கொஞ்சம் யோசிக்க அவகாசம் வேணும்னு கேட்டு கதிருக்கு பதில் அனுப்பினேன். அவரோ 24மணி நேரம் கெடு கொடுத்தார். வலை உலகின் மூலம் அறிமுகமாகி, உடன் பிறந்த அண்ணன் போலாகிவிட்ட, மா.சிவக்குமாரிடம்…

  • பஸ்ஸு தொல்லைகள்

    வயது வந்தோர்க்கான எழுத்துக்கள் கோவைக்கு போய் இருந்த போது நண்பரின் வீட்டில் தான் தங்கி இருந்தேன். பகல் முழுக்க வீட்டிலேயே கிடந்தாலும்,இணையம், கணினி என வசதிகள் இருந்த போதிலும் வலைப்பதிவுகளின் பக்கம் வருவதற்கு எனக்கு துணிவு இல்லை. அப்படியே ரீடர் வழி பதிவுகளை படிக்கலாம் என்றாலும் அதற்கும் ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. நண்பரின் வீட்டினர் எவராவது எனக்கு பின்னால் வந்து நின்று நான் படிக்கும் வலைப்பதிவுகளில் (புதிய நண்பர்கள் பலரின் வலைப்பதிவுகளும் இப்படி இருப்பது வேதனை)…

  • சாதனை: தன்னம்பிக்கையும், தமிழும் தந்த வெற்றி! (ஒரு பதிவரின் வெற்றிக் கதை)

    தன்னம்பிக்கையும், லட்சிய வேட்கையும் கொண்ட எவரொருவரையும் வறுமையும், சூழ்நிலையும் அடிமையாக்கி வெற்றிகண்டிட இயலாது என்பதற்கு கார்த்திக் ஒரு உதாரணம். யார் அந்தக் கார்த்திக்? ஐ.ஏ.எஸ். தேர்வில் 4 முறை நேர்முகத் தேர்வுக்குச் சென்று தோல்வியே மிஞ்சிய நிலையில் தொடர்ந்து உறுதியுடன் போராடி, தனது கடைசி வாய்ப்பில் (7-வது வாய்ப்பு) வெற்றி பெற்ற கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர்தான் கார்த்திக். தமிழைப் பேசுவதும், படிப்பதும் இழிவு என்று எண்ணும் இக்காலத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்து வெற்றிக்…

  • விடுபட்டவை 23 August 09

    மிகுந்த மகிழ்சியாக உணர்கிறேன். இன்று வெற்றிகரமாக இலங்கை தமிழ்வலைப்பதிவர்களின் சந்திப்பு மிகச்சிறப்பாக நடந்தேறி இருக்கிறது. சந்திப்புக்கு என உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும், சந்திப்பில் கலந்துகொண்டு, மற்றவர்களின் அறிமுகமும் பெற்று, கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். பதிவர்களின் சந்திப்புகள் தொடந்து நடைபெறட்டும். எழுதுவதோடு மட்டுமல்லாமல்.. பல்வேறு வளர்ச்சிக்கும், நமது ஒற்றுமைக்கும் வழி வகுக்கட்டும் சந்திப்புகள். மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறேன். சந்திப்பின் ஒலிவடிவம் கேட்க.. மதுவதனன் பதிவுக்கு போகலாம். படங்களைக்காண.. வந்தியத்தேவன் மற்றும் ஆதிரை பதிவுக்கு…

  • விடுபட்டவை 17.07.09

    என்னமோ தெரியலை.. என்ன மாயமோ தெரியலை.. நெட்டு பக்கம் வர முடியலை. இணையத்து பக்கம் வரக்கூடாதுன்னு எவனாவது செய்வினை வச்சுட்டான்னு நம்பவும் முடியலை. ஆணி அதிகமாகிப் போனது என்னவோ உண்மை. ரவிசங்கர் மாதிரி பல நண்பர்களுக்கு நிதானமாக மடல் எழுதக்கூட நேரமில்லாமல் இருக்குது. சில நாட்கள் மெயில் பார்க்கவே ரெண்டு நாள் ஆகுவது இன்னும் கொடுமை. 90% எந்திரமாகிவிட்ட எண்ணம் மேலோங்குகிறது. எது பற்றியும் யோசிக்கவே முடியவில்லை. சோம்பேறியான நான் மகா சோம்பேறியா மாறி விட்டதாகவே எண்ணுகிறேன்.…

  • பதிவு (மட்டும்) நீக்கப்படுகிறது.. எச்சரிக்கை தொடர்கிறது!

    என்கடந்த பதிவான பெண்பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை பதிவு நீக்கப்படுகிறது. வலை உலகில் நான் மதிக்கும் பதிவர்களின் ஒருவரான திரு. ஜ்யோவ்ராம் சுந்தர் ஒரு பதிவு போட்டிருந்தார். அவர் பதிவின் மூலமாக அவரைப்போன்றே சிலருக்கும் சங்கடங்கள் ஏற்பட்டிருக்கும் என அறிய முடிகிறது. (அவரும் கூட தொலைபேசியில் பேசி இருக்கலாம்) யாரையும் சங்கடப்படுத்தவோ, தேவையற்ற பீதியைக் கிளப்பவோ எழுதப்பட்ட பதிவு அல்ல அது. ஓர் எச்சரிக்கை மணி அடிக்க விரும்பினேன் அவ்வள்வே!. ”மற்ற பெண் பதிவர்கள் தங்கள் புகைப்படம்,  குடும்ப…