Tag: புனைவு

  • கல்யாணியக்கா

    கல்யாணியக்காவின் பதினாறாம் வயதில் என்னை பெற்றெடுத்தாள் அம்மா. பாலூட்டி, குளிப்பாட்டி, சீராட்டி என்னை வளர்த்ததெல்லாம் கல்யாணியக்காதான். விபரம் தெரிந்த நாளிலிருந்தே அப்பா வேலைக்கு போய் பார்த்ததில்லை. அண்ணனும் வீட்டுக்கென பணம் செலவழித்ததில்லை. அதனால் எப்போதும் முணுமுணுப்புகள் அதிகமாகவே இருக்கும் வீட்டில். சம்பள நாளான மாதத்தின் ஏழாம் தேதி அன்று மாத்திரம் அமைதியாக அவளின் வருகையை ஏதிர் நோக்கி காத்திருப்பார்கள் எல்லோரும். தலைகுளித்து வந்ததும், காதோர நரை முடிகளை லாவகமாக மறைக்க முயலும் கல்யாணியக்காவிடம் அம்மா சொன்னாள், நாளைக்கு…