Tag: பால சாகித்ய புரஸ்கார்

  • ஒடிசாவில் பால சாகித்திய புரஸ்கார் விழா

    சாகித்திய அகாடமியின் ‘பால சாகித்திய புரஸ்கார் 2020’ விருது வழங்கும் விழா, ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் வைத்து நடைபெற உள்ளது. இம்மாதம் (நவம்பர்) 14, 15ஆம் நாட்கள் என்று முடிவு செய்துள்ளனர். நிகழ்வில் கலந்துகொள்ள ஒடிசா செல்கிறேன். பருவநிலை ஒத்துழைப்போடு, எவ்வித தடங்கலும் இன்றி பயணம் நிறைவேறவேண்டும் என்பதே இப்போதைய அவா! (அடித்து துவைக்கும் மழை, அன்றைய நாட்களில் கொஞ்சம் ஓய்வெடுக்கவேண்டும்)

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலுக்கு -பாலசாகித்ய புரஸ்கார்

    மரப்பாச்சி சொன்ன ரகசியம் – நான் எழுதிய சிறுவர் நாவல். 2018ஆம் ஆண்டு வெளியானது. குழந்தைகளின் மீது நிகழ்த்தபப்டும் பாலியல் அத்துமீறலை எதிர்த்து குரல்கொடுக்க, பிள்ளைகளை ஊக்கப்படுத்தும் கதைக்களம். பள்ளி விடுமுறையில் பாட்டி வீட்டுக்குச் செல்லும் ஷாலினி என்னும் சிறுமிக்கு ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. அந்த பொம்மை உயிர்பெற்று ஷாலினியோடு பேசுகிறது. அவளின் தோழி பூஜாவுக்கு ஒரு பிரச்னை வரும்போது மரப்பாச்சி பொம்மை அதிலிருந்து விடுபட வழிகாட்டுகிறது. ஓவியர் ராஜனின் அழகான ஓவியங்கள் கதை வாசிப்பை…